சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு!


கொரோனா தொற்று ஏற்பட்ட சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் தொடர்பில் இலங்கையில் கண்டறியப்பட்டுள்ளது. 

சைலண்ட் ஹைபொக்ஸியா மற்றும் மெ-சிந்தமெடிக் நிமோனியா என்றழைக்கப்படும் இரு நோய்களே இவ்வாறு கண்டறியப்பட்டுள்ளதாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். 

பெரும்பாலும் வயது முதிர்ந்தவர்களிடையே காணப்படும் இந்த நோய் நிலைமை தற்போது கொரோனா பாதிக்கப்பட்ட சிறுவர்களிடமும் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. 

இந்த நோய் நிலைமையினால் உடலிலுள்ள 
ஒட்சிசனின் அளவு மிகவும் குறைந்த மட்டத்திற்கு செல்வதாக தெரிவிக்கப்படுகிறது. 

 
சில வேளைகளில் சுவாசிப்பதற்கு கஷ்டம் இல்லாத சிறுவர்களும் நடமாடும் பொழுது ஒட்சிசன் குறைந்த மட்டத்திற்கு செல்லும். 

மேலும் சாதாரண நிலையில் ஒட்சிசனின் அளவு சாதாரண மட்டத்தில் இருந்த போதிலும் நடமாடும் சந்தர்ப்பத்தில் அதன் அளவு குறையும். இது மோசமான நிலைமையாகும் என குறித்த வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவுக்கு பொறுப்பான விசேட வைத்தியர் நளின் சி கித்துல்வத்த தெரிவித்தார். 

எனவே முடியும் என்றால் ஒரு நாளைக்கு இரண்டு தடவைகள் குருதியிலுள்ள ஒட்சிசனின் அளவை பரிசோதிப்பது சிறந்ததாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.
சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! சிறுவர்களுக்கு ஏற்படும் மேலும் இரு புதிய நோய்கள் இலங்கையில் கண்டுபிடிப்பு! Reviewed by irumbuthirai on August 24, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.