சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்!


அண்மையில் நாட்டில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக 10 மாவட்டங்கள் பாதிக்கப்பட்டன. 
இதுவரை 21 பேர் மரணித்ததுடன் 172000 ற்கும் மேற்பட்டோர் மொத்தமாக பாதிக்கப்பட்டுள்ளனர். 
எனவே இந்த பேரழிவு காரணமாக உயிர் மற்றும் சொத்து இழப்புக்களுக்கு இழப்பீடு பெறுவதில் ஏதேனும் சிக்கல் 
இருப்பின் 117 என்ற இலக்கத்திற்கு அல்லது குறித்த மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவுக்கு அழைப்பு விடுக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
மரணித்த ஒருவருக்கு 250,000 இழப்பீட்டுத் தொகையும், சேதமடைந்த வீடுகளுக்கு ரூபாய் 10 ஆயிரம் முதல் 25 லட்சம் வரையிலான இழப்பீட்டுத் தொகை மதிப்பீட்டு அறிக்கைக்கு அமைய வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்! சீரற்ற காலநிலை: இதுவரை இழப்பீடு பெறாதவர்களுக்கான அறிவித்தல்! Reviewed by irumbuthirai on June 11, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.