அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி:


பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை குறைந்த விலையில் தடையின்றி வழங்க அரசாங்கம் புதுவகையான முயற்சியை மேற்கொண்டுள்ளது. 
இதுதொடர்பாக அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்தை கீழே தருகிறோம். 
தற்போது நிலவும் கொரோனா தொற்று நிலைமையால் பொதுமக்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை சலுகை விலையில் பற்றாக்குறையின்றி விநியோகிக்கும் பொறிமுறையொன்று தற்போது லங்கா சதொச (Lanka Sathosa) நிறுவனம் நடைமுறைப்படுத்தி வருகின்றது. 
குறித்த பொறிமுறையை தொடர்ந்தும் மேற்கொண்டு செல்வதற்கு இயலுமான வகையில் இலங்கை துறைமுக அதிகாரசபை மற்றும் இலங்கை சுங்கத்தால் அரச உடமையாக்கப்பட்ட அத்தியாவசிய உணவுப் பொருட்களை லங்கா சதொச நிறுவனத்திற்கு பெற்றுக் கொடுப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக வர்த்தக அமைச்சரும் துறைமுகங்கள் கப்பல்துறை அமைச்சர் அவர்களும் சமர்ப்பித்த கூட்டாக சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எனவே அந்த வகையில் அரசுடமையாக்கப்பட்ட பொருட்களை சதொச மூலம் இவ்வாறு குறைந்த விலையில் பெற்றுக் கொள்ளக்கூடிய வாய்ப்பு பொதுமக்களுக்கு கிடைத்திருக்கிறது.
அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி: அரசுடமையாக்கப்பட்ட பொருட்கள் மூலம் மக்களுக்கு சலுகை: அரசாங்கத்தின் புதிய முயற்சி: Reviewed by irumbuthirai on June 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.