கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்!


எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 
இதேவேளை கப்பல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது. கப்பலின் வீடியோ தரவு பதிவகத்தையும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுள்ளது. 
இதேவேளை இந்த கப்பல் தீ விபத்துக்குள்ளாகி கடலுக்குள் மூழ்கியதால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதற்கான இழப்பீடுகளை பெற்றுக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (7) நீதி அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்! கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்! Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.