திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு.


கொவிட் 19 பெருந்தொற்று நிலைமைகள் நீடித்தாலும் பரீட்சைகளை நடத்துவது கைவிடப்படமாட்டாது. சகல பரீட்சைகளும் திட்டமிட்டவாறு நடத்தப்படும் என கல்வி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். 
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 தரம் 05 புலமைப் பரிசில் பரீட்சை, கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை என்பன இந்த ஆண்டிலும், கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை அடுத்த வருடம் (2022) ஜனவரி மாதத்திலும் நடத்தப்படும், என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு. திட்டமிட்ட படி சாதாரணதர மற்றும் உயர்தரப் பரீட்சைகள் நடைபெறுமா? அமைச்சரின் அறிவிப்பு. Reviewed by irumbuthirai on June 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.