கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்!

June 07, 2021

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் கடலில் மூழ்கியதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆராய்வதற்காக ஐந்து குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. 
இதேவேளை கப்பல் தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை கப்பலுக்கு பாதுகாப்பு வழங்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடற்படைத் தளபதிக்கு உத்தரவிட்டுள்ளது. கப்பலின் வீடியோ தரவு பதிவகத்தையும் விசாரணைக்காக குற்றப் புலனாய்வு திணைக்களம் பெற்றுள்ளது. 
இதேவேளை இந்த கப்பல் தீ விபத்துக்குள்ளாகி கடலுக்குள் மூழ்கியதால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் அதற்கான இழப்பீடுகளை பெற்றுக் கொள்வது தொடர்பான விசேட கலந்துரையாடல் இன்று (7) நீதி அமைச்சில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்! கப்பலை பாதுகாக்க நீதிமன்றம் உத்தரவு! விசாரணைக்கு 5 குழுக்கள்! Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

வெகுஜன ஊடக அமைச்சில் பதவிக்கான ஆட்சேர்ப்பு:

June 07, 2021

வெகுஜன ஊடக அமைச்சில் நிலவழி தொலைக்காட்சி (Analog) ஒளிபரப்பினை எண்ணியல் (Digital) மயப்படுத்தும் திட்டத்தின் கீழ் பின்வரும் திட்டமிடல் பணிப்பாளர் பதவிக்கான விண்ணம் கோரப்பட்டுள்ளது: 
விண்ணப்ப முடிவு திகதி: 18-06-2021. 
முழுமையான விபரங்களை கீழே காணலாம்.



வெகுஜன ஊடக அமைச்சில் பதவிக்கான ஆட்சேர்ப்பு: வெகுஜன ஊடக அமைச்சில் பதவிக்கான ஆட்சேர்ப்பு: Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

ஒரே உடலில் 32 முறை உருமாறிய கொரோனா!

June 07, 2021

தென் ஆபிரிக்காவைச் சேர்ந்த 36 வயது பெண்ணுக்கு கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 
அவரின் உடலில் 216 நாட்களாக கொரோனா வைரஸ் 32 வகைகளாக உருமாறியுள்ளதாக ஆய்வாளா்கள் கண்டுபிடித்துள்ளனர். இதில் பிரிட்டன், தென் ஆபிரிக்கா வகைகளும் அடங்கும் என தெரிவித்துள்ளனா். 
2006 ஆம் ஆண்டு முதல் HIV-ஆல் பாதிக்கப்பட்டுள்ள குறித்த பெண்ணுக்கு உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மிகவும் குறைவாகக் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஒரே உடலில் 32 முறை உருமாறிய கொரோனா! ஒரே உடலில் 32 முறை உருமாறிய கொரோனா! Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

நாளை (7) முதல் வாகனங்களுக்கு 11 வகையான ஸ்டிக்கர்கள்...

June 07, 2021

அத்தியாவசிய சேவைகளுக்காக பயணிப்பதற்கு நாளை முதல் விஷேட 11 ஸ்டிகர்கள் அறிமுகப்படுத்தவுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். 
பயண கட்டுப்பாடு இருக்கும் வரை இது செல்லுபடியாகும் என அவர் தெரிவித்துள்ளார். 
அதன் விபரங்கள் வருமாறு: 
பச்சை நிறம் - சுகாதார பிரிவினர். 
இளம் நீல நிறம் - முப்படை மற்றும் பொலிஸார். 
ஊதா நிறம் - அத்தியாவசிய சேவைகளை முன்னெடுப்போர். 
இளம் பழுப்பு நிறம் - இறக்குமதி, ஏற்றுமதி, உற்பத்தி மற்றும் தொழிற்சாலை துறைகளைச் சேர்ந்தவர்களுக்கு. 
மஞ்சள் நிறம் - அத்தியவசிய பொருட்கள் விநியோகத்திற்கு. 
செம்மஞ்சள் நிறம் - ஊடக துறையினர். 
வௌ்ளை நிறம் - வௌிநாடுகளுக்கு செல்ல பயணிப்போருக்கு. 
கருப்பு நிறம் - இறுதி சடங்கு, மருத்துவ பரிசோதனை போன்றவற்றிற்கு. 
சாம்பல் நிறம் - உணவுகளை விநியோகிப்பதற்கு.

  • Health Services – Green
  • Tri-Force/Police – Blue
  • Essential items distribution – Red
  • Essential services supplies – Yellow
  • Import/Export – Brown
  • Food delivery – Grey
  • Private sector – Purple
  • Media – Orange
  • Airport travel – White
  • Emergency – Black
நாளை (7) முதல் வாகனங்களுக்கு 11 வகையான ஸ்டிக்கர்கள்... நாளை (7) முதல் வாகனங்களுக்கு 11 வகையான ஸ்டிக்கர்கள்... Reviewed by irumbuthirai on June 07, 2021 Rating: 5

புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளின் நிதிப் பிரயோகம் (சுற்றறிக்கை இணைப்பு)

June 06, 2021

அரசாங்கத்தின் 1000 தேசிய பாடசாலை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளுக்கு வழங்கப்படும் நிதி மற்றும் அவற்றை எவ்வாறு பிரயோகிக்க வேண்டும் என்பன தொடர்பான அறிவுறுத்தல்கள், விளக்கங்கள் தொடர்பான சுற்றறிக்கையை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
குறித்த சுற்றறிக்கையை கீழே காணலாம்.



Join our WhatsApp Groups:



Join our Telegram Channel:


Like our FB Page:



புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளின் நிதிப் பிரயோகம் (சுற்றறிக்கை இணைப்பு) புதிதாக தெரிவு செய்யப்பட்ட தேசிய பாடசாலைகளின் நிதிப் பிரயோகம் (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்!

June 06, 2021

பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள காரணத்தினால் பலருக்கு கட்டணம் செலுத்த முடியாமல் போயுள்ளதால் நீர் கட்டணம் செலுத்துவதற்காக சலுகை காலம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 
அந்தவகையில் அவ்வாறானவர்களுக்கு ஒரு மாத காலம் சலுகை வழங்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்! வழங்கப்பட்டது நீர் கட்டடணத்திற்கான சலுகைக் காலம்! Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு!

June 06, 2021

சுகாதார பிரிவின் ஊடாக பெற்றுக்கொள்ளப்படும் பரிந்துரையை கருத்திற்கொண்டு பாடசாலைகளை திறப்பது தொடர்பில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் பாடசாலைகளை ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார். 
எவ்வாறாயினும் ஜூன் 29 ஆம் திகதி முதல் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரப்பப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! பாடசாலைகளைத் திறப்பது தொடர்பில் கல்வியமைச்சின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்)

June 06, 2021

04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம்.
Official gazette released on 04-06-2021 (In three languages) 
இதில், பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. 
கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
தமிழில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க. 
சிங்களத்தில் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.






Join our WhatsApp Groups:




Join Our Telegram Channel:


Like our FB Page:





04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) 04-06-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) Reviewed by irumbuthirai on June 06, 2021 Rating: 5

இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக...

June 05, 2021

இலங்கையில் கொரோனா ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்று வரையான விபரங்களை சுருக்கமாகத் தருகிறோம். 
அந்த வகையில் இன்று (5/6/2021) இரவு 8:15 வரையான தகவல்களின்படி இலங்கையின் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியுள்ளது.
அதாவது 202,357 ஆக உயர்ந்துள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 166,132. இன்னும் சிகிச்சை பெறுவோர் 34,569. மரணித்தோர் 1656. 
அதேபோல் இதுவரை கொரோனா தடுப்பூசியின் முதல் டோசை பெற்றவர்கள் 1,920,810. இரண்டாவது டோசையும் பெற்றவர்கள் 353894 ஆகும்.
இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக... இலங்கையில் 2 லட்சத்தை தாண்டிய தொற்று: இன்று வரையான விபரங்கள் சுருக்கமாக...  Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு

June 05, 2021

ஐக்கிய இராச்சியத்திற்குள் நுழையும் நாடுகளின் சிவப்பு பட்டியலில் இலங்கை சேர்க்கப்பட்டுள்ளதால் இந்த மாதம் 8 ஆம் திகதி முதல் இலங்கையர்களுக்கு ஐக்கிய இராச்சியத்திற்கு செல்ல அனுமதி வழங்கப்படமாட்டாது என ஶ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தெரிவித்துள்ளது. 
எவ்வாறாயினும் 5, 6, 7 ஆகிய திகதிகளில் லண்டனுக்கு விமானங்களை முன்பதிவு செய்த பயணிகளுக்கு இந்த தடை பொருந்தாது என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு ஐக்கிய இராச்சியத்திற்கு (UK) செல்லவுள்ள பயணிகளுக்கான அறிவிப்பு Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்!

June 05, 2021

கொரோனா தடுப்பூசியிலே, கொவிஷீல்ட் எஸ்ரா செனகா (Astra Zeneca) தடுப்பூசியின் முதல் டோஸ் வழங்கப்பட்டவர்களுக்கு 2வது டோஸாக ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசி வழங்குவது தொடர்பில் அரசாங்கம் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்க வேண்டும் என வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் வைத்தியர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார். 
எஸ்ரா செனகா தடுப்பூசிகளை நாட்டிற்கு கொண்டுவர அரசு பாரிய முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு அதனை பெற முடியாது போனால் ஸ்புட்னிக் V தடுப்பூசியை செலுத்துவது தொடர்பில் பரிசோதனை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! பரிசோதனை தேவை என்கிறது வைத்திய அதிகாரிகள் சங்கம்! Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு

June 05, 2021

ஆங்கில மொழி மூலம் கற்பிக்கும் பாடசாலைகளை மாகாண மட்டத்தில் ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் இது தொடர்பாக ஆராய்வதற்கு என நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
நிபுணர் குழுவின் அறிக்கைக்கு அமைய எதிர்கால நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன. 
இதன் முதல் கட்டமாக நுகெகோட, விஜயராம கல்லூரி ஆங்கில மொழி மூலம் கல்வி கற்கும் பாடசாலையாக மேம்படுத்தப்படவுள்ளன. 
சர்வதேச பாடசாலைகளுக்குச் செல்லும் பெரும்பாலான மாணவர்கள் மாதாந்த கட்டணத்தை 
கூட செலுத்த முடியாமல் நெருக்கடிகளுக்கு உள்ளாகின்றமை உட்பட அவர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு மாகாண மட்டத்தில் ஆங்கில மொழி மூல பாடசாலைகள் - கல்வியமைச்சு Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5

மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா:

June 05, 2021

இன்று (05) உலக சுற்றாடல் தினம் என்பதனால், சகல வீடுகளிலும் இன்று (05) மற்றும் நாளை(06) டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டங்களை மேற்கொள்ளுமாறு சுற்றாடல் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். 
தற்போது நிலவுகின்ற கொரோனோ தொற்று பரவல் நிலைமை காரணமாக, சுற்றாடல் தின நிகழ்வுகள் கொண்டாடப்பட மாட்டாது என்றும் தெரிவித்தார். 
இதேவேளை 5ம் மற்றும் 6ம் திகதிகளில் தமது வீட்டுச் சூழலை சுத்தப்படுத்தும் முறையை வீடியோ செய்து 
சுற்றாடல் அமைச்சுக்கு அனுப்புமாறு பாடசாலை மாணவர்களைக் கேட்டுக் கொள்வதாகவும், இந்த இரு நாட்களிலும் ஒவ்வொரு மணித்தியாலத்திற்கு ஒருமுறை 3 குடும்பங்களை தெரிவுசெய்து தலா ரூ. 5000 வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா: மாணவர்களே வீடியோ அனுப்புங்கள்: சுத்தத்திற்கு பரிசு 5000 ரூபா:  Reviewed by irumbuthirai on June 05, 2021 Rating: 5
Powered by Blogger.