தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!

 

இங்கிலாந்து ஜோன் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழக ஆய்வு கடந்த 04 நாட்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் 12 - 15 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கும் பட்சத்தில் ஏதாவது 
 
ஒரு தாக்க நிலை வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இது போன்ற நிலைமைகளை கருத்திற்கொண்டு மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் இரண்டு முக்கிய தீர்மானங்கள் இன்றைய தினம்(15) எடுக்கப்பட இருப்பதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
அதாவது முன்பள்ளி முதல் தரம் 6 வரையான மாணவர்களுக்கு வழங்குவதா? அல்லது தரம் 12, 13 மாணவர்களுக்கு வழங்குவதா? என்ற தீர்மானம் இன்றைய தினம் எடுக்கப்பட இருப்பதாக தெரிவித்துள்ளார். 
 
சகல நிலைமைகளை ஆராய்ந்து சிறந்த ஒரு தீர்வை எடுக்க வேண்டும் ஆனால் அந்த சிறந்த ஒரு தேர்விலும் பிரச்சினைகள் ஏற்படலாம் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று! தடுப்பூசி வழங்கினால் மாணவர்களுக்கு தாக்கநிலை வருமா? தீர்மானம் இன்று!  Reviewed by Irumbu Thirai News on September 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.