இலங்கையில் செய்யப்படும் மொடர்னா மற்றும் ஸ்புட்னிக் ஆய்வு தொடர்பாக வெளியான தகவல்!

 

ஒவ்வொரு தடுப்பூசிகளும் எந்த அளவு எதிர்ப்பு சக்தியை உருவாக்குகிறது என்ற ஆய்வு இலங்கையிலும் மேற்கொள்ளப்படுகிறது. 
 
அந்த வகையில் மொடர்னா தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டவர்களிடமிருந்து பெறப்பட்ட மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு பரிசோதிக்கப்படுவதாகவும் அது தொடர்பான அறிக்கை எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும் எனவும் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மூலக்கூறு உயிரியல் துறை பிரிவின் பணிப்பாளர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, 
 
மொடர்னா தடுப்பூசி தொடர்பான ஆய்வறிக்கை இறுதிகட்டத்தில் உள்ளது. அது தொடர்பான அறிக்கை எதிர்வரும் வாரத்தில் வெளியிடப்படும். ஸ்புட்னிக் தடுப்பூசி தொடர்பான ஆய்வு அடுத்த மாதம் முதல் வாரத்தில் ஆரம்பிக்கப்படும். 
இது மாத்திரமன்றி டெல்டா திரிபின் உப திரிபுகள் பரவிக் கொண்டிருக்கிறதா என்பது தொடர்பான பரிசோதனைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இலங்கையில் செய்யப்படும் மொடர்னா மற்றும் ஸ்புட்னிக் ஆய்வு தொடர்பாக வெளியான தகவல்! இலங்கையில் செய்யப்படும் மொடர்னா மற்றும் ஸ்புட்னிக் ஆய்வு தொடர்பாக வெளியான தகவல்! Reviewed by Irumbu Thirai News on September 12, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.