பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்:

 

இந்த வருடத்திற்குரிய உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றுக்காக விண்ணப்பிக்க கூடிய கால அவகாசம் நேற்று நள்ளிரவுடன் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார். 
 
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்த போது, 
 
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் மேலும் நீட்டிக்கப்படமாட்டாது. 
 
இதுவரை தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்காக 6,835 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 2,339 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை. மேலும் உயர்தர பரீட்சைக்கு 
 
இதுவரை 2,938 பாடசாலைகள் விண்ணப்பித்துள்ளன. இன்னும் 338 பாடசாலைகள் விண்ணப்பிக்கவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.
பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்: பரீட்சை விண்ணப்பத்திற்கு மேலும் கால அவகாசம் இல்லை: இதுவரை விண்ணப்பித்த விண்ணப்பிக்காத பாடசாலைகள்: Reviewed by Irumbu Thirai News on September 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.