மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம்



சமீபகாலமாக பாடசாலை மாணவர்கள் டெங்கு நோயினால் பாதிக்கப்படும் தன்மை அதிகரித்துள்ளமையினால் டெங்கு நோயிலிருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மேல் மாகாணப் பாடசாலைகளின் மாணவா்கள், பாடசாலைச் சீருடைக்கு மேலதிகமாக உடலுக்கு பொருந்தக்கூடியவாறு வெளிர் நிற ஆடைகளை அணியுமாறு தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு கோாியுள்ளது. 

டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் தலைவர் வைத்தியா் நளின் ஆரியரத்ன இவ்வாறு தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் மேலும் கருத்து தொிவித்த அவா், 

மேல் மாகாணத்திலுள்ள பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு வரும்போது சீருடைக்கு மேலதிகமாக உடலை மறைக்கும் வகையில் வெளிர் நிற ஆடைகளை அணிந்து வெப்பநிலைக்கு ஏற்ற ஆடைகளுடன் வருமாறு நாம் சம்பந்தப்பட்ட பிாிவுகளுக்கு யோசனை முன்வைத்துள்ளோம். 

ஆளுநா், பிரதான செயலாளா், கல்வித்துறை செயலாளா் போன்றோரின் அனுமதியும் இதற்கு வழங்கப்பட்டுள்ளதாக அவர் மேேலும் குறிப்பிட்டுள்ளாா்.


Previous:


மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் மேல் மாகாண பாடசாலை மாணவர்களின் சீருடையில் மாற்றம் Reviewed by Irumbu Thirai News on June 20, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.