அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்!


இலங்கை ஆசிரியர் சங்கத் தலைவர் பிரியந்த பெர்ணான்டோ தலைமையிலான குழுவினர் நேற்று(15) முல்லைத்தீவு - கேப்பாப்புலவு, விமானப்படைத் தளத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்கச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உள்ளிட்டவர்களுக்காக உலர் உணவுப் பொருட்களை வழங்க சென்றுள்ளனர். 
ஆனால் விமானப்படையினர் அவர்களைப் பார்வையிட அனுமதித்திருக்கவில்லை. பின்னர் உலர் உணவுப் பொருட்களை விமானப் படையினர் 
பரிசோதித்து பெற்றுக்கொண்டனர். மேலும் உணவுப்பொருட்களை வழங்கிய ஆசிரியர் சங்கத் தலைவர் தலைமையிலான குழுவினரின் விபரங்களும் விமானப் படையினரால் பெற்றுக்கொள்ளப்பட்டது. 
இதுமாத்திரமன்றி தனிமைப் படுத்தப்பட்டவர்களின் குடும்பத்தவர்களால், அவர்களின் வீட்டில் செய்யப்பட்ட சமைத்த உணவுகளை பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் ஏற்க மறுத்ததுடன், சுகாதார வழிமுறைகளுக்குட்பட்ட உணவுகளை மாத்திரமே வழங்க அனுமதிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்! அனுமதி மறுப்பு: விமானப்படையிடம் பொருட்களைக் கையளித்த ஆசிரியர் சங்கம்! Reviewed by irumbuthirai on July 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.