ஜோசப் ஸ்டாலினை சந்திக்க சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்!


முல்லைத்தீவு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் உட்பட ஏனையவர்களை சந்திக்கவும் அவர்களுக்கு தேவையான அடிப்படை விடயங்களை செய்து கொடுத்து வரவும் இன்று சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் படையினரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர். 
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அடங்கிய இந்தக் குழு 
மாகாண எல்லையைக் கடப்பதற்கான முறையான அனுமதி பெற்றே சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. 
இதேவேளை தனிமைப்படுத்தல் நிலையத்திலுள்ள ஜோசப் ஸ்டாலின் உட்பட ஏனையவர்கள் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிய சட்ட வரைவுக்கு எதிராக அங்கிருந்தும் போராட்டம் நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஜோசப் ஸ்டாலினை சந்திக்க சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்! ஜோசப் ஸ்டாலினை சந்திக்க சென்ற ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தம்! Reviewed by irumbuthirai on July 15, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.