ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல


வெகுஜன ஊடக அமைச்சும் கல்வி அமைச்சும் இணைந்து செயல்படுத்தும் திட்டத்தின் கீழ், இலங்கை ரூபவாஹினி தொலைக்காட்சி சேவையில் கல்விச் சேவைக்கென 20 தனித்தனி அலைவரிசைகளை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
நேற்று முன்தினம் (11) குண்டசாலை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற வைபவத்தின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார். 
தரம் 1 - 13 வரை 13 சனல்களும் பிரிவெனா கல்விக்காக 02 தனித்தனி சனல்களும் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். உலகளாவிய இந்த தொற்று நோய் இன்னும் இரண்டு வருடங்களுக்கு தொடர வாய்ப்புள்ளது. எனவே 
குழந்தைகளின் கல்வியை சீர்குலைக்க அனுமதிக்காமல் அதில் உச்சக்கட்ட அவதானம் செலுத்துவது அரசாங்கத்தின் தலையாய பொறுப்பு. கல்வியின் சரிவு என்பது ஒரு நாட்டின் முதுகெலும்பின் சரிவு எனவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல ஒவ்வொரு வகுப்புக்கும் ஒவ்வொரு சேனல்: பிரிவெனாவுக்கு இரண்டு சேனல்: - கெஹெலிய ரம்புக்வெல்ல   Reviewed by irumbuthirai on July 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.