30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்...


சுமார் 20 - 30 நிமிடங்களில் கொரோனாவை அறியக்கூடிய துரித அன்டிஜென் பரிசோதனைகளை இலங்கையில் இன்று (18) முதல் மேற்கொள்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதற்கான அனுமதியை வழங்கியிருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி விசேட மருத்துவர் சுதத் சமரவீர இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திபில் தெரிவித்தார். 
இன்று முதல் தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு அன்டிஜென் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். பயிற்சியளிக்கப்பட்டவர்கள் இந்த சோதனைகளை மேற்கொள்ளவுள்ளனர். 20 தொடக்கம் 30 நிமிடங்களில் முடிவுகள் தெரியவரும். வைத்தியசாலைகளுக்கு வரும் கொரோனா நோய்க்கான அறிகுறிகளை உடையவர்களையும் சோதனைக்கு உட்படுத்தவுள்ளதாகவும் சுதத் சமரவீர மேலும் தெரிவித்தார்.
30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... 30 நிமிடங்களுக்குள் கொரோனாவை அறியலாம்... இன்று முதல் புதிய முறை அறிமுகம்... Reviewed by irumbuthirai on November 18, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.