பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர்


க.பொ.த. உயர்தர பரீட்சை பெறுபேறுகளை விரைவில் வெளியிட்டு, பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்குவதற்கான வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல் பீரிஸ் தெரிவித்துள்ளார். 
 உயர்தர பரீட்சை நடைபெற்று ஒன்றரை வருடங்களுக்கு பின்னர் தான் பல்கலைக்கழகங்களுக்கு மாணவர்களை உள்வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதுவே கடந்த பல வருடங்களாக தொடர்ந்து வரும் நடைமுறையாகும். இந்த நடைமுறை குறித்து எந்த வகையிலும் திருப்திக் கொள்ள முடியாது. நாம் இதில் ஏற்படும் தாமதத்தை முற்றாக நீக்குவதற்கு முடிந்த வரையில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம். படிப்படியாக இந்த நிலைமையை மாற்றுவதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு தமது உயர்கல்வியை திட்டமிட்ட வகையில் விரைவாக தொடர்வதற்காக இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். 
இன்று காலை கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர் பல்கலைக்கழகங்களில் மாணவர்களை விரைவாக உள்வாங்கும் திட்டம்: - கல்வியமைச்சர் Reviewed by irumbuthirai on November 16, 2020 Rating: 5

No comments:

Powered by Blogger.