வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு


வைரஸை கண்டறிந்து குறுஞ்செய்தி (SMS) அனுப்பும் முகக் கவசத்தை சீன விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவில் கடந்த 2019 ஆம் ஆண்டின் கடைசியில் தோன்றிய கொரோனா வைரஸ் 2 ஆண்டுகளை கடந்தும் இன்னும் முற்றாக ஒழியாமல் உலக மக்களை பாதித்துக் கொண்டிருக்கிறது. 

இந்த கொரோனா வைரஸ் தாக்குதலிலிருந்து மக்களை பாதுகாக்கும் கவசமாக முக கவசம் முக்கிய பங்கு வகிக்கிறது. 

இந்நிலையில் வைரஸ் காற்றில் கலந்திருந்தால் அதை குறுஞ்செய்தி ((SMS) மூலம் அணிந்திருப்பவருக்கு காட்டிக் கொடுக்கும் வகையில் நவீன முக கவசத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். 

சீனாவின் ஷாங்காய் நகரிலுள்ள டோங்ஜி பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த புதிய முக கவசம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

இந்த நவீன முககவசத்தை ஒருவர் அணிந்து கொண்டு வெளியில் செல்லும் போது, அவரைச் சுற்றிலும் இருக்கும் காற்றில் சாதாரண வைரஸ் முதல் கொரோனா வைரஸ் என எந்த வகையான வைரஸ் கலந்திருந்தாலும், அதனை கண்டறிந்து, அணிந்திருப்பவரின் செல்போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக அனுப்பி, முககவசம் அணிந்திருப்பவரை எச்சரிக்கும் வகையில் தொழில்நுட்பம் உருவாக்கப்பட்டுள்ளது. 

இதுபற்றி, முகக் கவசத்தை கண்டுபிடித்த விஞ்ஞானிகளில் ஒருவரான யின் பாங் தெரிவிக்கையில், 
முகக் கவசம் அணிவது நோய் பரவும் அபாயத்தை குறைக்கும் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. எனவே, காற்றில் வைரஸ் இருப்பதைக் கண்டறிந்து, அணிபவரை எச்சரிக்கும் முக கவசத்தை உருவாக்க விரும்பினோம். எங்கள் முக கவசமானது காற்றோட்டம் குறைவாக உள்ள இடங்களில், அதாவது 'லிப்ட்' அல்லது மூடிய அறைகள் போன்றவற்றில் நோய் தொற்று ஏற்படும் அபாயம் அதிகம் உள்ள இடங்களில் நன்றாக வேலை செய்யும்' என தெரிவித்துள்ளார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.


வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு வைரஸை கண்டறிந்து SMSஅனுப்பும் முக கவசம் கண்டுபிடிப்பு Reviewed by Irumbu Thirai News on September 23, 2022 Rating: 5

No comments:

Powered by Blogger.