கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய்


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி 2 - 6 வாரங்களுக்குப் பிறகு குழந்தைகளுக்கு புதிய வகை நோய் ஒன்று வருவதாகவும் குழந்தைகளுக்கு அறியாமலேயே இந்த நோய்க்கு ஆளாகின்றமை என்பது ஒரு மோசமான நிலை எனவும் விஷேட வைத்தியர் நளின் கிதுல்வத்த தெரிவித்துள்ளார். 
காய்ச்சல், வாந்தி, கடுமையான உடல் வலிகள், வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் கண்கள் சிவத்தல் என்பன இந்த நோயின் முக்கிய அறிகுறிகள் என்பதுடன் இது இதயத்தை பாதித்து 
குறைந்த இரத்த அழுத்தம் காரணமாக குழந்தை உயிரிழக்க நேரிடுவது இதன் ஆபத்தான நிலையாகும். 
இதுவரையில் 8 - 15 வயதிற்கு உட்பட்ட 6 குழந்தைகள் இந்த நோய்க்குட்பட்டு கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அவர் மேலும் தெரிவித்தார். 
மேலும் இது 2020 ஏப்ரல் மாதம் இங்கிலாந்தில் கண்டறியப்பட்ட ஒரு புதிய நோய் எனவும் அவர் கூறினார்.
கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய் கொரோனா தொற்றுக்கு உள்ளான குழந்தைகளுக்கு புதிய வகை நோய் Reviewed by irumbuthirai on June 19, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.