தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் புகுந்த கொரோனா! சிங்கத்தின் நிலை...?


கடந்த 2012ஆம் ஆண்டு தென் கொரியாவில் இருந்து தெஹிவளை தேசிய மிருகக் காட்சி சாலைக்கு கொண்டுவரப்பட்ட 'தோர்' என்ற பெயருடைய சிங்கம் கடந்த 3 நாட்களாக நோய்வாய்ப்பட்டிருந்தது. 
 இதற்கு மேற்கொள்ளப்பட்ட ஆரம்ப பரிசோதனைகளுக்கு அமைய சிங்கமானது தொண்டை நோய் மற்றும் இருமல் என்பவற்றால் அவதிப்படுவது கண்டறியப்பட்டது. பின்னர் இதன் சளி மாதிரி பேராதனை கால்நடை மருத்துவ பீடத்திற்கு அனுப்பப்பட்டு பரிசோதித்த போது சிங்கத்திற்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. 
தற்போது இந்த சிங்கத்தோடு இருந்த இன்னும் 05 சிங்கங்களுக்கு பிசிஆர் பரிசோதனை செய்யப்பட இருக்கிறது. மற்றும் இதற்கு பொறுப்பாக இருந்த மூன்று ஊழியர்கள் தனிமைப்படுத்லுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை கடந்த இரு வாரங்களுக்குள் வரிக்குதிரை ஒன்றும் நீர்யானை ஒன்றும் திடீர் சுகவீனத்தால் உயிரிழந்துள்ளன. இதற்கும் காரணம் கொரோனாவாக இருக்கலாம் என தற்போது சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் புகுந்த கொரோனா! சிங்கத்தின் நிலை...? தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்குள் புகுந்த கொரோனா! சிங்கத்தின் நிலை...? Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.