மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம்: P.B.ஜயசுந்தரவை பதவி நீக்க வேண்டும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர்


மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம் கோட்டாபய ராஜபக்ஸவின் அரசாங்கம்தான் என நாரஹேன்பிட்டி அபயாராமய விகாராதிபதி முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார். 
அவர் மேலும் தெரிவிக்கையில், 
காலை முதல் இரவு வரை வீதியில் இறங்கி சத்தமிடுகின்றனர். உண்பதற்கு ஒன்றும் இல்லை. உரம் இல்லை. கடலாமைகள் போன்ற உயிரினங்கள் இறக்கின்றன. இந்த அனைத்து அவலக் குரலுக்கு மத்தியில், வாகனங்களை கொண்டுவர முயற்சிக்கின்றனர். 
எந்தவொரு நபரையும் சுற்றி எட்டப்பன்மார் இருப்பார்கள். இன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் இருக்கும் மிகப்பெரிய எட்டப்பனாக 
கலாநிதி ஜயசுந்தரவை காண்கின்றோம். ஜனாதிபதியின் இந்த விழ்ச்சிக்கு அவரே காரணம். அவரை பதவியில் இருந்து நீக்கி பொருத்தமான ஒருவரை நியமிக்க வேண்டும். இல்லாவிட்டால் எதிர்காலத்தில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை ஏற்பாடு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம்: P.B.ஜயசுந்தரவை பதவி நீக்க வேண்டும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் மிகக் குறுகிய காலத்தில் மக்களின் வரவேற்பை இழந்த அரசாங்கம்: P.B.ஜயசுந்தரவை பதவி நீக்க வேண்டும் - முருத்தெட்டுவே ஆனந்த தேரர் Reviewed by irumbuthirai on June 16, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.