முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்:


முன்பள்ளி ஆசிரியர்கள் தாம் பெற்றுள்ள கடனுக்கான மாதாந்த கட்டணத்தை செலுத்துவதற்கு சலுகைக் காலமொன்றை பெற்றுக் கொடுப்பது சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடன் தான் கலந்துரையாடவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் மேம்பாட்டு, முன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்வி, பாடசாலை அடிப்படை வசதிகள் மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஸாந்த தெரிவித்தார். 
 கடந்த 9ஆம் திகதி அமைச்சில் மாகாண கல்விப் பணிப்பாளர்களுடன் நடைபெற்ற சந்திப்பின் போதே அவர இவ்வாறு குறிப்பிட்டார். 
இந்த சந்திப்பின்போது முன்பள்ளி தேசிய கொள்கை சட்ட வரைவு தொடர்பாகவும் எதிர்காலத்தில் முன்பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்காக முன்னெடுக்கவுள்ள திட்டங்கள் தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.
முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்: முன்பள்ளி ஆசிரியர்களின் கடனுக்கு சலுகைக் காலம்: Reviewed by irumbuthirai on June 13, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.