சேதனப் பசளையை தயாரித்தால் ரூ. 10000 கொடுப்பணவு!


பெரும் போகத்திற்குத் தேவையான சேதன உரங்களை உற்பத்தி செய்து வழங்குவது தொடர்பில் இன்றைய தினம் (18) விவசாய அமைச்சில் இடம்பெற்றது. 
அதில், ஹெக்டயருக்கான (2 1/2 ஏக்கர்) சேதனப் பசளையை உற்பத்தி செய்யும் ஒவ்வொரு விவசாயிக்கும் ரூ. 10,000 பணத்தை செலுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு ஹெக்டயருக்கு 500Kg சேதனப் பசளை, 5Kg தாவர போசணை, 5Kg அமோனியம் அமிலம், 35Kg பொட்டாசியம், 10 லீற்றர் உயிரியல் உரங்களை பயன்படுத்துவற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
இதேவேளை தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களால் உற்பத்தி செய்யப்படும் சேதனப் பசளைகளை எவ்வித சிக்கலுமின்றி அரசு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
சேதனப் பசளையை தயாரித்தால் ரூ. 10000 கொடுப்பணவு! சேதனப் பசளையை தயாரித்தால் ரூ. 10000 கொடுப்பணவு! Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.