பல்கலைக்கழக விண்ணப்பம் எதிர்பார்த்ததை விட அதிகம்: மேலும் கால அவகாசம்: வெளியானது புதிய அறிவிப்பு!


2020/21 ஆம் ஆண்டுக்காக பல்கலைக்கழக அனுமதிக்காக எதிர்பார்க்கப்பட்ட விண்ணப்பங்கள் சுமார் 65,000 ஆகும். ஆனால் இதுவரை ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க கூறியுள்ளார். 
பல்கலைக்கழக அனுமதிக்காக Online மூலம் விண்ணப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் நாளை (18) நள்ளிரவுடன் நிறைவடைகின்றது. பல்கலைக்கழக அனுமதி நடைமுறைகள் தொடர்பிலான ஏனைய விடயங்களை முன்னெடுப்பதற்காகவே, 
Online ஊடாக விண்ணப்பிப்பதை நாளையுடன் நிறைவுக்கு கொண்டு வர தீர்மானிக்கப்பட்டது. 
ஆனால் இதுவரை விண்ணப்பிக்க முடியாத விண்ணப்பதாரர்களுக்கு, பயணக் கட்டுப்பாடு தளர்ப்பட்டதன் பின்னரும் மேலும் சில நாட்கள் கால அவகாசம் வழங்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பது அமரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விண்ணப்பம் எதிர்பார்த்ததை விட அதிகம்: மேலும் கால அவகாசம்: வெளியானது புதிய அறிவிப்பு! பல்கலைக்கழக விண்ணப்பம் எதிர்பார்த்ததை விட அதிகம்: மேலும் கால அவகாசம்: வெளியானது புதிய அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 17, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.