'டெல்டா' வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு!


உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி ஒருவர் டெல்டா வைரஸ் திரிபு தொடர்பான அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளார். 
 அதாவது இந்த 'டெல்டா´ திரிபு கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் 
ஆதிக்கம் செலுத்தும் வைரஸாக மாறி வருவதாக அவர் தெரிவித்துள்ளார். 
இந்தியாவில் முதன் முதலாக கண்டறியப்பட்டது இந்த டெல்டா திரிபு. இது தற்போது உலகின் பல நாடுகளுக்கு பரவி வருகிறது. இங்கிலாந்து திரிபான அல்பாவைவிட இரண்டு மடங்கு வேகத்துடன் பரவக்கூடியது. 
இலங்கையிலும் முதன்முறையாக சமூகத்திலிருந்து இந்த வைரஸ் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
'டெல்டா' வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு! 'டெல்டா' வைரஸ் தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனத்தின் அதிர்ச்சி அறிவிப்பு! Reviewed by irumbuthirai on June 18, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.