அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு


அதிபர் சேவை தரம் - 3 இற்கான ஆட்சேர்ப்பின்போது முறைகேடு இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றமை தொடர்பில் கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெருமவின் கவனத்திற்கு நீரக வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கொண்டு வந்துள்ளார். குறித்த ஆட்சேர்ப்பில் பாதிக்கப்பட்டவர்கள் இன்று (18.12.2019) மாளிகாவத்தையில் அமைந்துள்ள கடற்றொழில் நீரக வள மூலங்கள் அமைச்சி அமைச்சரிடம் இதுகுறித்து முறையிட்டனர். இதன்போதுஇ நாடளாவிய ரீதியில் சுமார் 610 தமிழ்மொழி மூல வெற்றிடங்கள் இருக்கின்ற நிலையில் 

167 பேர் மாத்திரமே உள்வாங்கப்பட்டுள்ளதாவும் மொழிவாரியாக ஆட்சேர்ப்பு இடம்பெற வேண்டும் என்ற ஆட்சேர்ப்பு நியமங்களுக்கு மாறாக ஆட்சேர்ப்பு இடம்பெற்றமையினால் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தெரிவித்தனர். 
(அ.த.தி)
அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு அதிபர் சேவை ஆட்சேர்ப்பில் முறைகேடு? அமைச்சரிடம் முறைப்பாடு Reviewed by irumbuthirai on December 18, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.