பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை:



பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசிலுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ள. இலங்கை பெருந்தோட்ட தொழிலாளர் கல்வி நம்பிக்கை நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்களுக்காக பெருந்தோட்ட தொழிலாளர்களது பிள்ளைகளிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. இந்த புலமைப்பரிசில்கள் 

க.பொ.த. உயர்தரம் , பட்டப்படிப்பு கற்கை நெறிகள் மற்றும் இலங்கையின் ஏதேனும் அரசாங்க தொழில்நுட்ப கல்லூரிகளில் தொழில் அல்லது தொழில் நுட்ப கல்வியை மேற்கொள்ளும் மாணவர்களுக்கானதாகும். க.பொ.த. சாதாரண தரத்தில் குறைந்தது 6 திறமைச் சித்திகளுடன் சித்தியடைந்த அல்லது உயர் தரத்தில் சித்தியடைந்த 25 வயதிற்கு குறைந்தவர்கள் 

இந்த புலமைப்பரிசில்களுக்கு விண்ணப்பிக்க முடியும். இது தொடர்பில் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பிறப்பு சான்றிதழ், க.பொ.த. சாதாரண தரம் அல்லது உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள், பெற்றோர்களது சமீபத்திய சம்பளத்தாள் விபரம் மற்றும் பெற்றோரது வேலை தொடர்பாக தோட்ட அத்தியட்சகரினது அத்தாட்சி என்பவற்றின் நிழற் பிரதிகளுடன் அனுப்பி வைக்கப்படுதல் வேண்டும். விண்ணப்பப் படிவங்கள் இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் www.hcicolombo.gov.in எனும் இணையத்தள முகவரியில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும். அல்லது விண்ணப்பப் படிவங்களை இந்திய உயர் ஸ்தானிகராலயம், 3638, காலி வீதி , கொழும்பு 3 மற்றும் இந்திய பிரதி உயர் ஸ்தானிகராலயம் , இல. 31, ரஜபிகில்ல மாவத்தை , கண்டி ஆகிய இடங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும். முறையாக பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்கள் செயலாளர், CEWET மே/ பா , இந்திய உயர் ஸ்தானிகராலயம் , த.பெ.எண். 882, கொழும்பு 03 என்ற முகவரிக்கு எதிர்வரும் 23 ஆம் திகதி அல்லது அதற்கு முன் அனுப்பவும்.
(அ.த.தி)
பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: பெருந்தோட்ட மாணவர்களுக்கான புலமைப் பரிசில்: விண்ணப்பிக்கும் முறை: Reviewed by irumbuthirai on December 15, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.