மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை



2020 இல் பாடசாலை மாணவர்களுக்கு பாடப் புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கை 95 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக கல்வியமைச்சு தெரிவித்துள்ளது. 2020ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் ஜனவரி மாதம் 2ஆம் திகதி ஆரம்பமாகும் போது


சகல மாணவர்களுக்கும் பாடநூல்களை விநியோகிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளது. எஞ்சிய பாடப்புத்தகங்களை விநியோகிக்கும் நடவடிக்கைகளை துரிதமாக நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாகவும் கல்வியமைச்சின் வெளியீட்டு ஆணையாளர் நாயகம் ஜயந்த விக்ரமநாயக்க தெரிவித்தார். பாடநூல்களை விநியோகிக்கும் நடவடிக்கை சகல மாகாணங்களை உள்ளடங்கிய வகையில் இடம்பெறுகிறது.
ஆயிரத்திற்கும் 500 இற்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கான பாடநூல்களை விநியோகிக்கும் பணி திணைக்களத்தினால் நேரடியாக மேற்கொள்ளப்படவுள்ளதாகவும், ஏனைய பாடசாலைகளுக்கு வலய கல்வி காரியாலங்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
(அ.த.தி)
மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை மாணவர்களுக்கான பாடநூல் விநியோக நடவடிக்கை Reviewed by irumbuthirai on December 17, 2019 Rating: 5

No comments:

Powered by Blogger.