இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:.


வரையறுக்கப்பட்ட சில பணிகளுக்காக மாத்திரம் இன்று (3) முதல் இலங்கையிலுள்ள சகல பிரதான தபால் நிலையங்கள் மற்றும் உப தபால் நிலையங்களையும் திறக்கப்படுகிறது. 
தபால் மாஅதிபர் ரஞ்சித் ஆரியரத்ன அறிக்கை ஒன்றை வெளியிட்டு நேற்று இதனை தெரிவித்தார். 
பொதுமக்கள் உதவிக் கொடுப்பனவுகள், மருந்து விநியோகம் உள்ளிட்ட வரையறுக்கப்பட்ட கடமைகளுக்காக இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் 
தபால் நிலையங்கள் வருபவர்கள், சேவை தொடர்பான உரிய அட்டைகள் அல்லது சிரேஷ்ட பிரஜைகள் அடையாள அட்டையை பாதுகாப்புப் பிரிவினருக்கு காண்பிப்பதன் மூலம் வர முடியுமெனவும் அவர் தெரிவித்தார். 
மேலும் இது தொடர்பில் ஏதேனும் சந்தேகங்கள், விளக்கங்கள் 
தேவையாயின், 1950 எனும் உடனடி தொலைபேசி இலக்கத்தை தொடர்பு கொள்ளுமாறும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:. இன்று முதல் திறக்கப்படும் தபால் நிலையங்கள்: விளக்கம் தேவையாயின் 1950:. Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.