தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்!


தொழில்நுட்ப அம்சங்களின் அடிப்படையில் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில், சமுத்திர சுற்றுச்சூழல் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்ல உடனடியாக 
உத்தரவு பிறப்பிக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். 
நேற்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனர்த்தத்திற்குள்ளான MV X-Press pearl கப்பல் மூழ்கும் அபாயம் இருப்பதாகவும் அப்படி நிகழ்ந்தால், கடல் சூழலுக்கு ஏற்படக்கூடிய சேதத்தை குறைக்க கப்பலை ஆழ்கடலுக்கு கொண்டு செல்வதே மிகவும் பொருத்தமானது என துறைசார் நிபுணர்கள் பரிந்துரை செய்தமைக்கு அமையவே ஜனாதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 
மேலும் இந்த விடயத்தில் எடுக்கப்படும் தீர்மானம், தொழில்நுட்ப விடயங்களின் அடிப்படையில் மட்டுமே இருக்க வேண்டும் என்றும் அரசியல் விடயங்களை அதனுடன் சம்பந்தப்படுத்தக்கூடாது என்றும் ஜனாதிபதி இதன்போது திட்டவட்டமாக கூறியுள்ளார்.
தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்! தீப்பிடித்த கப்பல் தொடர்பில் ஜனாதிபதியின் உத்தரவு! இதில் அரசியல் செய்ய வேண்டாம் எனவும் அறிவுறுத்தல்! Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.