இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்:


தீப்பிடித்த MV X-Press Pearl கப்பல் மூலம் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பை குறைக்கும் வகையில் அதனை உடனடியாக ஆழ்கடலுக்கு இழுத்துச் செல்லுமாறு ஜனாதிபதி நேற்று முன்தினம் (1) உத்தரவிட்டார். 
எனவே கடற்படை மூலம் அதற்குரிய பணிகள் நேற்று நடைபெற்றது. 
ஆனால் குறித்த கப்பலின் பின் பகுதி மூழ்கி வந்த நிலையில், 
அது கடலின் அடியை தட்டி உள்ளதால் அதனை ஆழ்கடலுக்கு எடுத்துச் செல்லும் இழுவை பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை பேச்சாளர் அறிவித்துள்ளார். 
இதன் காரணமாக பாணந்துறை முதல் கொழும்பு ஊடாக கொச்சிக்கடை வரையான கடற் பிராந்தியத்தில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்களுக்கு மீன்பிடித் திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.
இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்: இழுத்துச் செல்லும் போது தரைதட்டிய கப்பல்: மக்களுக்கு விடுக்கப்பட்ட அறிவித்தல்: Reviewed by irumbuthirai on June 03, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.