மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு...


கடந்த மே 25ஆம் திகதி, நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்ட பயணக்கட்டுப்பாடு, மே 31ஆம் திகதி தளர்த்ப்படுமென அறிவிக்கப்பட்ட போதிலும், அது தொடர்ச்சியாக ஜூன் 07ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டிருந்தது. 
தற்போது அந்த பயணக் கட்டுப்பாடு எதிர்வரும் 
ஜூன் 14ஆம் திகதி, திங்கட்கிழமை அதிகாலை 4.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக கொவிட்-19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். 
அதற்கமைய, மே 25 இரவு 11.00 மணி முதல் நாடு முழுவதும் தொடர்ச்சியாக 19 நாட்களுக்கு இப்பயணக் கட்டுப்பாடு தொடரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு... மேலும் நீடிக்கப்பட்டது பயணக் கட்டுப்பாடு... Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.