பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி!


தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி குருணாகலை மேயர் துஷார சஞ்ஜீவ விதாரணவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு 
பொலிஸ் நிலையத்தினுள் அனுமதி அளித்தமைக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்ற பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
இதேவேளை பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
நேற்று (30) இடம்பெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி! பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி! Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.