இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது:


பயணக் தடையால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினையைக் கருத்திற்கொண்டு 5,000 ரூபா நிவாரணக் கொடுப்பனவு வழங்கும் திட்டம் இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படுகிறது. 
கடந்த வருடம் வழங்கப்பட்ட பெயர் பட்டியல் அடிப்படையிலேயே இம்முறையும் வழங்கப்படும் என அமைச்சர் உதய கம்மம்பில தெரிவித்தார். 
இதன் முற்கட்டமாக இன்று முதல் 
சமுர்த்தி பயனாளிகளுக்கு இந்தக் கொடுப்பனவு வழங்கப்படும். அத்துடன், அரசால் வழங்கப்படும் 5,000க்கும் குறைவான கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு, தற்போது அவர்கள் பெறும் தொகையுடன் 5,000 ஈடுசெய்யும் வகையில் எஞ்சிய தொகை மாத்திரமே வழங்கப்படும். இரண்டு கொடுப்பனவும் வழங்கப்படமாட்டாதென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது: இன்று முதல் மீண்டும் 5000 ரூபா: ஆனால் முழுமையாகக் கிடைக்காது: Reviewed by irumbuthirai on June 02, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.