Vacancies: Sri Lanka Savings Bank

November 01, 2020

Vacancies in the Sri Lanka Savings Bank. 
Closing date: 04-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri Lanka Savings Bank Vacancies: Sri Lanka Savings Bank Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

பாராளுமன்றம் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா

November 01, 2020

பாராளுமன்றத்திற்கு சென்ற பிரபல பத்திரிகை ஒன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளருக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதற்கு முன்னர் வேறொரு பத்திரிகையில் கடமையாற்றும் ஊடகவியலாளருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 
இதேவேளை பாராளுமன்றம் இறுதியாக நடந்த இரண்டு தினங்களிலும் கடமைக்குச் சென்ற ஊடகவியலாளர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என அரசாங்கம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா பாராளுமன்றம் சென்ற மற்றுமொரு ஊடகவியலாளருக்கும் கொரோனா Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை...

November 01, 2020

கொரோனா அறிகுறிகள் காரணமாக பொது சுகாதார பரிசோதகர்களால் களுபோவில வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்ட ஹோமாகம, தொலஹேன ஹரித பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணின் 25 வயது கொண்ட 
விசேட தேவையுடைய மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளது. 
இந்த பெண்மணி மஹரகம பிரதேசத்தில் உள்ள மீன் விற்பனை நிலையத்துக்கு சென்று மீனை கொள்வனவு செய்துள்ளார். அந்த விற்பனை நிலையத்தில் சேவையாற்றும் ஊழியர்கள் சிலருக்கும் கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. 
நேற்று முன்தினம் குறித்த பெண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதன்பின் நேற்று காலை இந்த மகன் இறந்து கிடப்பது பிரதேசவாசிகளால் கண்டறியப்பட்டுள்ளது. 
தாயுடன் சேர்த்து பிள்ளையையும் அழைத்துச் சென்றிருந்தால் இந்த மரணத்தை தவிர்த்திருக்கலாம் என பிரதேச வாசிகள் தெரிவிக்கின்றனர்.
- நிவ்ஸ்வய.
கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை... கொரோனா சோகம்: தாய் வைத்தியசாலையில்..... விசேட தேவையுடைய மகன் செய்த வேலை... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை...

November 01, 2020

திவ்லபிடிய கொரோனா எதிரொலியாக 26ம் நாள் அதாவது வெள்ளிக்கிழமை (30) நடைபெற்ற முக்கிய நிகழ்வுகள், அறிவிப்புக்கள் என்பவற்றை இங்கு தருகிறோம். 
  • கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துச் செல்வதன் காரணமாக எதிர்வரும் நாட்கள் மிகுந்த அவதானமிக்கதாக மாறியுள்ளதாக சுகாதார அமைச்சின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் ஜயருவன் பண்டார தெரிவிப்பு. 
  • அவசர நிலைமையின் போது சிறைச்சாலை மருத்துவமனைகளை பயன்படுத்துவது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வளிப்பு இராஜாங்க அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிப்பு. 
  • மின்சார சபையின் நுகர்வோர் ஒருங்கிணைப்பு அதிகாரிகள் சங்கம் பொதுமக்களிடம் சில கோரிக்கைகளை முன்வைத்துள்ளது. அதாவது வீடுகளில் உள்ள மின்சார அளவீட்டு பெட்டியின் மானி தெளிவாக தெரியும்படி வைத்திருக்குமாறும், பட்டியலை வழங்க வரும் மின்மானி வாசிப்பாளர்களிடத்தின் அருகில் செல்லாது மின்சார பட்டியலை பெற்றுக்கொள்ளுமாறும் கோரப்பட்டுள்ளது. 

  • நேற்று (29) நள்ளிரவு முதல் ஊரடங்கு சட்டம் விதிப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து சிலர் பொலிஸ் பொலிஸாரிற்கு அறிவிக்காமல் மாகாணத்தை விட்டு வௌியில் சென்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார். குறித்த நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டத்தின் அடிப்படையில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் திங்கட் கிழமை தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீக்கப்பட்ட பின்னர் கொழும்பிற்கு மீண்டும் வருகையில் வௌியில் சென்ற விதம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 
  • மேல் மாகாணத்தில் காவற்துறை அதிகாரிகள் 43 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்றுறுதியாகியுள்ளது. இதன் காரணமாக மேலும் 893 பேர் தனிமைப்படுத்தல் மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி காவற்துறை மா அதிபர் காரியாலயம் தெரிவிப்பு. 
  • ஊரடங்கு சட்டம் அமுலாகியுள்ள காலப்பகுதியில் விசேட சேவைகளுக்காக கொழும்பு மாவட்டத்தில் 62 எரிபொருள் நிரப்பு நிலையங்களும், கம்பஹா மாவட்டத்தில் 68 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் களுத்துறை மாவட்டத்தில் 27 எரிபொருள் நிரப்பு நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவிப்பு. 
  • கொழும்பு சமுர்த்தி திணைக்களத்தில் சேவையாற்றிய பெண் அதிகாரி ஒருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த அதிகாரியின் கணவர் பேலியகொட மீன் சந்தையில் சேவையாற்றியவர் என தெரிவிக்கப்பட்டது. 
  • குருநாகல் நகர சபை ஊழியர்கள் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதையடுத்து குருணாகல், வில்கொட கிராமம் தனிமைப் படுத்தப்பட்டது. 
  • ஊரடங்கு அமுலில் உள்ள நேரத்தில் கொழும்பிலுள்ள முன்னணி ஹோட்டலில் பிரபல அரசியல்வாதி ஒருவரின் மகனின் திருமணம் இன்று (30) நடைபெற்றது. பின்னர் போலீசார் தலையிட்டு அதை நிறுத்தினர். 
  • இன்று (30) காலை வரையான நிலவரப்படி இலங்கையில் கிளிநொச்சி மாவட்டத்தை தவிர ஏனைய 24 மாவட்டங்களிலும் கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தெரிவிப்பு. 
  • PCR பரிசோதனை என்ற போர்வையில் வீடொன்றுக்கு போலி PHI குழுவினர் வருகை தந்து தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்ற சம்பவம் சம்பவம் நேற்று (29) மாலை மஹவ பிரதேசத்தில் பதிவாகியதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு. 
  • கொரோனா தொற்றினை அறிந்து கொள்ள மேற்கொள்ளப்படும் பீ.சி.ஆர் பரிசோதனைக்கான தரமான கருவிகள் நாட்டில் இல்லாத நிலையில் கொரோனா தொற்றினை சிறந்த முறையில் கட்டுப்படுத்திய ஏனைய நாடுகளிடம் அரசாங்கம் ஏன் உதவி பெறவில்லை என எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி எழுப்பினார். 
  • இன்றைய தினம் 633 பேருக்கு கொவிட் 19 தொற்றுறுதியாகியுள்ளது.
  • Irumbuthirainews
திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை... திவுலபிடிய கொரோனா எதிரொலி: 30-10-2020 நடந்தவை... Reviewed by irumbuthirai on November 01, 2020 Rating: 5

Vacancies: UNIVOTEC (University of Vocational Technology)

October 31, 2020

Vacancies in the UNIVOTEC (University of Vocational Technology) 
Closing date: 16-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: UNIVOTEC (University of Vocational Technology) Vacancies: UNIVOTEC (University of Vocational Technology) Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: National Water Supply & Drainage Board

October 31, 2020

Vacancies in the National Water Supply & Drainage Board. 
Closing date: 09-11-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: National Water Supply & Drainage Board Vacancies: National Water Supply & Drainage Board Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: Lake House

October 31, 2020

Vacancies in the Lake House (The Associated Newspapers of Ceylon Limited) 
Closing date: 7 Working days from 25-10-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.
Vacancies: Lake House Vacancies: Lake House Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: Sri Lanka Telecom.

October 31, 2020

Vacancies in the Sri Lanka Telecom (SLT) 
Closing date: 10 days from 25-10-2020. 
See the details below.
Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri Lanka Telecom. Vacancies: Sri Lanka Telecom. Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

Vacancies: Sri lanka Government Universities

October 31, 2020

Vacancies in the Sri lanka Government Universities. 
See the details below.


Source: Sunday Observer 25-10-2020.

Vacancies: Sri lanka Government Universities Vacancies: Sri lanka Government Universities Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு)

October 31, 2020

கம்பஹா விக்ரமாராச்சி ஆயுர்வேத நிறுவகம் எதிர்வரும் 01-03-2021 முதல் "இலங்கை, கம்பஹா விக்ரமாரச்சி சுதேச மருத்துவ பல்கலைக்கழகம்" என மாற்றப்படுகிறது. 
அந்த அடிப்படையில் இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் உருவாகிறது. 
இது தொடர்பாக வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) இலங்கைக்கு மற்றுமொரு அரச பல்கலைக்கழகம் (விஷேட வர்த்தமானி இணைப்பு) Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றம் (Mutual Transfer) Online முறையில்... கல்வியமைச்சு நடவடிக்கை...

October 31, 2020

ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றத்திற்கான (ஒத்துமாறல்) விண்ணப்பம் ஒன்றை Online முறையில் கல்வியமைச்சு அறிமுகம் செய்துள்ளது. 
ஆசிரியர்களின் இடமாற்றத்தை இலகுபடுத்தும் 
நோக்கில் கல்வியமைச்சு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.  
NEMIS ற்குரிய Username மற்றும் Password ஐப் பயன்படுத்தி இத்தளத்தில் நுழைந்து விவரங்களை பதிவிடலாம். 
கீழுள்ள லிங்கை பயன்படுத்தி உரிய விண்ணப்பத்திற்கு செல்க. 
ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றம் (Mutual Transfer) Online முறையில்... கல்வியமைச்சு நடவடிக்கை... ஆசிரியர்களின் பரஸ்பர இடமாற்றம் (Mutual Transfer) Online முறையில்... கல்வியமைச்சு நடவடிக்கை...  Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

10,000 ஐக் கடந்து சென்ற இலங்கை

October 31, 2020

இலங்கையில் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை நேற்றைய தினம் பத்தாயிரத்தை கடந்தது. 
அதாவது நேற்று (30-10-2020) இரவு 9.55 வரையான நிலவரப்படி இலங்கையின் மொத்த கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 10,424 ஆக காணப்பட்டது. 
நேற்றைய தினம் மாத்திரம் 633 நோயாளர்கள் இனங்காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
10,000 ஐக் கடந்து சென்ற இலங்கை 10,000 ஐக் கடந்து சென்ற இலங்கை Reviewed by irumbuthirai on October 31, 2020 Rating: 5

பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்...

October 30, 2020

#பிரான்சில் கோவிட்-19 ஐ மிஞ்சிய இஸ்லாமோபோபியா
கோவிட் 19 இன் தாக்கம் ஐரோப்பாவில் மோசமாக பரவ ஆரம்பித்துள்ளது. குறிப்பாக எதிர்நோக்கியிருக்கும் குளிர் காலத்தில் இது உச்சமடையலாம் என்று எதிர்வு கூறப்பட்டு வரும் நிலையில் ஐரோப்பாவில் தற்போது மோசமாக கோவிட் 19 தாக்கம் உள்ள பிரான்ஸ் அநாவசியமான இராஜதந்திர சிக்கல் ஒன்றிற்குள் தள்ளப்பட்டுள்ளது. 
சில தினங்களுக்கு முன்னர் பிரன்சிய கேலிச்சித்திர பத்திரிகை ஒன்று இஸ்லாமியர்கள் உயிரினும் மேலாக அன்பு வைத்துள்ள இறைத்தூதர் முஹம்மத் (அவர் மீது சாந்தி உண்டாகட்டும்) இன் கேலிச்சித்திரங்களை வெளியிட்டது. அதனைத் தொடர்ந்து அந்த கேலிச்சித்திரங்களை வைத்து கல்லூரி ஒன்றில் பாடம் நடத்தியுள்ளார் ஒரு பேராசிரியர். அந்த வகுப்பில் உள்ள முஸ்லீம் மாணவர்களை மிக இழிவுபடுத்தி பேசியும் உள்ளார். தொடர்ந்து அவர் மர்மமான முறையில் கொல்லப்பட்டார்.

#இஸ்லாமோபோபிய பிடித்த பிரான்சிய அதிபர்
குறித்த நிகழ்வுகளை தொடர்ந்து பிரன்சிய அதிபர் இமானுவேல் மக்ரோன் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பூட்டும் பல கருத்துக்களை பகிரங்கமாக ஊடகங்களில் தெரிவித்திருந்தார். 
முஸ்லிம்களாக பிரான்சின் பிரிவினைவாதிகள் என்றும், மத சகிப்புத் தன்மையற்றவர்கள் என்றும் மிக மோசமாக அவரது வார்த்தைகள் பிரயோகிக்கப்பட்டிருந்தன. 
 
#முஸ்லீம் நாடுகளில் எதிர்வினை
அதன் தொடர்ச்சியாக முஸ்லீம் நாடுகளில் பிரான்ஸ் மீது கடும் எதிர்ப்பு அலை உருவாக ஆரம்பித்தது. துருக்கி பிரான்ஸிற்கான தனது தூதரை திருப்பி அழைத்து தூதரக உறவுகளை முறித்துக் கொண்டதுடன் பிரான்சிய அதிபர் இமானுவேல் மக்ரோன் ஐ மிகக்கடுமையான விமர்சித்தார் துருக்கி அதிபர் எர்டோகான். 
அத்துடன் தன்னுடைய உரையில் 
பிரான்சிய பொருட்களை புறக்கணிக்குமாறு முஸ்லீம் உலகிடம் பகிரங்க வேண்டுகோளை விடுத்தும் உள்ளார். பிரான்சிய அதிபரும் இதற்கு பதிலடி கொடுக்க விவகாரம் தீவிரமடைய ஆரம்பித்தது. 
குறிப்பாக மத்திய கிழக்கின் முஸ்லீம் நாடுகளில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் பிரான்சிய பொருட்களை அகற்ற ஆரம்பித்தன நிர்வாகங்கள். இந்த அலை மத்திய கிழக்கை தாண்டி பாக்கிஸ்தான், பங்களாதேஷ், மலேஷியா என முழு முஸ்லீம் உலகிலும் பரவ ஆரம்பித்த போது பிரான்ஸ் "பொருள் புறக்கணிப்பை கைவிட அரசுகள் மக்களிடம் கோர வேண்டும்" என்று கோரிக்கை விடுத்திருந்தது. எனினும் விடயம் இன்னும் தீவிரமானதே தவிர குறையவில்லை. 

#இஸ்லாத்தை ஏற்ற பிரான்சிய பணயக் கைதி
ஏன் திடீர் என்று இவ்வாறான சிக்கல் ஒன்றில் பிரான்ஸ் வலிந்து சிக்கியது என்பது ஒன்றும் புதிரல்ல. 
மாலி என்பது ஒரு ஆப்பிரிக்க நாடு. ஒரு காலத்தில் அது பிரான்சின் காலனித்துவ நாடாக இருந்தது. சுதந்திரம் அடைந்த பின்னரும் அதன் வளங்களை உறிஞ்சும் அட்டையாகவே பிரான்ஸ் இருந்து வந்தது. மாலியில் உருவான இஸ்லாமியவாத கிளர்ச்சி ஆயுதக் குழுக்கள் இதற்கு தடையாக இருந்தன. 
இவ்வாறான சூழலில் பிரான்சிய பெண் ஒருவர் மாலி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்படுகிறார். 4 ஆண்டுகள் பணயக் கைதியாக இருந்த அவர் சில நாட்களுக்கு முன்னர் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை பெற்று பிரான்ஸ் வந்த அவர் கோலாகலமாக வரவேற்கப்பட்டதுடன், அந்த நிகழ்வின் பின் இஸ்லாம் மதத்திற்கு தாம் மாறுவதாக அந்தப் பெண் தெரிவித்தார். இது பிரான்சில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 
அவர் பிரான்ஸ் ஜனாதிபதிக்கு அனுப்பியதாக சொல்லப்படும் கடிதம் ஒன்று மிக அவதானத்தை ஈர்த்தது. இந்தப் பின்னணியிலேயே கார்டூன் விவகாரம் பூதாகரமாக மாற்றப்படுகிறது. 

#கேலிச்சித்திரமான எர்டோகான்
இதன் அடுத்த கட்டமாக நேற்றைய தினம் துருக்கிய அதிபர் எர்டோகான் ஐ இழிவுபடுத்தும் கேலிச்சித்திரம் ஒன்றை அதே பத்திரிகை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக நாட்டுத் தலைவர்களை வெளிநாட்டு ஊடகங்கள் கேலிச்சித்திரங்களாக வரைவதை நாகரிகமான செயலாக கருத முடியாது. உள்நாட்டில் அரசியல் போட்டியில் அவை வரையப்பட்ட போதிலும் வெளிநாடுகளில் அவ்வாறு வரைவதையும் அதற்கு ஆட்சியாளர்கள் முட்டுக் கொடுப்பதையும் எங்கும் காண முடியாது என்ற போதிலும் பிரான்சிய ஆட்சியாளர்கள் கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில் அதனை சரி கண்டுள்ளனர். 
இதன் விளைவாக துருக்கி கொதித்துப் போயுள்ளது. இது சில வேளை துருக்கியில் உள்ள ஐரோப்பிய முதலீடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்றும் அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
துருக்கி நேட்டோவில் அங்கம் வகிக்கும் ஒரு நாடாகும். பொருளாதார ரீதியான நலிந்து போய் ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்பட்ட தேசம், இன்று ஐரோப்பாவின் மிக வேகமாக வளரும் பொருளாதாரத்தையுடைய நாடாக மாறியுள்ளது. இதனால் 
பல ஐரோப்பிய நாடுகளின் முதலீடுகள் துருக்கியில் உள்ளன. 
அதேநேரம் அண்மையில் மத்திய தரைக்கடலில் கண்டு பிடிக்கப்பட்ட மிகப் பெரும் இயற்கை வாயுப் படுக்கையின் உரிமை தொடர்பில் ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், சைப்ரஸ் போன்றவற்றோடு துருக்கி முரண்பாடுகளை கொண்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. 

#பிரான்சில் வெடித்த குண்டு
இந்த பின்னணியில் நேற்றைய தினம் பிரான்சின் நகரொன்றில் குண்டு ஒன்று வெடித்தத்தில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 
இது ஒரு பயங்கரவாத நடவடிக்கையே என்று பிரான்சின் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். இஸ்லாமிய வெறுப்பு செயற்பாடுகளின் பின்விளைவு இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாத செயற்பாடுகளே என்பதை பிரான்ஸ் போன்ற ஒரு பலம்மிக்க இராணுவக் கட்டமைப்பைக் கொண்ட நாட்டின் கொள்கை வகுப்பாளர்கள் விளங்காதிருக்க மாட்டார்கள். எனவே, பிரான்ஸ் வேறு ஏதோ ஒன்றை நிறைவேற்றிக் கொள்ள முயல்கிறது என்பது தெளிவாக விளங்குகிறது. 
-  fபயாஸ் MA f பரீட்.
பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்... பிரான்சின் இஸ்லாமிய வெறுப்பூட்டலும் கொதித்துப் போன இஸ்லாமிய உலகமும்... Reviewed by irumbuthirai on October 30, 2020 Rating: 5
Powered by Blogger.