கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு:

June 26, 2021

இந்தியாவில் உருமாற்றம் அடைந்து உருவான கொரோனா வைரஸ் திரிபே ‘டெல்டா' எனப்படுகிறது. 2வது அலையில் பல இலட்சம் பேரை இது கொன்றுள்ளது. இந்த வைரஸ் தற்போது மேலும் உருமாற்றம் அடைந்து, அதை விட வீரியமிக்கதாக உருவாகி தாக்கத் தொடங்கியுள்ளது. இதற்கு, ‘டெல்டா பிளஸ்’ என பெயரிடப்பட்டு உள்ளது. 
 இந்நிலையில், மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைன் மாவட்டத்தில் கொரோனாவால் மரணமான பெண்ணின் மீது நடத்தப்பட்ட மரபணு பரிசோதனையில் அவருக்கு டெல்டா பிளஸ் வைரஸ் தாக்கி இருப்பது உறுதியாகி இருக்கிறது. எனவே டெல்டா ப்ளஸ் காரணமாக இடம்பெற்ற முதலாவது மரணமாக இது பார்க்கப்படுகிறது.
கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு: கண்டுபிடிக்கப்பட்டது 'டெல்டா பிளஸ்' வைரஸ்: முதலாவது மரணமும் பதிவு: Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!

June 26, 2021
முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளருமான பசில் ராஜபக்ஷவிற்காக தமது ஆசனங்களை விட்டுக்கொடுக்க நான்கு பேர் தயாராக உள்ளதாக கட்சியின் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. 
அந்த வகையில் கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம், ஜயந்த கெட்டகொட, 
மர்ஜான் பளீல், பேராசிரியர் ரஞ்சித் பண்டார ஆகியோரே இவ்வாறு தயாராக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. 
எனவே எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பாராளுமன்ற அமர்வு வாரத்தின் போது பசில் ராஜபக்ஷ பதவி பிரமாணம் செய்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்! பசிலுக்காக ஆசனங்களை விட்டுக்கொடுக்க தயாராகும் 04 பேர்!  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா?

June 26, 2021

இலங்கையிலுள்ள வெளவால்கள் மூலம் மனிதர்களுக்கு பரவக் கூடிய வைரஸ் தொடர்பில் இலங்கையில் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 
கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனம் இணைந்து இந்த ஆய்வை நடத்தின. இதற்காக கொஸ்லந்தை பிரதேசத்திலமைந்துள்ள வெளவால் குகையை அடிப்படையாக கொண்டு இந்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஆய்வுக்குழு உறுப்பினரான கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் ஜேர்மனியின் ரொபர்ட் கோக் நிறுவனத்தின் பேராசிரியரான தேஜானி பெரேரா தெரிவித்துள்ளார். 
இந்த ஆராய்ச்சியின்போது மனிதர்களுக்கு பரவும் எல்பா மற்றும் பீட்டா ஆகிய கொவிட்19 மாறுபாடுகள் கொண்ட 
இரண்டு வகை விசேட வெளவால்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
இவ்வாறு அடையாளம் காணப்பட்ட எல்பா மற்றும் பீட்டா கொவிட்19 வைரஸ் மாறுபாடு தற்போது பல நாடுகளில் பரவும் பிரிட்டன் எல்பா அல்லது தென்னாப்பிரிக்காவின் பீட்டாவின் துணை வகைகள் அல்ல. ஆனால் இவை கொவிட்19 வைரஸின் நான்கு முதன்மை மாறுபாடுகளில் இரண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது. 
இந்த மாறுபாடுகள் மனிதர்களின் உடலில் பரவி கொவிட் 19 வைரஸ் வரை கொண்டு செல்லுமா? என்பது இதுவரையில் உறுதி செய்யப்படவில்லை. ஆனாலும் மக்கள் வௌவால்களுக்கு ஆபத்துக்களை ஏற்படுத்த வேண்டாமென பேராசிரியர் தேஜானி பெரேரா கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? இலங்கையில் வெளவால்களுக்கு கொரோனா! நீடித்த மர்மங்களுக்கு விடை கிடைக்குமா? Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:

June 26, 2021

60 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு கொவிட் தடுப்பூசியினை பெற்றுக் கொடுக்கும் வேலைத்திட்டம் எதிர்வரும் திங்கட் கிழமை முதல் விரைவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதற்காக அனைத்து பிரதான வைத்தியசாலைகளிலும் தடுப்பூசி மத்திய நிலையம் ஒன்றை ஆரம்பிக்க உள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார். மேலும் இது தினசரி மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம். இதற்காக அடையாள அட்டை மட்டுமே தேவைப்படுகிறது. நாம் விண்ணப்ப படிவம் ஒன்றை வௌியிட்டுள்ளோம். குறித்த விண்ணப்ப படிவத்தை வீட்டிலேயே நிரப்பி வந்தால் தடுப்பூசியை மிக விரைவாக பெற்றுக்கொடுக்க முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.
அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்: அடையாள அட்டையை மாத்திரம் கொண்டு வாருங்கள்: 60 வயதிற்கு மேற்பட்டோருக்கான அறிவித்தல்:  Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு)

June 26, 2021

வீட்டில் மரணிப்போர் தொடர்பில் புதிய நடைமுறைகள் அடங்கிய சுற்றுநிறுபம் ஒன்றை நேற்றைய தினம் (25/6/2021) சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. 
இதன் பிரகாரம், 
வீட்டில் ஏற்படும் திடீர் மரணங்களை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் அந்த மரணங்களை முன்னர் போன்று நல்லடக்கம் செய்யும் அனுமதியை, அந்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் மற்றும் மரணப் பரிசோதகர் ஆகிய இருவரும் இணைந்து மரணச் சான்றிதழ் வழங்க முடியும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. 
குறித்த சுற்று நிருபத்தை கீழே காணலாம்.


வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) வீட்டில் மரணிப்போர் தொடர்பில் வெளியானது சுற்றுநிருபம்: இலகுவாக்கப்பட்டது அடக்கம் செய்யும் நடைமுறை: (சுற்றறிக்கை இணைப்பு) Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது!

June 26, 2021

தேசிய அபாயகர மருந்துகள் கட்டுப்பாட்டு சபை மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் நாட்டில் சுமார் நான்கரை மில்லியன் (45 இலட்சம்) மக்கள் ஹெரோயின் மற்றும் கஞ்சாவைப் பயன்படுத்துவதாக தெரிய வந்துள்ளது. 
இன்று (26) சர்வதேச போதைப்பொருள் ஒழிப்பு தினம் ஆகும். இதற்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுக்க குறித்த சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! நாட்டில் ஹெரோயின் மற்றும் கஞ்சா பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெளியானது! Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை):

June 26, 2021

தற்காலிக இடமாற்றம் பெற்றுள்ள தேசிய பாடசாலை ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை வெளியிட்டுள்ளது. 
 அதாவது மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் போது தமது தற்காலிக இடமாற்ற காலம் முடிவடைந்திருந்தால் அவர்கள் 
தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலைக்கே சமூகமளித்தல் வேண்டும். 
இதேவேளை தற்காலிக இடமாற்ற காலத்தை மேலும் நீடிக்க விரும்பும் ஆசிரியர்கள் பாடசாலை மீள ஆரம்பித்ததும் தமது நிரந்தர கடமையாற்றும் பாடசாலை அதிபர் மூலமாக உரிய விண்ணப்பத்தை 'கல்விப் பணிப்பாளர் (ஆசிரியர் இடமாற்றம்) / Director of Education (Teacher Transfer) ற்கு அனுப்ப வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை): தற்காலிக இடமாற்றம் (Attachment Transfer) பெற்ற ஆசிரியர்களுக்கான அறிவித்தல் (தேசிய பாடசாலை): Reviewed by irumbuthirai on June 26, 2021 Rating: 5

இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம்

June 25, 2021

ஈ - தக்சலாவ (e-thakshalawa) வேலைத்திட்டத்தின் கீழ் எல்.எம்.எஸ் (Learning Management System - L.M.S) முறை மூலம் பாடசாலை மாணவர்களுக்கு நிகழ்நிலைக் (Online) கல்வியை வழங்குவதற்கான திட்டம் இன்று ஆரம்பமாகின்றது. 
 உத்தேச இத்திட்டத்தின் முதற்கட்டமாக 20 பாடசாலைகளில் ஆரம்பமாகி, எதிர்காலத்தில் 200 பாடசாலைகளுக்கு விரிவுபடுத்தப்படும். 
 Online முறையின் கீழ் கிராமப்புற பாடசாலைகளின் மாணவர்களுக்கு உயர்தரமான கல்வியை வழங்குவதே இதன் நோக்கமாகும். அத்துடன், வீடியோ (காணொலி) தொழில்நுட்பத்தின் கீழ் ஒன்லைன் கல்வியை இலவசமாக வழங்கும் திட்டமும் ஈ - தக்சலாவ வேலைத்திட்டத்தின் கீழ் இந்த மாதத்திலிருந்து ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. (Source: அரசாங்க தகவல் திணைக்களம்)
இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் இன்று முதல் LMS முறை மூலம் மாணவர்களுக்கு ஒன்லைன் கல்வித் திட்டம் Reviewed by irumbuthirai on June 25, 2021 Rating: 5

பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு)

June 25, 2021

மேற்படி போட்டிப் பரீட்சையின் விண்ணப்ப முடிவு திகதி 15-07-2021 வரை நீடிக்கப்பட்டுள்ளது. 
நுண்ணறிவு பரீட்சை, பொது அறிவு ஆகிய பாடங்கள். 
ஒவ்வொரு பாடத்திலும் தலா 40% புள்ளிகளை குறைந்தது பெற்றிருத்தல் வேண்டும். 
வயதெல்லை: 18-40. 
அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு) பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்வதற்கான போட்டிப்பரீட்சை (மேல் மாகாணம்) - 2021/2022. (விண்ணப்பம் மற்றும் அறிவுறுத்தல்கள் மும்மொழிகளிலும் இணைப்பு) Reviewed by irumbuthirai on June 25, 2021 Rating: 5

G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும்

June 24, 2021

கடந்த வருடம் (2020) நடைபெற்ற உயர்தர பரீட்சை பெறுபேறுகளின் மீளாய்விற்கான விண்ணப்பங்கள் பரீட்சை திணைக்களத்தால் கோரப்பட்டுள்ளன. 
மீளாய்வின் போது குறித்த விடைத்தாள் பரிசீலனைக் குழுவின் உறுப்பினர்கள் பலரால் முழுமையாக பரிசீலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை Online மூலம் மாத்திரமே சமர்ப்பிக்கலாம். 
அதிபரின் கையொப்பமோ சான்றுப்படுத்தலோ அவசியமில்லை. 
ஒரு பாடத்திற்குரிய கட்டணம் 250 ரூபாய். 
தபால் அலுவலகம் / Credit Card / Debit Card ஏதாவது ஒரு முறையில் செலுத்தலாம். 
பணத்தை செலுத்தியதும் தொலைபேசிக்கு SMS செய்தி கிடைக்கும். அதன்பின்னர் விண்ணப்பத்தை PDF முறையில் பதிவிறக்கம் செய்யலாம். 
பொது சாதாரண பரீட்சையில் 30 புள்ளிகளை விட குறைவாக பெற்றோர்களும் அந்த படத்திற்காக மீளாய்வுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப 
முடிவுத் திகதி: 10-07-2021. 
அறிவுறுத்தல்களை மும்மொழிகளிலும் பார்வையிட கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்க. 
Online விண்ணப்பத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும் G.C.E. (A/L) - 2020 Re Correction (Online Application) / உ.தர பெறுபேறு மீளாய்வு: விடைத்தாள் முழுமையாக பரிசீலிக்கப்படும் Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம்

June 24, 2021

அண்மையில் அரச சேவைக்கு இணைத்துக் கொள்ளப்பட்ட பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்துக்கொள்ளும் நடவடிக்கைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
அந்தவகையில் 
18 ஆயிரம் பட்டதாரி பயிலுனர்களை நாட்டிலுள்ள பின்தங்கிய பிரதேச பாடசாலைகளுக்கு நியமிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 
ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கிணங்க கல்வி அமைச்சினால் முன்வைக்கப்பட்ட இந்த அமைச்சரவை யோசனைக்கே அனுமதி கிடைத்துள்ளது.
பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம் பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர்களாக நியமனம் Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்:

June 24, 2021

09.08.2021 முதல் அமுலுக்கு வரும் வகையில் இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியான பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் உப வேந்தராக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார். 
தென்கிழக்கு பல்கலைக்கழகத்திலேயே படித்த ஒருவர் அதற்கு உபவேந்தராக வரும் முதல் சந்தர்ப்பம் இதுவாகும். இது மாத்திரமன்றி 43 வயதான றமீஸ் அபூபக்கர் இலங்கை பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 
சாய்ந்தமருதை பிறப்பிடமாகக் கொண்ட இவர், மிஸ்கீன் பாவா அபூபக்கர் மற்றும் உதுமான்கண்டு வதவியத்தும்மா ஆகியோரின் 3வது பிள்ளையாவார். 
இவர் கடந்து வந்த முக்கிய தடங்கள் வருமாறு:
2005- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் தற்காலிக விரிவுரையாளராக இணைந்தார். 
2006- சமூகவியல் துறை நிரந்தர விரிவுரையாளராக நியமனம். 
2010- சமூகவியல் முதுதத்துவமானி பட்டம் (பேராதனைப் பல்கலைக்கழகம்) 
2010- முரண்பாடு மற்றும் சமாதானம் தொடர்பான பட்டப்பின் படிப்பு (இங்கிலாந்து பிரட்போர்டு பல்கலைக்கழகம்) 
2011- சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 2 பதவி உயர்வு. 
2017- சிரேஷ்ட விரிவுரையாளர் தரம் 1க்கு பதவி உயர்வு. 
2017- தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பிரிவின் முதலாவது தலைவராக நியமனம். 
2019- தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு. 
2019- தென் கிழக்கு தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் வருடத்திற்கான சிறந்த ஆய்வாளர் விருது. 
2019- கெய்சிட் எனப்படும் வியன்னாவில் உள்ள சர்வதேச சம்பாசனை நிலையத்தின் பட்ட அங்கீகாரத்தை பெறல். 
இது மாத்திரமன்றி இவர் கலாநிதி பட்டத்தை உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஒன்றாக விளங்கும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: பல்கலைக்கழக வரலாற்றிலேயே மிகவும் வயது குறைந்த உபவேந்தர் தென் கிழக்கிற்கு நியமனம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5

அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்:

June 24, 2021

தற்போதைய கொரோனா பரவலுக்கு மத்தியிலும் மின்சார பாவனையாளர்களின் முறைப்பாடுகளை விசாரித்து துரிதமாக சிறப்பான சேவையை அவர்களுக்கு வழங்கும் முகமாக புதிய அவசர தொலைபேசி இலக்கம் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
0775 687 387 என்ற இந்த இலக்கத்திற்கு WhatsApp, Viber, IMO மூலமும் தொடர்பு கொள்ளலாம். இதற்கு மேலதிகமாக MMS மூலமும் தொடர்பு கொள்ளலாம். 
பாவனையாளர்கள் தமது எழுத்து மூலமான முறைப்பாடுகளை, புகைப்படமொன்றை எடுத்தும் அனுப்பலாம். 
இச்சேவையைப் பெற்றுக் கொள்பவர்கள், தங்களத, பெயர், முகவரி, தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் முகவரி (இருப்பின்), மின்சாரப்பட்டியல் கணக்கு இலக்கம், முறைப்பாட்டின் விபரம், தொடர்புடைய ஆவணங்கள் (இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: அறிமுகமாகிறது மின்சார முறைப்பாடுகளுக்கான புதிய முறை: போட்டோக்கள் மூலமும் முறைப்பாடு செய்யலாம்: Reviewed by irumbuthirai on June 24, 2021 Rating: 5
Powered by Blogger.