விண்ணப்ப திகதி நீடிப்பு: G.C.E. (A/L) APPLICATION - 2022

August 20, 2022

G.C.E. (A/L) APPLICATION - 2022 
 
2022 உ. தர பரீட்சைக்கான விண்ணப்ப திகதி ஆகஸ்ட் 26 வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விண்ணப்ப முடிவு திகதி ஆகஸ்ட் 19 என அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. 
 
பரீட்சை தொடர்பான அறிவுறுத்தல்கள் மற்றும் Online விண்ணப்பம் என்பவற்றைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


விண்ணப்ப திகதி நீடிப்பு: G.C.E. (A/L) APPLICATION - 2022 விண்ணப்ப திகதி நீடிப்பு: G.C.E. (A/L) APPLICATION - 2022 Reviewed by Irumbu Thirai News on August 20, 2022 Rating: 5

19-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-08-2022

August 20, 2022

19-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
19-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-08-2022 19-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 19-08-2022 Reviewed by Irumbu Thirai News on August 20, 2022 Rating: 5

வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோருக்கு மன்னிப்பு காலம் அறிவிப்பு (அறிவித்தல் இணைப்பு)

August 18, 2022

வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோர் அவற்றை வங்கி கணக்குகளில் வைப்பிலிடுவதற்கோ அல்லது வங்கிகளுக்கு விற்பனை செய்வதற்கோ பொது மன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 15 ஆம் தேதி முதல் ஒரு மாத காலப்பகுதிக்கு இந்த காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வெளிநாட்டு நாணயங்களை வங்கி முறைமைக்குள் ஈர்ப்பதற்காகவே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வைப்பிலிடுவதாக இருந்தால் வெளிநாட்டு நாணய கணக்குகளில் வைப்பிலிடலாம் அல்லது விற்பனை செய்வதாக இருந்தால் அங்கீகாரம் அளிக்கப்பட்ட வணிக வங்கிகள் அல்லது தேசிய சேமிப்பு வங்கிக்கு விற்பனை செய்யலாம் என மத்திய வங்கி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்ட அறிவித்தலை கீழே காணலாம்.


வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோருக்கு மன்னிப்பு காலம் அறிவிப்பு (அறிவித்தல் இணைப்பு) வெளிநாட்டு நாணயங்களை கைவசம் வைத்துள்ளோருக்கு மன்னிப்பு காலம் அறிவிப்பு (அறிவித்தல் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on August 18, 2022 Rating: 5

உ. தர செயன்முறை பரீட்சை நடைபெறும் இடங்களும் திகதிகளும்

August 18, 2022

2021 உயர்தர பரீட்சையில் செயன்முறை பரீட்சைக்கு தோற்ற முடியாத மாணவர்களுக்கு மீண்டும் செயன்முறை பரீட்சை நடத்தப்படுகிறது. 

அது நடைபெறும் இடங்கள் மற்றும் திகதிகள் என்பவற்றை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது. அதனை கீழே காணலாம்.



உ. தர செயன்முறை பரீட்சை நடைபெறும் இடங்களும் திகதிகளும் உ. தர செயன்முறை பரீட்சை நடைபெறும் இடங்களும் திகதிகளும் Reviewed by Irumbu Thirai News on August 18, 2022 Rating: 5

12-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-08-2022

August 18, 2022

12-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். இதில் முக்கிய விடயங்கள் அடங்கியுள்ளன. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
 
 
12-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-08-2022 12-08-2022 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 12-08-2022 Reviewed by Irumbu Thirai News on August 18, 2022 Rating: 5

15-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 17, 2022

15-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். இதில் பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
 
 
15-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 15-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 17, 2022 Rating: 5

அம்பரபொல ரீயூனியன் சொசைட்டியின் வெற்றிகரமான இரத்ததான முகாம்

August 14, 2022

அம்பரபொல ரீயூனியன் சொசைட்டி (Ambarapola Reunion society) அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இரத்ததான நிகழ்வு ஒன்று அம்பரப்பொல கலாசார மண்டபத்தில் நேற்று (13.08.2022) வெற்றிகரமாக நடைபெற்றது. 

இந்நிகழ்வில் சுமார் 100 பேர் பங்கு பற்றியதோடு 76 பேரிடமிருந்து இரத்தம் தானமாகப் பெறப்பட்டது. மேற்படி அமைப்பினரால் முதல் தடவையாக ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் இத்தகைய எண்ணிக்கையில் கொடையாளர்கள் திரண்டமை மிகப் பெரிய வெற்றியாகும். 

மேலும் இந்நிகழ்வில் உடுநுவர பிரதேச சபையின் தலைவர், உபதலைவர் போன்றோரும் பங்குபற்றி நிகழ்வை சிறப்பித்தனர். 

பொதுவாக நடமாடும் இரத்ததான நிகழ்வு என்பது தேசிய இரத்த பரிமாற்று சேவைக்குப் போன்றே நாடு முழுவதுமுள்ள இரத்த வங்கிகளுக்கும் மிக முக்கியமானதாகும். இரத்ததான முகாம்களில் பெற்றுக் கொள்ளும் இரத்தத்தை இரத்த வங்கிக்கு கொண்டு சென்ற பின்னர் அதில் தேவையான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். 

அதாவது குறித்த இரத்தத்தின் மூலம் பரவும் நோய்கள் அந்த இரத்தத்தில் காணப்படுகின்றதா என்பது பரிசோதிக்கப்படும். அவ்வாறே எந்த வகை இரத்தம் என்பதும் பரிசோதிக்கப்படும். 

அதன் பின்னர் தனியான இயந்திரங்கள் மூலம் குறித்த இரத்தத்தில் உள்ள இரத்தத் தட்டுக்கள் , இரத்தக் கலங்கள், பிளாஸ்மா மற்றும் Cryoprecipitate ஆகிய மூலக் கூறுகள் பிரித்தெடுக்கப்படும். அதன் அடிப்படையில் ஒரு இரத்த வழங்கியின் இரத்தத்தின் மூலம் நான்கு மூலக் கூறுகள் சில சந்தர்ப்பங்களில் மூன்று மூலக் கூறுகள் பிரித்தெடுக்கப்படுகின்றன. 

அதன் அடிப்படையில் நீங்கள் தனமாக வழங்கும் ஒரு பக்கெட் இரத்தத்தின் மூலம் மூன்று உயிர்கள் சில வேளைகளில் நான்கு உயிர்கள் காப்பாற்றப்படுகின்றன. 

இவ்வாறு பிரிக்கப்பட்ட இரத்தத்தை 35 நாட்கள் சிலபோது 45 நாட்கள் வைத்துக் கொள்ள முடியும். அந்தக் காலத்தினுள் சேகரிக்கப்பட்ட பெற்றுக் கொள்ளும் இரத்தத்தை இங்கே மட்டுமல்ல. தேசிய இரத்த பரிமாற்று சேவைக்குரிய நாடு முழுவதிலுமுள்ள இரத்த தேவையுள்ள வைத்தியசாலைகளுக்கு விநியோகிக்கப்படும். 

குறிப்பாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை போன்ற இடங்களுக்கும் இந்த இரத்தத்தையும், அதன் மூலக் கூறுகளையும் விநியோகம் செய்யப்படுகிறது. அதன் அடிப்படையில் இவ்வாறான ஒரு இரத்ததான நிகழ்வினால் நோயாளர்களுக்குக் கிடைக்கும் நன்மை அளப்பரியது. 

ஒரு மனிதனை வாழ வைத்தவர் முழு மனித சமுதாயத்தையும் வாழ வைத்தவர் போன்றவராவார். - அல் குர்ஆன் - சூரா மாயிதா 32 ஆம் வசனம். அதன் அடிப்படையில் இரத்த தானம் மேற்கொள்ளும் ஒரு நபர் மூன்று அல்லது நான்கு பேரை வாழ வைக்கும் மாபெரும் பாக்கியத்தைப் பெற்றுக் கொள்கின்றார். 

பொதுவாக எமது சமூகத்தில் இரத்ததானம் பற்றிய விழிப்புணர்வு மிக அரிதாக உள்ள காலத்தில் சில தொண்டு நிறுவனங்கள் முன் வந்து மேற்கொள்ளும் இவ்வாறான நிகழ்வுகள் சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவது மட்டுமன்றி சமூகம் தொடர்பில் நன்மதிப்பை ஏற்படுத்தவும் பங்காற்றுகின்றன.

மேற்படி நிகழ்வு தொடர்பில் அம்பரபொல ரீயூனியன் சொசைட்டியின் செயற்குழு உறுப்பினரான சகோதரர் M.J.M. இக்ரம் தெரிவிக்கையில்,
"அம்பரப்பொல கிராமத்தின் முன்னேற்றத்திற்காக கிராம வாலிபர்கள் ஒன்றிணைத்து சுமார் ஐந்து ஆண்டுகளுக்கு முன் உருவாக்கிய இந்த அமைப்பு ஊர் மட்டத்தில் பல சமூக சேவைகளை முன்னெடுத்து வருகிறது. அந்த வகையில் கடந்த கொவிட் தடுப்பூசி ஏற்றல் வேலைத் திட்டத்தின் போது மூன்று தடுப்பூசி ஏற்றல் வேலைத் திட்டங்களை பம்பரதெனிய வைத்தியசாலை, உடுநுவர சுகாதார மருத்துவ அதிகாரி காரியாலயம் ஆகியவற்றோடு இணைந்து நமது அமைப்பானது அனைவரும் பாராட்டும்படியாக மேற்கொண்டிருந்தது. 

அதே போன்று கொவிட் 19 தொற்றுக் காலத்தில் வருவாயிழந்த குடும்பங்களுக்காக உலருணவுப் பொருள் விநியோகம் போன்ற வேலைத் திட்டங்களையும் இந்த அமைப்பு மேற்கொண்டது. மேலும் ஊரில் உள்ள வறிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் பலருக்கு புலமைப் பரிசில்களையும் இது வழங்கி வருகிறது. 

மேலும் ஊர் வாலிபர்களை ஒன்று திரட்டி சமூக மேம்பாட்டுக்கு உதவும் எமது பிரதான இலக்கினை நாம் கடந்த காலங்களில் அடைந்திருக்கிறோம். அதன் தொடர்ச்சியாகவே, இவ்வருடம் இரத்ததான முகாம் ஒன்றை நடாத்துதல் தொடர்பில் திட்டமிட்டோம். அதற்கான முன்னெடுப்புக்களை மேற்கொண்டிருக்கும் சந்தர்ப்பத்திலேயே பேராதனை போதனா வைத்தியசாலை இரத்த வங்கிக்கு அவசரமாக இரத்தத் தேவை உள்ளதாக தகவல்கள் எமக்கு கிடைத்தன. அதனைத் தொடர்ந்து உடுநுவர பிரதேச சபையின் உப தலைவர் சப்வான் ஹாஜியார் அவர்களின் ஆலோசனை வழிகாட்டலுடன் எமது ARWS சங்கமும் இணைந்து இதனை ஏற்பாடு செய்தோம். 

எமது சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் ஆண், பெண் பாகுபாடின்றி இந்த நிகழ்வில் பங்கு பற்றியமையும், பிரதேசத்தைச் சேர்ந்த பல மாற்று மத நண்பர்கள் இதில் பங்குபற்றியமையும் எமக்குக் கிடைத்த பெரு வெற்றியாகும் என தெரிவித்தார். 

கல்வி கலாச்சாரம் சமூக சமய மேம்பாட்டை வளர்த்தலும் தனிமனித ஒழுக்கம் மற்றும் தலைமைத்துவ ஆளுமையை கட்டி எழுப்பலும் என்ற தொனிப்பொருளில் இவ்வமைப்பு செயல்பட்டுக் கொண்டிருப்பதுடன், நாட்டில் உள்ள பொருளாதாரப் பிரச்சினையுடன் பாடசாலைகள் தினங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் பிள்ளைகளின் கல்வி எவ்வகையிலும் பாதிக்கப்படக் கூடாது என்ற உன்னத நோக்குடன் ஊருக்கு ஒரு பாடசாலை என்ற திட்டத்தையும் சுற்றுப்புற ஆசிரியர்களைக் கொண்டு மாலை நேரம் ஒரு பாடசாலையை போலவே ARWS கழகம் செய்து கொண்டு வருகின்றது எனத் தெரிவித்த முதல் தலைவர் M.S.M. Riyas அவர்கள் இரத்ததான நிகழ்வில் பங்கு பற்றியவர்களுக்கும் ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் தமது சங்கம் சார்பான மனப்பூர்வமான நன்றிகளையும் தெரிவித்தார். 

தானம் வழங்கியோரினையும், அதனை ஏற்பாடு செய்ய உழைத்த அனைவரினதும் தியாகத்தையும், உழைப்பையும் எல்லாம் வல்ல இறைவன் பொருந்திக் கொள்வானாக!








தகவல்:  Fayas M.A. Fareed.

அம்பரபொல ரீயூனியன் சொசைட்டியின் வெற்றிகரமான இரத்ததான முகாம் அம்பரபொல ரீயூனியன் சொசைட்டியின் வெற்றிகரமான இரத்ததான முகாம் Reviewed by Irumbu Thirai News on August 14, 2022 Rating: 5

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர்

August 11, 2022

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி நபர் ஒருவர் வெற்றி பெற்ற சம்பவம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. 

துங்கநாத் சதுர்வேதி என்ற குறித்த நபர் 1999 ஆம் ஆண்டு புகையிரத அனுமதி சீட்டை கொள்வனவு செய்துள்ளார். குறித்த அனுமதிச்சீட்டை வழங்கியவர் 70 ரூபாவுக்கு பதிலாக 90 ரூபாய் வசூலித்துள்ளார். 

இதனை எதிர்த்து துங்கநாத் சதுர்வேதி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். 

இந்த வழக்கானது 22 வருடங்களாக சுமார் 100 தவணைகளில் அழைக்கப்பட்ட நிலையில் கடந்த வாரம் இதற்கான தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

அதாவது மனுதாரருக்கு 20 ரூபாய் பணம் திருப்பி தர வேண்டும். அத்துடன் 1999 முதல் 2022 வரையான காலப்பகுதிக்காக 12 வீத வட்டியையும் சேர்த்து 15,000 ரூபாய் அபராதமாக செலுத்தப்பட வேண்டும். இந்த 15,000 ஆனது 30 நாட்களுக்குள் செலுத்தப்பட வேண்டும். அவ்வாறு செலுத்தப்படாவிட்டால் 15 வீதம் வட்டி அறவிடப்படுமென நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இது தொடர்பில் துங்கநாத் சதுர்வேதி கூறுகையில், இந்த அபராத தொகையானது சிறிய தொகையாக இருந்தாலும் நீதிக்கான போராட்டம் வெற்றி அடைந்துள்ளது என தெரிவித்துள்ளார்.

குறித்த நபருக்கு தற்போது 66 வயது என்பது குறிப்பிடத்தக்கது.

20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் 20 ரூபாய்க்காக 22 வருடம் போராடி வெற்றி பெற்ற நபர் Reviewed by Irumbu Thirai News on August 11, 2022 Rating: 5

08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

August 10, 2022

08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 

இதில் பாடசாலை மட்டத்தில் ஜப்பான் மொழித் தேர்ச்சி வழங்கல், இலத்திரனியல் முற்சக்கர வண்டிகளைப் பதிவு செய்தல், நீர் கட்டண அதிகரிப்பு உட்பட பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 

இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.



முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...


08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 08-08-2022 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on August 10, 2022 Rating: 5

நாளை முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டண விவரம்

August 09, 2022

நாளை முதல் அமுல்படுத்தப்படும் அதிகரிக்கப்பட்ட புதிய மின் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது.



நாளை முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டண விவரம் நாளை முதல் அதிகரிக்கப்படும் மின் கட்டண விவரம் Reviewed by Irumbu Thirai News on August 09, 2022 Rating: 5

Litro எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரம்

August 09, 2022


லிட்ரோ எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரத்தை  அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

இன்று(9) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை விவரம் வெளியிடப்பட்டுள்ளது. நேற்றைய தினம் லிட்ரோ எரிவாயு விலை குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

யாழ் மாவட்டத்திற்கான விலையே அதிகமாக உள்ளது. உதாரணமாக 12.5 Kg சிலிண்டரின் கொழும்பு மாவட்டத்திற்கான விலை 4,664/- ரூபாவாக இருக்கின்ற நிலையில் யாழ் மாவட்டத்தில் அது 5,044/- ரூபாவாக காணப்படுகிறது.

புதிய விலை விபரத்தை கீழே காணலாம்.





Litro எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரம் Litro எரிவாயுவின் மாவட்ட அடிப்படையிலான புதிய விலை விபரம் Reviewed by Irumbu Thirai News on August 09, 2022 Rating: 5

பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு: அரசாங்கம் நடவடிக்கை!

August 09, 2022


பாடசாலை மாணவர்களுக்கு பகுதி நேரமாக தனியார் துறை நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெறும் வகையில் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அமைச்சர் மனுஷ நாணயக்கார தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது 

16 தொடக்கம் 20 வயதுக்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இவ்வாறு பகுதிநேர தொழில் வாய்ப்பை பெறும் வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மாணவர்கள் தொழில் செய்யும் சூழலுக்கு பழக்கப்படாததன் காரணமாக வேலை உலகில் பல்வேறு பிரச்சனைகள் எழுகின்றன. 
மாதாந்தம் 20 மணித்தியாலங்கள் வேலை செய்யக்கூடிய வகையில் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளப்படும். இவ்வாறு தொழில் புரிபவர்களுக்கான கொடுப்பனவை வழங்கவும் தனியார் துறை நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும். 

இதேவேளை பெண்களை மாலை 6 மணிக்கு பின்னர் வரையறுக்கப்பட்ட சில தொழில்களில் மாத்திரமே ஈடுபடுத்தலாம் என்ற சட்ட விதிமுறைகளிலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளது. 

இந்த திருத்தங்களை மேற்கொள்வதற்காக 1954 ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க கடைக்காரியாலய ஊழியர் சட்டம் திருத்தப்படவுள்ளது. இதற்காக அமைச்சரவை அனுமதியும் கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு: அரசாங்கம் நடவடிக்கை! பாடசாலை மாணவர்களுக்கு பகுதிநேர வேலை வாய்ப்பு: அரசாங்கம் நடவடிக்கை! Reviewed by Irumbu Thirai News on August 09, 2022 Rating: 5

Diploma in Human Resource Management (University of Colombo)

August 07, 2022

University of Colombo. 
Faculty of Management and Finance. 

Course: Diploma in Human Resource Management (DHRM) 

Duration: 1 Year (Only Sundays) 

Medium: English/ Sinhala. 

Course Fee: 100,000/- 

Closing Date: 31-08-2022. 

Click the link below for full details.



Related:



Diploma in Human Resource Management (University of Colombo) Diploma in Human Resource Management (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on August 07, 2022 Rating: 5
Powered by Blogger.