அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள்

February 02, 2019
விசா மோசடி செய்து படிக்கச்சென்ற குற்றச்சாட்டில் 129 இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


வெளிநாடுகளில் இருந்து போலியான தகவல்களை வழங்கி அமெரிக்காவிற்கு மாணவர்கள் வருகை தருவதாகவும், கல்வி விசா பெற்று இப்படி வருபவர்களில் பலர் பின்னர் வேலைகளில் சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்து, அமெரிக்காவில் அனுமதியின்றி குடியேறி விடுவதாகவும் கூறப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள  பல்கலைக்கழகங்களில் படிப்பதற்காக கடந்த 2017ஆம் ஆண்டில் மட்டும் 2,49,763 மாணவர்கள் இந்தியாவில் இருந்து சென்றுள்ளனர். அதே ஆண்டில் சீன மாணவர்களின் எண்ணிக்கை 4,81,106 ஆக உள்ளது.


இதுபோன்ற மோசடியில் ஈடுபடுபவர்களை பிடிப்பதற்காக டெட்ராய்ட் பார்மிங்டன் ஹில்ஸ் பகுதியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தின் மூலம் ‘பொறி’ வைக்கப்பட்டது. இதில் சுமார் 130 மாணவர்கள் சிக்கினார்கள். அவர்களில் 129 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.

கைதாகியுள்ள மாணவர்களை அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் சந்திக்க அனுமதி அளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ள வெளியுறவுத்துறை அமைச்சகம், பாதிக்கப்பட்ட இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்தை தொடர்புகொள்ள 202-322-1190 மற்றும் 202-340-2590 எண்களைக் கொண்ட ‘ஹெல்ப்லைன்’ தொலைபேசி வசதியையும் ஏற்படுத்திக்கொடுத்துள்ளது.

இந்நிலையில், இவ்விவகாரத்தில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அரசியல் ரீதியான நடவடிக்கையில் தற்போது இறங்கியுள்ளது.


அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் அமெரிக்காவில் கைதான இந்திய மாணவர்கள் Reviewed by Irumbu Thirai News on February 02, 2019 Rating: 5

புற்று நோயின் அறிகுறிகள்

January 27, 2019

அனைவருக்கும் பகிரவும்
புற்று நோயின் அறிகுறிகள் புற்று நோயின் அறிகுறிகள் Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை

January 27, 2019

அனைவருக்கும் பகிரவும்
தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை தேனுடன் இஞ்சி சேர்ப்பதன் நன்மை Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள்

January 27, 2019
மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள் மேஜிக் செய்வதிலுள்ள இரகசியங்கள் Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது

January 27, 2019
சேனா படைப்புழுவை அழிப்பதற்காக பிரித்தானியாவிலிருந்து உபகரணங்களை இறக்குமதி செய்வதற்கு விவசாயத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.


       இப் பரிசோதனை வெற்றியளித்துள்ளதாகவும்  டப்ள்யூ.எம்.டபிள்யூ. வீரகோன் தெரிவித்துள்ளார்.
இப் படைப்புழு பரவும் வேகம் தற்போது படிப்படையாக குறைவடைந்துள்ளதாகவும் கூறினார்.
மீண்டும் அவர் கூறுகையில்  விவசாயத் திணைக்களமிருந்து மறு அறிவித்தல் வரும் வரை சிறுபோகத்தின்போது சோளப் பயிர்ச்செய்கையை கைவிடுமாறும் விவசாயிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

சோளப் பயிர்ச்செய்கையில் வேகமாகப் பரவிவரும் படைப்புழுத் தாக்கத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் நோக்குடனேயே இந்தத் தீர்மானம் எட்டப்பட்டதாக விவசாயத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் பெரும்பாலான பகுதிகளிலுள்ள சோளப் பயிர்ச்செய்கைகள், படைப்புழுவின் தாக்கத்தினால் பாதிக்கப்பட்டுள்ளன.


சோளப்பயிர் மட்டும் இல்லாமல் மற்ற பயிர்களிலும் இந்தப் புழுவின் தாக்கம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது தற்காலிகமாக சோளப் பயிர் செய்கையினை கை விடுமாறு விவசாயத் திணைக்களம் அறிவித்துள்ளது Reviewed by Irumbu Thirai News on January 27, 2019 Rating: 5

மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட்

January 25, 2019
கடந்த 22ம் திகதி சவூத் ஆப்ரிக்கா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 204 ரன் இலக்கை களம் இறங்கிய .ஆப்ரிக்கா ஒரு கட்டத்தில் 80/5 பெற்றது.. 

அதன் பின் பிஹல்குவே மற்றும் ரஸ்ஸி வான் டெர் டஸன் இணைந்து 127 ரன்கள் சேர்த்து  இப்போட்டியில் வெற்றி பெற்றனர்.. இதன்படி பாக்கிஸ்தானியர்கள் ஏமாந்தனர். சர்ஃப்ராஸ் தனது உணர்ச்சிகளை கட்டுப்படுத்த முடியாமல்
‘Abey kaale, teri ammi aaj kahaan baitheen hain? Kya parwa ke aaye hai aaj? (Hey black guy, where s your mother sitting today? What prayer has she said today?)’
இவ்வாறு கூறிப்பிட்டார்..


இன்று பின் பிஹல்குவேயினை சந்தித்து மன்னிப்பு கேட்டதுடன் தனது ட்வீட்டர் பக்கத்தில் சவுத் ஆப்ரிக்கா மக்களிடமும் தனது மன்னிப்பை ஏற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்..
இது தற்போது வைரலாக பரவி வருகிறது.  அனைவர்க்கும்ம் பகிருங்கள்




மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட் மன்னிப்பு கேட்ட சர்பராஸ் அஹமட் Reviewed by Irumbu Thirai News on January 25, 2019 Rating: 5

டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க

January 25, 2019
இந்தியா மற்றும்  நியூசிலாந்துக்கு இடையிலான ODI களின் சாதனைகள்
  1. நியூஸிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில்  நயன் மோங்கியாவின் 36 ஆட்டமிழப்பு சாதனையை முறியடிக்க டோனிக்கு இன்னும் 5 ஆட்டமிழப்புக்கள் தேவை.
  2. இந்தியா மற்றும்  நியூசிலாந்துக்கு இடையிலான ODI களில் விராட் கோஹ்லி (1199 ரன்கள்) இரண்டாவது அதிக ரன்களை எடுப்பதற்கு இன்னும் 8 ரன்கள் தேவை. தற்போது, ​​கோஹ்லி மூன்றாவது இடத்திலும், நாதன் ஆஸ்டில் 1207 ஓட்டங்களிலும் 2 வது இடத்திலும், சச்சின் டெண்டுல்கர் 1750 ரன்களிலும் முதலிடத்தில் உள்ளார்.
  3. நடக்க இருக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் கோலி (5) ஒரு சதத்தினை அடித்தால், இந்திய-நியூஸிலாந்து ஒரு நாள் போட்டிகளில் மிக அதிக Centuryகளை பெற்ற சேவாக் (6) சாதனையினை முறியடிக்களாம் வேண்டும். தற்போது கோஹ்லி , டெண்டுல்கர் மற்றும் அஸ்டிலும் தலா ஐந்து சதங்கள் பெற்றுள்ளார்கள்


  1. இந்தியா-நியூஸிலாந்து ஒரு நாள் போட்டிகளில் அதிக விக்கெட் கொண்ட டெய்லீல் வெட்டோரி மற்றும் சர் ரிச்சர்ட் ஹேட்லி தலா 27 விக்கட்டினை பெற்றுள்ளனர்.. தற்போது டிம் சவுதி 26விக்கடுக்களுடன் இருக்கின்றார். இன்னும் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினால் சாதனை படைப்பார்
  2. இந்தியா மற்றும்  நியூசிலாந்து இடையிலான ஒருநாள் போட்டிகளில் அதிக டக்கில் ஆட்டம் இழந்தவர்கள்  மார்ட்டின் கப்தில் ,திலிப் வெங்கர்ஸ்கர் மற்றும் பிரெண்டன் மெக்கலம் ஆகியோர் தலா 4 டக்கில் ஆட்டம் இழந்துள்ளனர். மார்ட்டின் கப்தில்க்கு இன்னும் ஒரு டக் இருக்குன்றது முதலிடந்திற்கு வருவதற்கு
  3. டோனி (23) இன்னும் மூன்று பிடி எடுப்பு எடுத்தால் பிரெண்டன் மெக்கல்லம் (25) சாதனையினை முறியடிப்பார்.
  1. 2000ஓட்டாங்களை பெற ஜடேடாவுக்கு இன்னும் 10ரன்கள் தேவை.
அனைவருக்கும் பகிரவும்


டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க டோனிக்கு இன்னும் 3 ஆட்டமிழப்பு , கோஹ்லிக்கு இன்னும் 8 ரன்கள் தேவை சாதனை படைக்க Reviewed by Irumbu Thirai News on January 25, 2019 Rating: 5

அதிசயமான மனித கண்டுபிடிப்புக்கள்- காணோலி

January 23, 2019

அனைவருக்கும் பகிரவும்.
அதிசயமான மனித கண்டுபிடிப்புக்கள்- காணோலி அதிசயமான மனித கண்டுபிடிப்புக்கள்- காணோலி Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

தைராய்டு குணமாக இலகுவான வழிகள்

January 23, 2019

அனைவருக்கும் பகிரவும்.
தைராய்டு குணமாக இலகுவான வழிகள் தைராய்டு குணமாக இலகுவான வழிகள் Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

அதிசய மனிதர்கள் - வீடியோ

January 23, 2019

அனைவருக்கும் பகிரவும்
அதிசய மனிதர்கள் - வீடியோ அதிசய மனிதர்கள் - வீடியோ Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

பொடுகு பிரச்சினைக்கான தீர்வு

January 23, 2019
அனைவருக்கும் பகிருங்கள்.
பொடுகு பிரச்சினைக்கான தீர்வு பொடுகு பிரச்சினைக்கான தீர்வு Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

எடையினை அதிகரிக்க இலகுவான வழி

January 23, 2019

அனைவருக்கும் பகிரவும்
எடையினை அதிகரிக்க இலகுவான வழி எடையினை அதிகரிக்க இலகுவான வழி Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5

ரொனால்வோவுக்கு 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது

January 23, 2019
உலகில் சிறந்த கால்பந்து வீரரான  கிறிஸ்டியானோ ரொனால்டோவுக்கு நீதி மன்றம் 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணமாக விதிக்கப்பட்டுள்ளது

33 வயதான ரொனால்ட்டோ இவர் போர்த்துக்கல் நாட்டைச் சேர்ந்தவரும் இவர் இத்தாலியில் சார்பில் யுவென்டஸ் கிளப் அணிக்காக விளையாடி வருகிறார்இவர் 9 ஆண்டுகளாக ஸ்பெயினில் உள்ள ரியல் மாட்ரிட் கிளப் அணிக்காக விளையாடியதுடன் 2011 ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் ரொனால்டோ ரியல் மாட்ரிட் அணிக்காக விளையாடுகையில் கிடைத்த வருமானத்தை குறைத்து காட்டி வருமான வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது

இது தொடர்பாக நேற்றைய தினம் மாட்ரிட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில் ஆஜரான கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது குற்றத்தை ஒப்புக் கொண்டதுடன், நீதிமன்றம் விதித்த அபராத தொகையை கட்ட இணக்கம் தெரிவித்தார்


உலகில் அதிக சம்பளம் வாங்கும் கால் வீரராக ரொனால்டோ இருக்கின்றார்
ரொனால்வோவுக்கு 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது ரொனால்வோவுக்கு 16.5 மில்லியன் யூரோ தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது Reviewed by Irumbu Thirai News on January 23, 2019 Rating: 5
Powered by Blogger.