தரம் 10 புவியியல் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 30, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி புவியியல் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
மாணவர் கையேடு இணைக்கப்பட்டுள்ளது.
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.

தரம் 10 புவியியல் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 புவியியல் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 30, 2019 Rating: 5

தரம் 10 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்..

November 30, 2019

தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி இஸ்லாம் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்.. தரம் 10 இஸ்லாம் (புதிய பாடத்திட்டம்): முழுப் பாடத்திட்டமும் இலகு முறையில்.. Reviewed by irumbuthirai on November 30, 2019 Rating: 5

விரைவில் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்..

November 30, 2019

2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேர் இணைத்துக்கொள்ளப்படவுள்ளனர். பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்கு நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டம் அமுல்படுத்தப்படும் என்று தகவல் தொடர்பாடல் தொழிநுட்பம் உயர்கல்வி தொழிநுட்ப புத்தாக்க அமைச்சர் 

பந்துல குணவர்த்த தெரிவித்துள்ளார். ஹோமாகம ஆட்டிக்கல கனிஷ்ட வித்தியாலயத்தில் புனரமைக்கப்பட்ட இரு மாடி கட்டடத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் அமைச்சர் உரையாற்றினார். நேற்று இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது நடைமுறைச் சாத்தியமான வேலைத் திட்டத்தின் கீழ் 2020ஆம் ஆண்டில் சகல பாடசாலைகளிலும் ஆரம்ப பிரிவுகளுக்காக ஆசிரிய உதவியாளர்கள் 50 ஆயிரம் பேரை இணைத்துக் கொள்ளவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.
(அ.த.தி)
விரைவில் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்.. விரைவில் 50 ஆயிரம் ஆசிரிய உதவியாளர்கள் நியமனம்.. Reviewed by irumbuthirai on November 30, 2019 Rating: 5

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை..

November 29, 2019

மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. 4 மில்லியனுக்கு மேற்பட்ட பாடசாலை மணவர்களுக்காக நடைமுறைப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதியை இரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்றும் அவர் தெரிவித்தார். ஆனால் சில ஊடகங்களிலும், சில இணையத்தளங்களிலும் 

வெளியாகியுள்ள செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்றும் பொறுப்பற்ற வகையில் வெளியிடப்பட்டிருப்பதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை இரத்து செய்வதற்கு எந்தவித தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை என்று கல்வி அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார். ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சரவை இந்த காப்புறுதி பயனுள்ள திட்டமாகும் என்று அடையாளம் கண்டிருப்பதாகவும் 

இதனை நடைமுறைப்படுத்துவதில் சீர்குலைவு மற்றும் தேவையற்ற செயற்பாடுகளை புறம்தள்ளி ஆகக்கூடிய நன்மைகளை பெறக்கூடிய வகையில் செயற்படுத்தப் படவேண்டும் என்று கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை.. மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி தொடர்பில் கல்வியமைச்சின் அறிக்கை.. Reviewed by irumbuthirai on November 29, 2019 Rating: 5

29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி

November 29, 2019

29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானியை இங்கு தருகிறோம். இதில், 

இலங்கை பரீட்சை திணைக்களம் நடாத்தும் அறநெறி பாடசாலை (இந்து) இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்,
பதிவாளர் நாயக திணைக்கள பதவி வெற்றிடம் 
நீதிச் சேவை ஆணைக்குழு (வக்பு சபை) க்கு உறுப்பினர் நியமனம்,  நீதிமன்ற ஏல விற்பனைகள் 
போன்ற பல அறிவித்தல்கள் அடங்கியுள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி 29-11-2019 அன்று வெளியான அரச வர்த்தமானி Reviewed by irumbuthirai on November 29, 2019 Rating: 5

ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது

November 19, 2019

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் சார்பில் 20 வேட்பாளர்களும்; மேலும் 15 பேர் சுயேட்சை வேட்பாளர்களாகவும் போட்டியிட்டனர். அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி வேட்பாளர் ஒருவர் இம்முறை ஜனாதிபதி தேர்;தலில் 50 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்ட ஒருவர் 

75 ஆயிரம் ரூபா வீதம் கட்டுப்பணம் செலுத்தினர். அதற்கு அமைவாக இம்முறை ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கு மேற்பட்ட வாக்குளை பெறமுடியாமல் போன 33 வேட்பாளர்களின் கட்டுப்பணம் அரச உடமையாக்கப்பட்டது, ஜனாதிபதி தேர்தலில் 12.5 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குகளை சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் பேட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் புதிய ஜனநாயக முன்னணி சார்பில் போட்டியிட்ட அமைச்சர் சஜித் பிரேமதாச ஆகியோரினால் மாத்திரமே பெற முடிந்துள்ளது.
(அ.த.தி)
ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது ஜனாதிபதி வேட்பாளர்கள் 33 பேரின் கட்டுப்பணம் அரசுடமையாகியது Reviewed by irumbuthirai on November 19, 2019 Rating: 5

Grade: 10 English (New Syllabus) With easy way

November 18, 2019


In this,


Self learning method by unit wise
Video Explanation
Full Syllabus
Teachers' Guide
Text Book
Work Book
Exam papers & More..
Click the link below for more details


English 10
Grade: 10 English (New Syllabus) With easy way Grade: 10 English (New Syllabus) With easy way Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5

தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்..

November 18, 2019


தரம் 10 புதிய பாடத்திட்டத்தின்படி தமிழ்மொழியும் இலக்கியமும் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

ஒவ்வொரு அலகும் இலகுவாக விளங்கும் வகையில் வித்தியாசமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
மாணவர் சுயமாக கற்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 
ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி இணைக்கப்பட்டுள்ளது.
தவணைப் பரீட்சை வினாப்பத்திரங்கள் உள்ளன. 
செயலட்டைகள் தரப்பட்டுள்ளன. 
பயிற்சி வினாக்கள் உள்ளன. 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. தரம் 10 தமிழ்மொழியும் இலக்கியமும் (புதிய பாடத்திட்டம்): முறையாக ஒழுங்கமைக்கப்பட்ட இலகு முறைகளுடன்.. Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5

நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய

November 18, 2019


எனது இந்த தேர்தலின் வெற்றிக்கு அனைவராலும் பெரிதும் மதிக்கப்படும் பௌத்த மத மஹா சங்கத்தினரது நல்லாசியே காரணமாகும். சிங்கள மக்களின் ஆதரவுடன் மாத்திரம் இந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற முடியும் என்பதை நான் அறிந்திருந்தேன். இருப்பினும் நான் தமிழ், முஸ்லிம் மக்களிடம் விசேட கோரிக்கையை முன்வைத்திருந்தேன் இந்த வெற்றியில் பங்காளிகளாக இருக்குமாறு. ஆனால் 

அதற்கான பெறுபேறு திருப்திகரமாக அமையவில்லை. நாட்டின் தேசிய பாதுகாப்பு முக்கியமானதாகும். எனது அரசாங்கத்தில் பாதுகாப்பை மீண்டும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். சர்வதேச மட்டத்தில் நடுநிலை கொள்கையை முன்னெடுப்பதே எனது நோக்கம். அதேவேளை நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு, கௌரவம் முக்கியமானதாகும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார். சுயாதீன நாடு என்ற வகையில் இலங்கை இனிமேல் செயற்படும் என்பதையும் நான் கூறிக்கொள்கிறேன். இதன் அடிப்படையில் நாம் சர்வதேச நாடுகளுடன் நடுநிலைக் கொள்கையை கையாள்வோம். தீவிரவாதம் அடிப்படைவாதம், போதைப்பொருள், வர்த்தகம், பாதாள உலகக்குழுவினர், குற்றவாளிகள் இல்லாத ஒரு சமூகத்தை நாம் நிச்சயமாக உருவாக்குவோம் என இலங்கையின் புதிய ஜனாதிபதி கோதாபய ராஜபக்ச தெரிவித்தார். 
அவரது கன்னி உரையை முழுமையாக வாசிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்துவேன் - ஜனாதிபதி கோதாபய Reviewed by irumbuthirai on November 18, 2019 Rating: 5

ஜனாதிபதி, பிரதமர், வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாக்களிப்பு (படங்கள் இணைப்பு)

November 16, 2019
ஜனாதிபதி, பிரதமர், வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இன்று இடம்பெறும் இலங்கையின் 8ஆவது ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்க வருகை தந்தபோது எடுத்த படங்களை இங்கு தருகிறோம்.

ஜனாதிபதி: மைத்திரிபால சிரிசேன





பிரதமர்: ரணில் விக்ரமசிங்க



எதிர்க்கட்சித் தலைவர்: மஹிந்த ராஜபக்ஸ (குடும்பத்துடன்)



வேட்பாளர்: சஜித் பிரேமதாச




வேட்பாளர்: கோதாபய ராஜபக்ஸ





வேட்பாளர்: அனுரகுமார திசாநாயக



 வேட்பாளர்: ஹிஸ்புல்லா


அமைச்சர்: ரவுப் ஹகீம்



பா.உ: சுமந்திரன்


பா.உ.: ஹிருணிகா பிரேமசந்திர




 பா.உ.: கெஹலிய ரம்புக்வெல


















ஜனாதிபதி, பிரதமர், வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாக்களிப்பு (படங்கள் இணைப்பு) ஜனாதிபதி, பிரதமர், வேட்பாளர்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாக்களிப்பு (படங்கள் இணைப்பு) Reviewed by irumbuthirai on November 16, 2019 Rating: 5

இலங்கை மாணவர்களுக்கு ரஸ்யாவில் உயர் கல்வி புலமைப்பரிசில்

November 16, 2019

எந்த சூழ்நிலையிலும் இலங்கையுடனான நிண்டகால இருதரப்பு தொடர்புகளை தொடர்ந்தும் முன்னெடுப்பதே தமது நாட்டின் எதிர்பார்ப்பாகும் என்று ரஸ்ய தூதுவர் தெரிவித்துள்ளார். இலங்கையில் உள்ள ரஸ்ய தூதுவர் யுரிபி மாட்டேரி பாராளுமன்றத்தில் சபாநாயகர் கரு ஜயசூரியவை சந்தித்த போதே இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்த தொடர்புகளை மேலும் வலுவூட்டுதற்காக இலங்கையில் உயர் தரத்தில் சித்தி எய்திய மாணவர்களுக்கு 

ரஸ்யாவில் 50 புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு ரஸ்யா தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். இந்த புலமைப்பரிசில் 2020 ஆண்டு ஜனவரி மாதம் முதல் வழங்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதன் போது உரையாற்றிய சபாநாயகர் இலங்கை அரசாங்கம் மற்றும் பாராளுமன்றத்துடன் ரஸ்யா முன்னெடுத்துவரும் நட்புறவிற்காக தான் நன்றி தெரிவித்ததாகவும் குறிப்பிட்டார். இந்த நிகழ்வில் இலங்கையில் உள்ள பிரதி ரஸ்ய தூதுவர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)
இலங்கை மாணவர்களுக்கு ரஸ்யாவில் உயர் கல்வி புலமைப்பரிசில் இலங்கை மாணவர்களுக்கு ரஸ்யாவில் உயர் கல்வி புலமைப்பரிசில் Reviewed by irumbuthirai on November 16, 2019 Rating: 5

அமைச்சர் ரிஷாதின் அவசர வேண்டுகோள்..

November 16, 2019

மன்னாருக்கு வாக்களிக்க செல்லும் வாக்காளர்களுக்கு.. வாக்களிப்பதற்காக மன்னாருக்கு பயணிக்கும் வாக்காளர்கள் தந்திரிமலை- ஓயாமடுவ பாதையை பயன்படுத்துவதை தவிர்க்கவும். இனவாதிகளினால் தடங்கல்கள் நடவடிக்கைகள் அப்பாதையில் இடம்பெறுவதனால் மாற்று பாதையை பயன்படுத்துங்கள். என்று தனது ட்விட்டர் பக்கத்தில் அமைச்சர் ரிஷாட் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார். 
குறித்த ட்விட்டர் செய்தியைப் பார்வையிட கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


Rishad- twitter
அமைச்சர் ரிஷாதின் அவசர வேண்டுகோள்.. அமைச்சர் ரிஷாதின் அவசர வேண்டுகோள்.. Reviewed by irumbuthirai on November 16, 2019 Rating: 5

முஸ்லிம்கள் வாக்களிக்காமல் மௌனம் காக்குமாறு வெளியான செய்தி: எவ்வித உண்மையுமில்லை என ஜம்இய்யதுல் உலமா மறுப்பு:

November 16, 2019
ஜம்இய்யத்துல் உலமா நாட்டு முஸ்லிம்களை வாக்களிக்க வேண்டாமென கூறிய பொய்யான ஒரு அறிக்கை பரவி வருகிறது. இது ஜம்இய்யாவின் செய்தியல்ல. ஜம்இய்யா அனைவரும் இன்று வாக்களிக்க வேண்டுமென வேண்டிக் கொள்கிறது.  
ஜம்இய்யதுல் உலமாவின் கடிதத் தலைப்பில் வெளியான போலிச் செய்தியை கீழே காணலாம்.
முஸ்லிம்கள் வாக்களிக்காமல் மௌனம் காக்குமாறு வெளியான செய்தி: எவ்வித உண்மையுமில்லை என ஜம்இய்யதுல் உலமா மறுப்பு: முஸ்லிம்கள் வாக்களிக்காமல் மௌனம் காக்குமாறு வெளியான செய்தி: எவ்வித உண்மையுமில்லை என ஜம்இய்யதுல் உலமா மறுப்பு: Reviewed by irumbuthirai on November 16, 2019 Rating: 5
Powered by Blogger.