மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம்

May 10, 2020


மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும விளக்கமளித்துள்ளார். அதாவது கட்டங்கட்டமாகவே இது ஆரம்பிக்கப்படும். இது தொடர்பில் விளக்கமளித்த அமைச்சர், 
உள்ளுராட்சி மன்றங்களின் உதவியுடன் சகல பாடசாலைகளும் தொற்று நீக்கம் செய்யப்படும். அதன் பின்னர் சுகாதார துறையின் ஆலோசனைக்கமைய 4 நாட்களின் பின்னரே ஏனைய கருமங்கள் மேற்கொள்ளப்படும். அதில் முதல் கட்டமாக அதிபர் ஆசிரியர்கள் மாத்திரம் பாடசாலைக்கு வரவழைத்து நேரசூசி தொடர்பான பணிகள் முன்னெடுக்கப்படும். இரண்டாம் கட்டமாக 

சா.தர மற்றும் உ.தர மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். அதற்கு அடுத்த கட்டத்தில்தால் ஏனைய மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
பாடசாலை ஆரம்பிக்கும் தினம் தொடர்பில் எதிர்வரும் வாரத்தில்தான் தீர்மானிக்கப்படும். இதமாத்திரமன்றி பாடசாலைக்கு வரும் மாணவர்களின் உடல் வெப்பநிலையை பரிசோதிக்கும்படி அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாகவும் தெரிவித்தார். இதற்காக வெப்பமானிகள் பாடசாலைக்கு வழங்கிவைக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இந்த விளக்கங்களை வழங்கினார்.

மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் மீண்டும் பாடசாலை ஆரம்பிக்கும் முறை தொடர்பாக அமைச்சரின் விளக்கம் Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை

May 10, 2020


பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களினதும் உடல் வெப்பநிலை பரிசோதிக்கும்படி அதிபர்களிடம் வேண்டுகோள் விடுப்பதாக கல்வியமைச்சர் டலஸ் அழகப்பெரும தெரிவித்தார். இதற்காக 200 மாணவர்களுக்குட்பட்ட பாடசாலைகளுக்கு ஒரு வெப்பமானியும் 200-500 மாணவர்களைக்கொண்ட பாடசாலைகளுக்கு 2 உம் 500-1000 வரையான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு அதை விட அதிகமாகவும் 1000 மாணவர்களுக்கு மேற்பட்ட பாடசாலைகளுக்கு அதை விட அதிகமாகவும் வெப்பமானிகள் வழங்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்தார். 
மாத்தறையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை பாடசாலைக்கு வரும் சகல மாணவர்களுக்கும் செய்யவிருக்கும் பரிசோதனை Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

நீடிக்கப்பட்ட வீசா காலம்..

May 10, 2020


கொரோனா வைரசு தொற்றின் காரணமாக இலங்கையில் தற்போது தங்கியிருக்கும் வெளிநாட்டவருக்கான அனைத்து வகையான வீசாக்களினதும் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.  இந்த வீசாக்களின் கால எல்லையை மே மாதம் 12 ஆம்திகதி தொடக்கம் எதிர்வரும் ஜூன் 11ஆம் திகதி வரை மேலும் 30 நாட்களுக்கு நீடிக்கப்பட்டிருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டுத்திணைக்களம் அறிவித்துள்ளது.
வீசா காலத்தை நீடிக்க எதிர்பார்த்திருப்போர் ஜூன் 11ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் eservices.immigration.gov.lk/vs என்ற இணையத்தளத்தில் 

அதற்கான நேரத்தை முன்கூட்டியே பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். உரிய வகையில் நேரத்தை ஒதுக்கிக் கொள்ளாதவர்கள் திணைக்கள வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(அ.த.தி)
நீடிக்கப்பட்ட வீசா காலம்.. நீடிக்கப்பட்ட வீசா காலம்.. Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (New Syllabus in 3 Languages)

May 10, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) 
Language: Tamil, English & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for English medium scheme


English medium
Click the link below for Sinhala medium scheme
Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (New Syllabus in 3 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Business statistics (வணிகப் புள்ளிவிபரவியல்) - 2019 (New Syllabus in 3 Languages) Reviewed by irumbuthirai on May 10, 2020 Rating: 5

வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல்: பூரண விளக்கம்...

May 09, 2020


வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல் தொடர்பாக பின்பற்றப்படும் நடைமுறைகள் அது தொடர்பாக தீர்மானம் எடுக்கும் விதம் போன்ற பல்வேறு விளக்கங்களை வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க தொலைக்காட்சி நேர்காணலின்போது வழங்கியிருந்தார். 
அதை முழுமையாக வாசிக்க கீழுள்ள லிங்கை கிளிக் செய்க.


வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல்: பூரண விளக்கம்... வெளிநாட்டிலுள்ள இலங்கையரை நாட்டிற்கு அழைத்து வரல்: பூரண விளக்கம்... Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

மே மாதத்திற்கான ரூ.5000 ஐ தபால் நிலையங்களில் பெறுவோர்...

May 09, 2020

கொவிட் 19 தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானத்தைக் கொண்ட பொது மக்களுக்காக அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் ஆலோசனையின் அடிப்படையில் வழங்கப்படும் ரூபா 5000/=, கொடுப்பனவை சகல விவசாய ஓய்வூதியம் பெறும் பயனாளிகளுக்கும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெரும் பயனாளிகளுக்கும் இம்முறையும் மே மாதத்திற்காக வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருப்பதாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேமசந்திர ஹெப்பா அவர்கள் பத்திரிகை அறிக்கையொன்றை விடுத்து தெரிவித்துள்ளார். இதற்கமைவாக அனைத்து விவசாய மற்றும் கடற்றொழிலாளர் ஓய்வூதியம் பெறுவோருக்கு உரித்தான ஓவ்வூதியம் ரூபா 5000/= என்ற ரீதியில் தமக்குரிய தபால் அலுவலகத்தின் மூலம் மே மாதம் 11, 12 , 13, 14 மற்றும் 

15 ஆகிய திகதிகளில் பெற்றக் கொள்வதற்கு அனைத்து நடவடிக்கைகளும் தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுள்ளன. நாட்டில் உள்ள 4200 தபால் அலுவலகங்கள் மூலம் செலுத்துவதற்கு தேவையான வசதிகளை மேற்கொள்வதற்கு தபால் மா அதிபரின் விசேட அனுசரணையின் கீழ் தபால் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. 
ஏதேனும் அல்லது அவசர நிலையின் அடிப்படையில் தமது எல்லைப் பிரதேசத்திற்கான சம்பந்தப்பட்ட தினத்தில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டால் தமது ஓய்வூதிய கணக்குப் புத்தகத்தை அவசரகால அனுமதிப் பத்திரமாக பயன்படுத்த முடியும் என்பதுடன் ,ஏதேனும் அல்லது போக்குவரத்து சிரமங்களினால் ஓய்வூதிய பயனாளிகளுக்குப் பாதிப்பு ஏற்படுமாயின் அது தொடர்பாக கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுதி சபையின் மாவட்ட அலுவலகத்தின் மூலம் பாதுகாப்பு பிரிவுடன் இணைந்து பொருத்தமான வேலைத்திட்டமொன்று வகுக்கப்படும் என்றும் கமத்தொழில் மற்றும் கமநல காப்புறுத்திச் சபையின் தலைவர் சட்டத்தரணி பிரேதமசந்திர ஹெப்பா அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.
(அ.த.தி)

மே மாதத்திற்கான ரூ.5000 ஐ தபால் நிலையங்களில் பெறுவோர்... மே மாதத்திற்கான ரூ.5000 ஐ தபால் நிலையங்களில் பெறுவோர்... Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில்

May 09, 2020

சுகாதார அமைச்சு தவிர்ந்த வெளியில் மேற்கொள்ளப்பட்டு வரும் பிசிஆர் பரிசோதனைகள் தரமற்றவையென மேற்கொள்ளப்படும் பிரசாரங்கள் குறித்து கருத்து தெரிவித்த சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ,இவ்வாறு தற்போது பிரசாரங்களை மேற்கொள்பவர்களே முன்பு அதற்காக பல்கலைக்கழகங்கள் மற்றும் கற்கை பீடங்கள் உள்ளிட்ட நிறுவனங்களின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்ளுமாறு கோரியிருந்தனர்.
பிசிஆர் பரிசோதனையா- அல்லது தனிமைப்படுத்தல் செயற்பாடுகளா? எது மிக முக்கியமென பார்க்கும்போது தனிமைப்படுத்தல் செயற்பாடுகள் மிக முக்கியமானதும் அவசியமுமாகிறது. தனிமைப்படுத்தலுக்குப் பின்னரும் கூட பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளலாம். எனினும் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கு தனிமைப்படுத்தல் மிக முக்கியமாகிறது என்றும் அவர் தெரிவித்தார். எவ்வாறெனினும் பரிசோதனைக்கூடங்கள் தற்போது விரிவாக்கப்பட்டு பரிசோதனைகளின் எண்ணிக்கைகள் அதிகரிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல்வேறு நிறுவனங்கள் 

ஏற்கனவே பரிசோதனைகளை முன்னெடுத்த போதும் கொரோனா வைரஸ் தொடர்பான பிசிஆர் பரிசோதனை தொடர்பில் அவர்களுக்கு தெளிவூட்டப்பட்டுள்ளது. 
அதேவேளை இத்தகைய பரிசோதனை கூடங்கள் ஆரம்பிக்கப்படும் முன்பே அது தொடர்பான மதிப்பீடு மேற்கொள்ளப்படுகின்றது. நாம் அதற்கு மேலதிகமாக தற்போது மேற்படி பரிசோதனைக் கூடங்கள் தொடர்பில் மேலும் மதிப்பீடு ஒன்றை மேற்கொள்வதற்கு தீர்மானித்துள்ளோம். 
அதனையடுத்து நாம் பேராசிரியர் மலிக் பீரிசின் ஒத்துழைப்புடன் சகல பரிசோதனைக் கூடங்களையும் தனித் தனியாக தரப்படுத்தலுக்கு உட்படுத்த உள்ளோம். அதேபோன்று எமது நீண்ட கால வேலைத்திட்டமாக உலக சுகாதார அமைப்பின் மூலம் அவற்றை தரநிர்யம் செய்வதற்கு உத்தேசித்துள்ளோம். எவ்வாறாயினும் காலத்துக் காலம் பொருத்தமான வகையில் அவற்றை கண்காணிப்புக்கு உட்படுத்துவது இடம் பெறும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
(அ.த.தி)

PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில் PCR பரிசோதனைகள் தொடர்பான விமர்சனங்களுக்கு சுகாதார சேவை பணிப்பாளரின் பதில் Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New/Old Syllabus) Marking Schemes. 
Subject: Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்)
Language: Tamil & Sinhala 
Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Communication & Media Studies (தொடர்பாடலும் ஊடகக் கற்கையும்) - 2019 (New/Old Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: Home Economics (மனைப் பொருளியல்) 
Language: Tamil & Sinhala 

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for Home Economics (மனைப் பொருளியல்) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages)

May 09, 2020

Department of Examination 
G.C.E.(A/L) - 2019 (New Syllabus) Marking Schemes. 
Subject: History of Sri lanka (இலங்கை வரலாறு) 
Language: Tamil & Sinhala

Click the link below for Tamil medium scheme


Tamil medium
Click the link below for Sinhala medium scheme


Sinhala medium

G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) G.C.E.(A/L) Marking Scheme for History of Sri lanka (இலங்கை வரலாறு) - 2019 (New Syllabus in 2 Languages) Reviewed by irumbuthirai on May 09, 2020 Rating: 5

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை

May 08, 2020

அரச ஊழியர்களின் மே மாத சம்பளத்தை அல்லது அரைவாசியை அல்லது ஒரு பகுதியை அல்லது ஒரு வார சம்பளத்தை அல்லது ஒரு நாள் சம்பளத்தை அன்பளிப்பு செய்ய சொல்லி ஜனாதிபதியின் செயலாளர் P.B. ஜயசுந்தர தெரிவித்த விடயம் அவரின் தனிப்பட்ட வேண்டுகோளாகும். இது அரசின் அறிவித்தல் அல்ல என அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இன்று ஊடகவியலாளர் மாநாட்டில் தெரிவித்தார். அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், 
கொரோனா காரணமாக நாடு எதிர்கொண்டுள்ள நிலைக்காக அவர் விடுத்த தனிப்பட்ட வேண்டுகோளே இதுவாகும். இது அரசின் அறிவித்தலோ வேண்டுகோளோ அல்ல. தனிப்பட்ட வேண்டுகோள் என குறித்த கடிதத்தில் அவர் குறிப்பிட்டும் இருக்கிறார். விரும்பியவர்கள் மட்டும் இதற்கு பங்களிப்பு செய்யலாம். அவரின் இந்த வேண்டுகோளுக்கு சமூக வலைத்தளங்களில் அவருக்கு எதிராக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை அரச ஊழியர்களின் சம்பளத்தை அரசாங்கம் கேட்கவில்லை Reviewed by irumbuthirai on May 08, 2020 Rating: 5

மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்..

May 08, 2020


கொரோனாவால் நிகழ்ந்த 9வது மரணமான மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லையென தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் மருத்துவ ஆய்வுகூட நிபுணர் அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், 
கடந்த 5ம் திகதி வெளியான தேசிய வைத்தியசாலை தாதி ஒருவர், ராஜகிரிய, கொலன்னாவை மற்றும் மோதரையைச் சேர்ந்த மரணித்த 52 வயது பெண்மணி ஆகிய நால்வரின் PCR பரிசோதனையை மீண்டும் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் பரிசோதித்த போது அவற்றில் 

குறைபாடுகள் இருந்தமை கண்டறியப்பட்டன. இதுவரை இவ்வாறான 13 PCR பரிசோதனை அறிக்கையில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. அண்மையில் செய்யப்பட்ட பரிசோதனைகளில் மாத்திரம் சிறீ ஜயவர்தன ஆய்வகத்தின் 8, கொழும்பு பல்கலைக்கழக ஆய்வுகூடத்தின் 4, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 1 பெறுபேறுமாக 13 பெறுபேறுகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சின் கீழுள்ள ஆய்வகங்களில் இதுவரை இவ்வாறான குறைபாடுகள் இடம்பெறவில்லை. 
PCR சோதனைக்காக மாத்திரம் சுகாதார அமைச்சின் கீழ் 10 ஆய்வகங்களில் சுமார் 200 நிபுணர்கள் இதற்காக தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 
மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணியின் உடல் கொரோனாவால் ஏற்பட்ட மரணத்தைப் போன்று எரிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்.. மோதரையைச் சேர்ந்த 52 வயது பெண்மணி கொரோனாவால் மரணிக்கவில்லை... வெளியான அதிர்ச்சி தகவல்.. Reviewed by irumbuthirai on May 08, 2020 Rating: 5

ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு...

May 07, 2020

கொரோனா இடர்கால கொடுப்பனவாக அரசாங்கத்தால் வழங்கப்படும் 5000 ரூபாய் கொடுப்பனவு கிடைக்காதவர்கள் தமது பிரிவு பிரதேச செயலாளரிடம் மேல் முறையீடு செய்ய முடியும் என வவுனியா மாவட்ட அரச அதிபர் சமன் பந்துலசேன தெரிவித்துள்ளார். வவுனியா மாவட்டத்தின் தற்போதைய நிலைமைகள் மற்றும் கொவிட் -19 தாக்கம் குறித்து நேற்று (6) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.


ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... ரூ. 5000 நிவாரணம் கிடைக்காதவர்களுக்கு... Reviewed by irumbuthirai on May 07, 2020 Rating: 5
Powered by Blogger.