எச்சரிக்கை!!! இலங்கைக்கு அடுத்த மாதம் காத்திருக்கும் உச்சகட்ட ஆபத்து!

May 09, 2021

இலங்கையில் Covid தொற்றால் நாளாந்தம் மரணிப்போரின் எண்ணிக்கை அடுத்த மாதமளவில் (ஜூன்) 200 ஐத் தாண்டும் என வோஷிங்டன் பல்கலைகழகத்தை சேர்ந்த சுயாதீன ஆராய்ச்சி அமைப்பான ஐஎச்எம்ஈ (IHME) என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. 
தற்போதைய புள்ளிவிபரங்களை அடிப்படையாக வைத்து இந்த எதிர்வுகூறலை முன்வைத்துள்ளது. 
அதிலும் ஜூன்14 ம் திகதியளவில் இலங்கையில் நாளாந்த உயிரிழப்பு உச்சத்தை அடையும். அதாவது சுமார் 264 பேர் நாளாந்தம் உயிரிழப்பர் என அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் செப்டம்பர் 1ம் திகதிக்குள் இலங்கையில் 20876 பேர் கொரோனா வைரசினால் உயிரிழப்பார்கள் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. ஜூன் 16 ம் திகதியளவில் மருத்துவமனை பயன்பாடு உச்சத்தை அடையும். 
எவ்வாறாயினும் நாளாந்த உயிரிழப்புகள் பின்னர் 88 ஆக குறையும் எனவும் IHME தெரிவித்துள்ளது.
எச்சரிக்கை!!! இலங்கைக்கு அடுத்த மாதம் காத்திருக்கும் உச்சகட்ட ஆபத்து! எச்சரிக்கை!!! இலங்கைக்கு அடுத்த மாதம் காத்திருக்கும் உச்சகட்ட ஆபத்து! Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

ரிஷாட் பதியுதீனின் கட்சி தலைமைப் பதவியில் வேறொருவர்...

May 09, 2021

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் (ACMC) கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பதில் தலைவராக சிரேஷ்ட சட்டத்தரணி N.M.சஹீட் என்பவரை கட்சியின் அரசியல் குழு நியமித்துள்ளது. 
இதேவேளை கட்சி தலைவரின் அதிகாரங்களும் பதில் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ACMC தெரிவித்துள்ளது.
ரிஷாட் பதியுதீனின் கட்சி தலைமைப் பதவியில் வேறொருவர்... ரிஷாட் பதியுதீனின் கட்சி தலைமைப் பதவியில் வேறொருவர்... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Air Force

May 09, 2021

Vacancies: Sri Lanka Air Force (Officer cadet vacancies.)  
Closing date: 15-05-2021.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Air Force Vacancies: Sri Lanka Air Force Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka

May 09, 2021

Vacancies: Sabaragamuwa University of Sri Lanka 
Closing date: 18-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.
Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Vacancies: Sabaragamuwa University of Sri Lanka Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

Vacancies: University of Moratuwa.

May 09, 2021

Vacancies: University of Moratuwa. 
Closing date: 21-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: University of Moratuwa. Vacancies: University of Moratuwa. Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

Vacancy: South Eastern University of Sri Lanka (Technical Officer - ICT)

May 09, 2021

Vacancy: South Eastern University of Sri Lanka (Technical Officer - ICT) 
Closing date: 25-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancy: South Eastern University of Sri Lanka (Technical Officer - ICT) Vacancy: South Eastern University of Sri Lanka (Technical Officer - ICT) Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management

May 09, 2021

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management 
Closing date: 13-05-2021. 
See the details below.
Source: Sunday Observer.

Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Vacancies: Sri Lanka Institute of Tourism & Hotel Management Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

இந்தியாவிலிருந்து அதிகமானோர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வருகை...

May 09, 2021

கடந்த மாதம் (ஏப்ரல்) 4,168 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளனர். அதில் 19% ஆனோர் அதாவது 796 பேர் இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர் என சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை குறிப்பிட்டுள்ளது. 
சீனாவிலிருந்து 475, கசகஸ்தானிலிருந்து 440, ஜெர்மனியிலிருந்து 383, இங்கிலாந்திலிருந்து 334 சுற்றுலாப் பயணிகளும் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்து அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளது. 
இதேவேளை இந்தியா கொரோனா பரவலை சமாளிக்க முடியாமல் திணறிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. அங்கு நாளாந்த தொற்றாளர்கள் மற்றும் உயிரிழப்புகள் என்பன கட்டுக்கடங்காமல் அதிகரித்து சென்றுகொண்டிருக்கிறது.
இந்தியாவிலிருந்து அதிகமானோர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வருகை... இந்தியாவிலிருந்து அதிகமானோர் சுற்றுலா பயணிகளாக இலங்கை வருகை... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

குருதி கொடையாளர்களுக்கான அவசர அறிவிப்பு

May 09, 2021

தற்போது நாட்டில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாலும் குருதி நன்கொடையாளர்கள் குறைவடைந்துள்ளதாலும் தேசிய இரத்த வங்கியில் குருதிக்கூறுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தேசிய இரத்த வங்கியின் பணிப்பாளர் மருத்துவர் லக்‌ஷ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார். 
500 முதல் 800 வரையான குருதிக்கூறுகள் நாளாந்தம் தேவைப்படுவதாகவும் தெரிவித்த அவர் இரத்த வங்கியின் 106 கிளைகள் நாடளாவிய ரீதியில் செயற்படுவதாகவும் முடியுமானவர்கள் தங்களின் பகுதியிலுள்ள இரத்த வங்கிக்கு சென்று குருதி நன்கொடையை செய்யுமாறும் அவசர வேண்டுகோள் விடுத்தார்.
குருதி கொடையாளர்களுக்கான அவசர அறிவிப்பு குருதி கொடையாளர்களுக்கான அவசர அறிவிப்பு Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

சமையலுக்கான தேங்காயெண்ணெயில் வேறு எண்ணையை கலக்கலாமா? வெளியான விசேட வர்த்தமானி

May 09, 2021

உற்பத்தியாளர்கள், இறக்குமதியாளர்கள், களஞ்சிய உரிமையாளர்கள் மறறும் விற்பனையாளர்கள் சமையலுக்கான தேங்காயெண்ணெயில் வேறு எந்த எண்ணெயையும் கலக்கக் கூடாது என அதிவிசேட வர்த்தமானி ஒன்று நேற்றைய தினம் (8) வௌியிடப்பட்டுள்ளது. 
உடன் அமுலுக்கு வரும் வகையில் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த வர்த்தமானி வௌியிடப்பட்டுள்ளது.
சமையலுக்கான தேங்காயெண்ணெயில் வேறு எண்ணையை கலக்கலாமா? வெளியான விசேட வர்த்தமானி சமையலுக்கான தேங்காயெண்ணெயில் வேறு எண்ணையை கலக்கலாமா? வெளியான விசேட வர்த்தமானி  Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு இலங்கை வழங்கிய அனுமதி...

May 09, 2021

அவசர தேவை நிமித்தம் கொரோனா வைரஸூக்கான பைஸர் தடுப்பூசியை (Pfizer-BioNTech) பயன்படுத்துவதற்கு தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளதாக ஆரம்ப சுகாதார நலன் தொற்றுநோய் மற்றும் கொவிட் வைரஸ் கட்டுப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் திருமதி சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 95% செயற்திறன் மிக்கதென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 
இதேவேளை சீனாவின் சினோபார்ம் (sinopharm) தடுப்பூசியையும் அவசர தேவையின் போது இலங்கையில் பயன்படுத்துவதற்கான அனுமதியை தேசிய மருந்துகள் ஒழுங்குமுறைப்படுத்தும் அதிகார சபை வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு இலங்கை வழங்கிய அனுமதி... மேலும் இரண்டு தடுப்பூசிகளுக்கு  இலங்கை வழங்கிய அனுமதி... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி:

May 09, 2021

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் மகன் மனோஜ் ராஜபக்ஷ மற்றும் அவரது மனைவி ஆகியோர் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். தற்போது அவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. 
தனது பேத்தியை பார்ப்பதற்காக ஜனாதிபதியின் மனைவி அமெரிக்கா சென்றுள்ளார். 
ஜனாதிபதியும் அவருடன் பயணிக்கவிருந்த நிலையில் நாட்டில் நிலவும் கொரோனா நிலையை கருத்திற் கொண்டு அவர் தனது பயணத்தை இரத்து செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி: குடும்பத்திற்கு புதிய உறுப்பினர்: நாட்டு நிலைமையால் பார்க்க செல்லாத ஜனாதிபதி: Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5

கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை....

May 09, 2021

கொரோனா நோயாளிகளின் பராமரிப்பு தொடர்பாக முறையான திட்டமொன்றை அரசாங்கம் செயல்படுத்தி வருவதாக இராஜாங்க அமைச்சர பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். 
இதேவேளை, நோய் அறிகுறிகள் தென்படாத கொவிட் தொற்றாளர்களுக்கு அவர்களது வீட்டிலேயே சிகிச்சை அளிப்பதற்கு அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை.... கொரோனா நோயாளர்களுக்கு வீட்டிலேயே சிகிச்சை.... Reviewed by irumbuthirai on May 09, 2021 Rating: 5
Powered by Blogger.