அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா?

August 28, 2021
 

அதிபர் சங்கங்களுக்கும் ஆசிரியர் சங்கங்களுக்குமிடையில் பிளவு ஏற்படும் என்ற நிலை உருவாகுவதாக தெரிகிறது. 
 
நேற்றைய தினம் (27) கல்வி அமைச்சரை சந்திப்பதற்காக பிற்பகல் 2 மணியிலிருந்து மாலை 6 மணி வரை காத்திருந்தும் சந்திப்பதற்கான அவகாசம் கிடைக்கவில்லை என இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் தெரிவித்துள்ளது. 
 
இது தொடர்பில் குறித்த சங்கம் தெரிவிக்கையில், 
 
கல்வியமைச்சர் ஆசிரியர் சங்கங்களை சந்தித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்களுக்கான சம்பளம் ஒரே படிமுறையில் உள்வாங்கப்படுவது பிரச்சினையில்லை. ஆனால் அவர்களுக்கு மேலதிக கொடுப்பனவை மாத்திரம் கொடுக்கலாம் என்று ஆசிரியர் சங்கங்கள் அமைச்சரிடம் கூறியதாக தெரிய வருகிறது. 
 
அவர்கள் எவ்வாறு அப்படி சொல்லலாம்? அமைச்சரவை உப குழு கூட அதிபர்களுக்கு உரிய நிலை வழங்கப்பட வேண்டும் என்று கூறியிருப்பது சந்தோஷப்பட வேண்டிய விடயம். 
 
அவ்வாறு இருக்கையில் இந்த ஆசிரியர் சங்கத்தை சேர்ந்த சிலர் எவ்வாறு அமைச்சரிடம் இப்படி சொல்லலாம்? அதிபர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஒரே சம்பள அளவுத்திட்டம் சரியா? 
 
இது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அமைச்சருக்கு எழுத்து மூலம் நாம் அறிவித்தும் எமக்கு இதுவரை சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 
 
இந்த தொழிற்சங்க போராட்டங்களில் எமது பங்கு உயர்ந்த அளவில் இருந்தது. எமக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால் இந்த அரசாங்கத்திற்கு ஆசிரியர் சங்கங்களுக்கும் நாம் யார் என்று காட்ட வேண்டிவரும். 
 
இன்று(நேற்று-27)  எமது இலங்கை தரப்படுத்தல் அதிபர் சங்கம் மற்றும் ஏனைய அதிபர் சங்கங்களும் வருகை தந்துள்ளன. ஆனால் இதுவரை காத்திருந்தும் எமக்கு சந்திப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. 
 
இதற்கு முன்னர் இருந்த அமைச்சர்களுக்கும் அதிபர்களையும் ஆசிரியர்களையும் பிரித்தறிய முடியாத பிரச்சினை இருந்தது அது இந்த அமைச்சருக்கும் இருப்பதாக தெரிகிறது. 
 
இது தொடர்பில் எடுக்க வேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக எமது சங்கங்களின் செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என்று தெரிவித்தனர். 
 
அமைச்சருடனான சந்திப்பு சாதகமாக அமைந்தது என ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்திருக்கின்றன. எனவே இவர்கள் எதிர்பார்க்கும் வகையில் சாதகமான தீர்வு கிடைத்தால் அவர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் இருந்து விலகுவார்கள். இந்நிலையில் உங்கள் முடிவு எப்படி? என ஊடகவியலாளர் கேட்டபோது, 
 
இது தொடர்பில் இப்போதைக்கு எதுவும் கூற முடியாது. எமது செயற்குழு உறுப்பினர்கள் கூடி முடிவெடுக்க இருக்கிறோம் என தெரிவித்தனர்.
அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? அதிபர் ஆசிரியர் சங்கங்கள் பிளவுபடுகிறதா? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி?

August 28, 2021
 

சிறுவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிவது எப்படி? என்பது தொடர்பாக லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்திய நிபுணர் ஜி. எஸ். விஜேசூரிய விளக்கம் அளித்துள்ளார். 
 
குழந்தையின் வழக்கமான நடவடிக்கைகளை தொடர்ந்து அவதானிப்பதன் மூலம் கொவிட் - 19 தொற்று அறிகுறிகளை அடையாளம் காண முடியும் என்று வைத்தியர் தெரிவித்துள்ளார். 
 
இதற்கமைவாக, பின்வரும் விடயங்களில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். 
 
சிறுவர்கள் நடக்கும்போது வழக்கத்தை விட கடினமான சோர்வுடன் காணப்படுகின்றனரா? மிகக் குறைந்த தூரம் நடக்கும்போது நிற்கின்றனரா ? உட்காருகின்றனரா ? சுவாசிக்கும் தன்மை அதிகரிக்கின்றதா? சிறுவர்களின் உதடுகள் கருப்பு நிறமாக மாறுகின்றதா? கண் நிறத்தில் மாற்றம் ஏற்படுகின்றதா? சருமத்தில் மாற்றத்தைக் காணக்கூடியதாகவுள்ளதா ? 
 
இத்தகைய அறிகுறிகள் காணப்படும் சிறுவர்களின் ஒக்ஸிஜன் அளவு குறைந்துள்ளதையே எடுத்துக்காட்டும் அறிகுறியாகும் என்று வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார். 
 
இரண்டு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மத்தியில் இத்தகைய அறிகுறிகளைக் கவனிப்பது மிகவும் கடினம் என்று அவர் மேலும் கூறினார்.
Source: அரசாங்க தகவல் திணைக்களம்.
சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? சிறுவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதைக் கண்டறிவது எப்படி? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka)

August 28, 2021
 

Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) 
 
Closing date: 01-09-2021. 
 
See the details below. 
 

Source: Sunday Observer. 

ஏனைய தொழில் வாய்ப்புகளையும் பார்வையிட...
Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Vacancy (State Pharmaceutical Corporation of Sri Lanka) Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்!

August 28, 2021
 

இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி செலுத்துவது தொடர்பான பல்வேறு கருத்துக்கள் தற்பொழுது பகிரப்பட்டு வருகின்றன. 
 
அந்தவகையில் பாரதூரமான நோய் நிலைமைகள் உள்ளவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி எதிர்வரும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் செலுத்த எதிர்பார்ப்பதாக அரச மருந்தகக் கூட்டுத்தாபன தலைவர் வைத்தியர் பிரசன்ன குணரசேன தெரிவித்துள்ளார். மேலும் அதற்கான பரிந்துரைகளை தான் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
 
இதேவேளை இலங்கையில் மூன்றாவது தடுப்பூசி சுகாதார துறையினருக்கு வழங்கப்படும் என ஏற்கனவே அறிவிப்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! இலங்கையில் மூன்றாவது தடுப்பூசியை பெறுவோர்! Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ?

August 28, 2021
 

சுகாதார அமைச்சும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கை கிளையும் இணைந்து ஸ்மார்ட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக இலங்கை தகவல் தொடர்பாடல்தொழில்நுட்ப முகவர் நிறுவனம் (ICTA) நிறுவனம் அறிவித்துள்ளது. 
 
இந்த Smart Vaccination Certificate வழங்கும் நடவடிக்கையை ICTA நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. 
 
இரண்டு தடுப்பூசிகளையும் போட்டவர்களுக்கு மாத்திரமே இது வழங்கப்படும். 
 
தற்போது வெளிநாடு செல்பவர்களுக்காகவே வழங்கப்படுகிறது. 
 
இதேவேளை தமது தடுப்பூசி அட்டையை தவறவிட்டவர்கள் யாராவது இருந்தால் தமது பிரதேசத்திற்கு பொறுப்பான பொது சுகாதார பரிசோதகரைத் தொடர்பு கொண்டு உரிய தகவல்களை பெற்றுக் கொள்ளுமாறு அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். 
 
Smart Vaccination Certificate ஐப் பெறுவதற்காக கீழே உள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை பூர்த்தி செய்க.
வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? வெளிநாடு செல்வோர் Smart Vaccination Certificate பெறுவது எவ்வாறு ? Reviewed by irumbuthirai on August 28, 2021 Rating: 5

பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்:

August 27, 2021
 
2020/2021 ஆம் கல்வி ஆண்டுக்காக பல்கலைக்கழகத்திற்கு மாணவர்களை அனுமதிக்கும் செயற்பாட்டின் போது பாடசாலை காலத்தை உறுதிப்படுத்துவதற்காக இம்முறை பரீட்சைத் திணைக்களம் Online முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. 
 
பாடசாலைகள் தற்போது மூடப்பட்டுள்ளதாலும் கொரோனா நிலையை கருத்தில் கொண்டும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
 
பரீட்சைத் திணைக்கள இணையதளத்திற்கு சென்று அந்தந்த பாடசாலைகளுக்கு வழங்கப்பட்டுள்ள UserName, Password என்பவற்றை உட்செலுத்தி இந்த விடயத்தை வழங்கலாம். இதற்கான அறிவுறுத்தல்கள் அங்கே வழங்கப்பட்டுள்ளன. 
 
பரீட்சைத் திணைக்களத்தின் குறித்த இணைப்பிற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: பல்கலைக்கழக அனுமதிக்காக Online முறையில் பாடசாலை காலத்தை உறுதிப்படுத்தல்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம்

August 27, 2021
 

காபூல் விமான நிலையத்தில் தாக்குதல் நடத்தியவர்களை மன்னிக்கவும் மாட்டோம். மறக்கவும் மாட்டோம். அவர்களை குறிவைத்து வேட்டையாடுவோம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தனது விசேட உரையில் தெரிவித்துள்ளார். 
 
அமெரிக்காவை ஒரு  போதும் பயங்கரவாதிகளால்  

தடுக்க முடியாது" என்று அதிபர் பைடன் கூறியுள்ளார். 
 
தாலிபன்கள் திறந்துவிட்ட சிறைகளில் இருந்து வந்தவர்கள்தான் தாக்குதல் நடத்தியிருக்கலாம் என்று அவர் தனது உரையில் மறைமுகமாகக் குறிப்பிட்டார். 
 
இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ISIS-K என்றழைக்கப்படும் 

அமைப்பையும் ஜோ பைடன் குறிப்பிட்டதோடு மீட்புப் பணிகளை நிறுத்தப் போவதில்லை தொடர்ந்து செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார். 
 
ISIS அமைப்பின் ஆப்கானிஸ்தானுக்கான ஒரு பிரிவாக செயல்பட்டு வருவதே ISIS-K அமைப்பாகும். 
 
இந்த இரட்டை குண்டு வெடிப்புகளில் அமெரிக்க மீட்புப்படையைச் சேர்ந்த 13 பேர் உள்பட 90-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். 150-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 
 
மெரைன்ஸ் எனப்படும் அமெரிக்காவின் சிறப்புப் படைப் பிரிவைச் சேர்ந்த 11 பேரும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். 
 
கடந்த பெப்ரவரிக்கு பின்னர் அமெரிக்க 
 
ராணுவத்திலனர் கொல்லப்படுவது இதுவே முதல் தடவையாகும். 
 
எவ்வாறாயினும் தற்போதும் பொது மக்கள் பலரும் பல்வேறு சோதனை சாவடிகளை கடந்தும் விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
 
இதனிடையே கனடா, பெல்ஜியம், நெதர்லாந்து மற்றும் டென்மார்க் உட்பட பல நாடுகள் ஏற்கனவே தமது மீட்பு நடவடிக்கைகளை நிறுத்திவிட்டன. 
 
விமான நிலையத்தில் கடந்த 06 ஆண்டுகளாக பாதுகாப்பு அளித்து வந்த துருக்கி தனது படைகளை வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.
மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் மன்னிக்கவும் மாட்டோம், மறக்கவும் மாட்டோம் - ஜோ பைடன் ஆவேசம் Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்:

August 27, 2021

புதிதாக நியமிக்கப்பட்ட கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவுக்கும் அதிபர் ஆசிரியர் தொழிற்சங்கங்களுக்குமிடையிலான சந்திப்பு நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. 
 
கல்வி அமைச்சருடனான இந்த சந்திப்பு சாதகமாக அமைந்ததாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
 
இதன்போது, ஆசிரியர்கள் - அதிபர்களின் பிரச்சினைகள் தொடர்பில் அமைச்சரவை உபகுழு சமர்ப்பித்துள்ள பரிந்துரைகளுடன் ஆசிரியர் சங்கத்தின் பரிந்துரைகளையும் இணைத்து எதிர்வரும் 
 
திங்கட் கிழமை அமைச்சரவையில் சமர்ப்பிக்குமாறு தொழிற்சங்கங்கள் அமைச்சரிடம் வேண்டுகோள் விடுத்ததாக அவர் தெரிவித்தார். 
 
மேலும் தற்போதைய தொழிற்சங்க நடவடிக்கைகளைக் கைவிடுவதற்காக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான யோசனைகளையும் முன்வைத்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: முதன் முறையாக தொழிற்சங்கங்களை சந்தித்த புதிய கல்வி அமைச்சர்: Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

August 27, 2021

இவ்வருடத்திற்குரிய புலமைப் பரிசில் பரீட்சை மற்றும் உயர்தர பரீட்சை என்பவற்றுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டாலும் 
 
பரீட்சைகள் உரிய தினத்தில் நடத்தப்படும் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் பரீட்சைக்குரிய தினங்களில் ஏதாவது திருத்தங்கள் மேற்கொள்ளப்படுமாயின் அது தொடர்பான தீர்மானம் அடுத்துவரும் ஓரிரு வாரங்களுக்குள் மேற்கொள்ளப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். 
 
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை நவம்பர் மாதம் 14 ஆம் திகதியும் உயர்தரப் பரீட்சை நவம்பர் 15 முதல் டிசம்பர் 10 வரை நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! பரீட்சைகள் பிற்போடப்படுமா? கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு!

August 27, 2021
இவ்வருடத்திற்குரிய கல்விப் பொதுத் தராதர உயர் தரம் மற்றும் புலமைப்பரிசில் பரீட்சை ஆகியவற்றுக்கு இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்களுக்காக இரண்டு வாரங்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. 
 
அந்த வகையில் குறித்த பரீட்சைக்கு 
 
இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் செப்டம்பர் 15 வரை விண்ணப்பிக்கலாம் என பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித இன்று தெரிவித்துள்ளார்.
உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! உயர்தர மற்றும் புலமைப்பரிசில் பரீட்சைக்கான விண்ணப்ப திகதி இரு வாரங்கள் நீடிப்பு! Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு

August 27, 2021

தற்போது நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். 
 
ஜனாதிபதி தலைமையில் இன்று நடைபெற்ற கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். 
 
அந்தவகையில் தற்போது நடைமுறையிலுள்ள 
 
ஊரடங்கு செப்டம்பர் 6ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். 
 
ஊரடங்கானது ஏற்கனவே இம்மாதம் 30 ஆம் திகதி அதிகாலை 04 மணிவரை போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு மேலும் நீடிக்கப்பட்டது ஊரடங்கு: வெளியான அறிவிப்பு Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன?

August 27, 2021

காபூல் விமான நிலையம் அருகில் இன்றைய தினம் இரட்டை தாக்குதல் நடந்துள்ளது. 

முதலாவது தாக்குதல் விமான நிலையத்தின் அப்பி வாயில் பகுதியில் நடந்துள்ளது. மற்றொன்று அந்த வாயில் பகுதியில் இருந்து சில அடி 
தூரத்தில் இருக்கும் பேரன் விடுதி அருகேயும் நடத்தப்பட்டுள்ளது. 

இந்த பகுதிகள்தான் வெளிநாட்டு பயணிகள் அதேபோன்று மேற்கு நாடுகளுக்கு அகதிகளாகச் செல்பவர்களுக்கு காத்திருக்க ஒதுக்கப்பட்ட பகுதிகளாகும். 

இந்தத் தாக்குதல்கள் இன்று மாலை 5:45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. 

இதில் இதுவரை 13 பேர் மரணித்திருக்கலாம் எனவும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்திருக்கலாம் எனவும் தலிபான் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. 

இந்தத் தற்கொலைத் தாக்குதல்களுக்கு காரணம் ISIS அமைப்பு என சந்தேகிக்கப்படுகிறது. 

தாக்குதல் இடம்பெற்ற 90 நிமிடங்களுக்குள் சுமார் 60 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக நகரிலுள்ள முக்கிய மருத்துவமனையின் தகவல் தெரிவிக்கிறது. 

தமது நாட்டு வீரர்களும் இதில் கொல்லப்பட்டுள்ளனர் என அமெரிக்காவின் பென்டகன் அறிவித்துள்ளது. 

தமது நாட்டைச் சேர்ந்த எந்த வீரர்களும் கொல்லப்படவில்லை என இங்கிலாந்து அறிவித்துள்ளது. 

ஆப்கானிய வான்பரப்பில் தமது விமானங்கள் 25,000 அடிக்கு கீழே பறக்கக் கூடாது என இங்கிலாந்து உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அமெரிக்க படைகளின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் இந்த தாக்குதல் நடந்துள்ளது என தலிபான் குற்றம்சாட்டியுள்ளது.
காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? காபூல் இரட்டைத் தாக்குதல்: நடந்தது என்ன? Reviewed by irumbuthirai on August 27, 2021 Rating: 5

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)

August 26, 2021

கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி கோதாபய ராஜபக்ஷ நியமித்துள்ளார். 

இது தொடர்பான அதிவிசேட வர்த்தமானியும் வெளியிடப்பட்டுள்ளது. 

கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேரா மற்றும் பல்கலைக்கழக உபவேந்தர்கள் உட்பட 31 பேர் இந்த செயலணிக்கு நியமிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வர்த்தமானியை கீழே காணலாம்.



கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு) கல்விச் செயற்பாடுகள் தொடர்பான செயலணிக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் (விசேட வர்த்தமானி இணைப்பு)  Reviewed by irumbuthirai on August 26, 2021 Rating: 5
Powered by Blogger.