பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான அறிவிப்பு!



பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பை பல்கலைக்கழக பேராசியர்கள் சங்கங்களின் சம்மேளனம் விடுத்துள்ளது. 

அதாவது உயர்கல்வி அமைச்சின் அனுமதியின்றி பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல முடியாது என அச்சங்கம் தெரிவித்துள்ளது. யாராவது அவ்வாறு இரகசியமாக வெளிநாடுகளுக்கு சென்றிருந்தால் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும் என குறித்த சங்கத்தின் பேச்சாளர் சிரேஷ்ட விரிவுரையாளர் சாருதத்த இளங்கசிங்ஹ நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். 

இது மாத்திரமன்றி அடுத்த வருடத்திற்குள் 26 வீதமான பல்கலைக்கழக பேராசிரியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் அபாயம் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.


Previous:



பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான அறிவிப்பு! பல்கலைக்கழக விரிவுரையாளர்களுக்கான அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on August 15, 2023 Rating: 5

No comments:

Powered by Blogger.