மத்திய கிழக்கு போர் சூழல் காரணமாக ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலைமையை கருத்தில் கொண்டு அரச நிறுவனங்கள், பாடசாலைகள் என்பவற்றுக்கு ஒவ்வொரு புதன் கிழமையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பாடசாலை நடவடிக்கைகளை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் என்ற விடயம் தொடர்பில் கல்வி அமைச்சு சுற்றறிக்கை கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில்,
- மறு அறிவித்தல் வரை கல்வி சுற்றுலாக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தம்.
- வரையறுக்கப்பட்ட பாட நேரத்தில் பாடவிதானங்கள் முடிக்கப்பட உள்ளதால் ஏனைய விழாக்கள் நடத்துவதை தடை செய்தல்.
- புதன்கிழமை விடுமுறை என்பதனால் வீட்டில் இருக்கும் மாணவர்களுக்கு மேலதிக கற்றல் செயல்பாடுகளை பொருத்தமான முறையில் வழங்குதல்.
- முழுமையான வழிகாட்டல்கள் பின்னர் வெளியிடப்படும்.
தற்போது வெளியிடப்பட்ட சுற்றறிக்கை கடிதம் கீழே காணலாம்.
Previous:
எரிபொருள் நெருக்கடி: கல்வி அமைச்சு வெளியிட்ட அறிவித்தல்கள்! (சுற்றுநிருப கடிதம் இணைப்பு)
Reviewed by Irumbu Thirai News
on
March 17, 2026
Rating:
Reviewed by Irumbu Thirai News
on
March 17, 2026
Rating:


No comments: