சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் WHO அவசர அனுமதி!

June 01, 2021

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் நோக்கில் அவசர தேவையின்போது பயன்படுத்த சீனாவின் மற்றுமொரு கொரோனா தடுப்பூசியான 
சினோவெக் (Sinovac) ற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) அனுமதி வழங்கியுள்ளது. 
ஏற்கனவே சீனாவின் சினோபார்ம் (Sinopharm) என்ற தடுப்பூசிக்கும் உலக சுகாதார ஸ்தாபனம் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் WHO அவசர அனுமதி! சீனாவின் மற்றுமொரு தடுப்பூசிக்கும் WHO அவசர அனுமதி! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO!

June 01, 2021

வைரஸானது அடிக்கடி தன்னை மாற்றிக் கொள்ளும். அந்தவகையில் கொரோனவைரஸ் கண்டறியப்பட்டது முதல் இதுவரை பல தடவைகள் தன்னை மாற்றிக் கொண்டுள்ளது. 
அதன் அடிப்படையில் பல நாடுகளில் இதன் புதிய திரிபுகள் கண்டறியப்பட்டு அவை வேகமாக பரவுவதோடு இழப்புக்களையும் அதிக அளவில் ஏற்படுத்துகின்றன. 
தற்போது இந்தத் திரிபுகளுக்கு உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) புதிய பெயர்களை அறிவித்துள்ளது. இந்தப் பெயர்கள் 
கிரேக்க மொழியை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளன. 
அந்த வகையில் பிரிட்டன் நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு அல்பா (Alpha) எனவும், தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு பீட்டா (Beta) எனவும் இந்தியாவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு டெல்டா (Delta) எனவும் பிரேசிலில் கண்டறியப்பட்ட வகை கGம்மா (Gamma) எனவும் அமெரிக்காவில் கண்டறியப்பட்ட கொரோனா திரிபு எப்சிலன் (Epsilon) எனவும் பிலிப்பைன்ஸ் கண்டறியப்பட்ட திரிபு ´தீட்டா (Theta) எனவும் இந்தியாவில் ஏற்கனவே கண்டறியப்பட்ட திரிபு கப்பா (Kappa) எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
புதிய பெயர்கள் தொடர்பான பட்டியலை கீழே காணலாம். 
• Kent / B.1.1.7 - Alpha 
• South Africa / B.1.351 - Beta 
• Brazil / P.1 - Gamma 
• India / B.1.617.2 - Delta 
• US / B.1.427 / B.1.429 - Epsilon 
• Brazil / P.2 - Zeta 
• B.1.525 - Eta 
• Philippines / P.3 - Theta 
• US / B.1.526 - Iota 
• India / B.1.617.1 - Kappa 
இதன் விஞ்ஞான ரீதியான பெயர்கள் புழக்கத்திற்கு மிகவும் கடினம் என்பதனால் இந்தப் புதிய பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO! கொரோனா திரிபுகளுக்கு புதிய பெயர்களை அறிவித்தது WHO! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்!

June 01, 2021

கடந்த 2020 ஓகஸ்ட் 05ஆம் திகதி 9ஆவது பாராளுமன்றத்திற்கான தேர்தல் இடம்பெற்றது. அதற்கமைய, ஐ.தே.க.வுக்கு கிடைந்த ஒரேயொரு தேசியப்பட்டியல் எம்.பி. பதவிக்கு, சுமார் 9 மாதங்கள் கழிந்த நிலையில் அக்கட்சி நேற்று (31) தீர்மானமொன்றுக்கு வந்தது. 
அதாவது கட்சியின் தலைவரும், முன்னாள் பிரதமருமான ரணில் விக்ரமசிங்கவை குறித்த எம்.பி. பதவிக்கு நியமிப்பதென கட்சியின் செயற்குழு ஏகமனதாக முடிவு செய்துள்ளதாக, கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன தெரிவித்துள்ளார். 
இதுவரை 224 பேருடன் இயங்கிய பாராளுமன்ம் தற்போது முழுமையடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்! பாராளுமன்றம் செல்லும் ரணில்: 9 மாதங்களின் பின் தீர்மானம்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

புகழ்பெற்ற டாஸன் (Tarzan) தொடர் நடிகரும் மனைவியும் மரணம்!

June 01, 2021

புகழ் பெற்ற டாஸன்(Tarzon) தொடரில் டாஸன் கதாபாத்திரத்தில் நடித்த மூத்த அமெரிக்க பிரபல நடிகர் ஜோ லாராவும் அவரது மனைவியும் விமான விபத்தில் இறந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
அமெரிக்காவின் நாஷ்வில் நகரத்திற்கு அருகே விமானம் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த 07 பேருமே கொல்லப்பட்டுள்ளனர். 
58 வயதான லாரா, உலகப் புகழ்பெற்ற நடிகர். இவர் முதலில் டார்சானாக 1989 ஆம் ஆண்டில் வெளியான "டார்சன் இன் மன்ஹாட்டன் (Tarzan in Manhattan)" திரைப்படத்திலும் பின்னர் 1996 ஆம் ஆண்டு தொலைக்காட்சி தொடரான "டார்சன் தி எபிக் அட்வென்ச்சர்ஸ் (Tarzan The Epic Adventures)" இலும் நடித்தார்.
புகழ்பெற்ற டாஸன் (Tarzan) தொடர் நடிகரும் மனைவியும் மரணம்! புகழ்பெற்ற டாஸன் (Tarzan) தொடர் நடிகரும் மனைவியும் மரணம்! Reviewed by irumbuthirai on June 01, 2021 Rating: 5

பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி!

May 31, 2021

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி குருணாகலை மேயர் துஷார சஞ்ஜீவ விதாரணவின் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்விற்கு 
பொலிஸ் நிலையத்தினுள் அனுமதி அளித்தமைக்காக உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரை இடமாற்ற பொலிஸ் தலைமையகம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
இதேவேளை பொலிஸ் மா அதிபரின் உத்தரவின் பேரில் விஷேட விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார். 
நேற்று (30) இடம்பெற்ற இந்த பிறந்தநாள் கொண்டாட்டம் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பல்வேறு விமர்சனங்களுக்கு உள்ளாகியமை குறிப்பிடத்தக்கது.
பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி! பொலிஸ் நிலையத்தில் பிறந்தநாள் கொண்டாடிய மேயர்: பொலிஸ் தலைமையகத்தின் அதிரடி! Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது...

May 31, 2021

நுரைச்சோலை பொலிஸ் காவலரணில் கடமையிலிருந்த பொலிஸ் அதிகாரிகள் இருவர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார். 
அதாவது தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர் ஒருவரிடமிருந்து 
2,000 ரூபாய் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவரை விடுவித்தமைக்காகவே இவ்வாறு இவர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது... தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய நபர்: லஞ்சம் பெற்ற போலீசாருக்கு நடந்தது... Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா?

May 31, 2021

சீனா பங்களாதேஷிற்கு தடுப்பூசியை வழங்கும் விலையைவிட இலங்கைக்கு அதிக விலையில் விற்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்படுகின்றன. 
15 மில்லியன் Sinopharm தடுப்பூசிகளை பெறுவதற்காக 150 மில்லியன் அமெரிக்க டொலர் ஒதுக்கீட்டிற்கு தமது நாட்டின் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதாக, பங்களாதேஷ் பிரதமர் ஷெய்க் ஹசீனாவின் விசேட உதவியாளர் ஷாஹ் அலி ஃபர்ஹத் கடந்த 27 ஆம் திகதி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். 
அப்படி என்றால் ஒன்றுக்கு 10 டாலர் அறவிடப்படுகிறது. இதேவேளை சீனா இலங்கைக்கு 
15 டொலருக்கு வழங்குகிறது. 
இது தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில் இலங்கையிலுள்ள சீன தூதரகம் "பங்களாதேஷ் மற்றும் Sinopharm குழுமத்திற்கு இடையிலான பெறுகை உடன்படிக்கை இன்னமும் இறுதியாகவில்லை" என ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளது. 
சீனா ஒரே தடுப்பூசியை வெவ்வேறு நாடுகளுக்கு மாறுபட்ட விலையில் விற்பனை செய்வதற்கான காரணம் என்ன என இலங்கை பிரஜை ஒருவர் வினவியதற்கு, 
இது மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கும் பொதுவான காரணியாகும் என பதில் அளித்துள்ளது.
இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா? இலங்கைக்கு அதிக விலையில் தடுப்பூசியை வழங்கும் சீனா? Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி!

May 31, 2021

தடுப்பூசியை கொள்வனவு செய்ய போதியளவு பணம் இல்லை என சிலர் முன்வைக்கின்ற கருத்துக்களை நிராகரிப்பதாகவும் தேவையான சகலருக்கும் எதிர்வரும் 03 மாதங்களுக்குள் கொரோனா தடுப்பூசி ஏற்றப்படும் என்று வெகுஜன ஊடக அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்ல தெரிவித்தார். 
நேற்று முன்தினம் (29) மத்திய மாகாண ஆளுநர் அலுவலகத்தில் இடம்பெற்ற கொரோனா கட்டுப்பாடு மற்றும் முன்னேற்ற மறுஆய்வுக் கூட்டத்தின் பின்னர் அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இவ்வாறு குறிப்பிட்டார். 
உலகில் கிட்டத்தட்ட 50 நாடுகள் எந்தவொரு தடுப்பூசியையும் கொள்வனவு செய்ய முடியாமலுள்ள சந்தர்ப்பத்தில் இலங்கைக்கு தடுப்பூசியை பெற்றுக்கொள்வதற்கு முடியுமாக இருப்பது எமக்குக் கிடைத்த பெரும் வெற்றி என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி! மூன்று மாதத்திற்குள் சகலருக்கும் தடுப்பூசி! Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்)

May 31, 2021

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்குரிய சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள் என்ற பாடத்தை இங்கு தருகிறோம். 
இதில், 

மாணவர்கள் ஆர்வத்துடன் கற்கும் வகையில் வடிவமைப்பு 

 

இலகுவான விளக்கங்கள் 

 

சுயமாக கற்கும் முறையில் விளக்கங்கள் 

 

படங்கள், ஒலிகள் என்பவற்றைக் கொண்டும் விளக்கங்கள் 

 

குறித்த பாடத்தை முழுமையாக பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


Join our WhatsApp Group:


Join our Telegram Channel:

Like our FB Page:




தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்) தரம்: 5 புலமைப்பரிசில் பரீட்சை (சுற்றாடல் சார்ந்த செயற்பாடுகள்) Reviewed by irumbuthirai on May 31, 2021 Rating: 5

தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages)

May 30, 2021

2022 ஆம் வருடத்திற்காக தரம் 01 ற்கு மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் மற்றும் அறிவுறுத்தல்களை கல்வியமைச்சு வெளியிட்டுள்ளது. அறிவுறுத்தல்களில் குறிப்பிடப்பட்ட முக்கிய விடயங்கள் சிலவற்றை இங்கு தருகிறோம்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 30-06-2021.

 

2022 ஜனவரி 31ஆம் திகதிக்குள் பிள்ளைக்கு 5 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். 

 

2022 ஜனவரி 31 ஆம் திகதியன்று 06 அல்லது 06 வயதை விடக்கூடிய பிள்ளைகள், 06 வயதுக்கு குறைந்த தகைமைகளையுடைய சகல பிள்ளைகளையும் அனுமதித்த பின்னரே சேர்த்துக்கொள்ளப்படுவர். 

 

ஒரு வகுப்பில் உச்சபட்சம் 40 மாணவர்கள் இணைக்கப்படுவார்கள். 35 மாணவர்கள் நேர்காணல் மூலமாக தெரிவு செய்யப்படுவார்கள் என்பதோடு, மேலும் 05 பேர் சேவையிலுள்ள முப்படைகள் மற்றும் பொலிஸாரின் பிள்ளைகள் தெரிவு செய்யப்படுவார்கள். 

 

அனுமதிக்கப்பட்டுள்ள வசதிக் கட்டணம், சேவைக் கட்டணங்கள், பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்புரிமை கட்டணங்களைத் தவிர, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ எந்தவொரு மேலதிக கட்டணங்களையோ, நிதிகளையோ, வேறு பொருட்களையோ, பாடசாலைக்கோ, பாடசாலையுடன் தொடர்பான நிறுவனங்களுக்கோ, 3ஆம் தரப்பிற்கோ வழங்குவது முற்றகாக தடை செய்யப்பட்டுள்ளது. பிள்ளைகளை பாடசாலையில் அனுமதித்த பின்னரும் அத்தகைய செயற்பாடுகளை மேற்கொள்ளப்படக் கூடாது. அவ்வாறு மேற்கொள்வது சட்டவிரோதமானது எனவும், அவை தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. 

 

பெற்றோர்/சட்டரீதியான பாதுகாவலர்கள் ஒரு பாடசாலையில் ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளுக்கு விண்ணப்பிக்க தகைமை பெற்றிருப்பின் அந்த ஒவ்வொரு வகைக்கும் வெவ்வேறாக விண்ணப்பங்களை அனுப்புதல் வேண்டும்.

 

கடித உறையின் இடது பக்க மேல் மூலையில் வகை தெளிவாக குறிப்பிடப்படல் வேண்டும். 

இது தொடர்பான முழுமையான விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள் என்பவற்றை கீழே மும்மொழிகளிலும் தருகிறோம்.

தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. Click the link below for details in English language.
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. Click the link below for Sinhala language details.



Join our WhatsApp Groups:

தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages) தரம்: 01 மாணவர் அனுமதி - 2022 (மும்மொழிகளிலும் விபரங்கள் இணைப்பு) / Grade: 1 Admission - 2022 (Application & Instructions in 3 Languages) Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு

May 30, 2021

கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது முதல் இன்றுவரை ஆயிரக்கணக்கான முறையில் வைரஸ் திரிபுகள் நடைபெற்றுள்ளமை கண்டறியப்பட்டுள்ளன. 
வைரஸ்களில் எப்போதும் பிறழ்வுகள் (திரிபுகள்) ஏற்பட்டுக் கொண்டுதான் இருக்கும். ஆனால் சில பிறழ்வுகள் முக்கியமற்றதாக இருக்கலாம். ஆனால் சில திரிபுகள் வீரியம் கொண்டதாக மாறிவிடுகிறது. 
அந்த வகையில் இந்திய கொரோனா திரிபும் இங்கிலாந்து கொரோனா 
திரிபும் சேர்ந்த புதிய வகையான கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் குயேன் தெரிவித்தார் என ராய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது. 
இந்த புதிய வகையானது பழைய வகை வைரஸ்களை காட்டிலும் வேகமாகப் பரவி வருகிறது. குறிப்பாக இந்த வகை காற்றில் வேகமாகப் பரவி வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 
இந்தியாவில் B.1.617.2 என்ற புதிய வகை வைரஸ் முதன்முதலில் கடந்த வருடம் அக்டோபர் மாதம் கண்டறியப்பட்டது. இந்த வகை பிரிட்டன் வகை என்று சொல்லக்கூடிய B.1.1.7-ஐ காட்டிலும் வேகமாக பரவக் கூடியது என நிபுணர்கள் கண்டறிந்தனர். தற்போது இந்த இரண்டு வகையான வைரஸ் திரிபுகளையும் கலந்த ஒரு வைரஸ் திரிபே வியட்நாமில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
குறைந்த எண்ணிக்கையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நாடுகளில் வியட்நாமும் உள்ளடங்குகிறது. இன்றுவரை அந்நாட்டில் சுமார் 
6,700 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் கடந்த மாதத்தில் (ஏப்ரல்) இருந்து இனங்காணப்பட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தற்போது அங்கு முன்னரை விட வேகமாக பரவி வருகிறது. 
இதேவேளை ஃபைசர் மற்றும் ஆஸ்ட்ராசெனகா தடுப்பு மருந்துகள் இந்த வகையான வைரஸிற்கு எதிராக சிறப்பாக செயல்படுகிறது என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு இதுவரை இல்லாத புதிய கொரோனா வைரஸ் வியட்நாமில் கண்டுபிடிப்பு Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச..

May 30, 2021

கொரோனா தொற்று காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்ட மற்றும் அநீதி இழைக்கப்பட்ட குழுவினராக 
விஷேட தேவையுடையவர்களைக் குறிப்பிடலாம். தடுப்பூசி பட்டியலில் இவர்கள் சேர்க்கப்படவில்லை. அவர்களின் வாழ்வாதாரங்கள் கூட வீழ்ச்சி அடைந்துவிட்டதாக தெரிவித்த எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச விஷேட தேவையுடையவர்களுக்கும் தடுப்பூசியை வழங்குமாறு விஷேட கோரிக்கையை முன்வைத்துள்ளார். 
அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. பட்டியலில் இல்லாத குழுவினருக்காக தடுப்பூசி கோரும் சஜித் பிரேமதாச.. Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5

ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்:

May 30, 2021

கொரோனாவினால் மரணிப்போரை அடக்கம் செய்யும் ஒட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சூடுபத்தினசேனை (மஜ்மா நகர்) மையவாடியில் நேற்று (29) சனிக்கிழமை வரை 322 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளதாக ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர் தெரிவித்துள்ளார். 
இதில் முஸ்லிம் ஜனாஸாக்கள் 
298, இந்து 11, கிறிஸ்தவம் 08, பௌத்தம் 03, வெளிநாட்டவர்கள் 02 (நைஜீரியா மற்றும் இந்தியா) உட்பட 322 சடலங்கள் நேற்று வரை அடக்கம் செய்யப்பட்டுள்ளது. 
இதேவேளை நேற்று மாத்திரம் 21 ஜனாசாக்கள் நல்லடக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்: ஓட்டமாவடியில் இதுவரை அடக்கம் செய்யப்பட்ட கொரோனா மரணங்களின் விபரம்: Reviewed by irumbuthirai on May 30, 2021 Rating: 5
Powered by Blogger.