உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே

September 07, 2021
 

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக தனது கருத்தை தவறாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு பிரிவு தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். 
 
தனது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
30-40 நிமிட வெபினாரில் ஒரு வாக்கியத்தை எடுத்து தவறாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாடசாலைகளை தற்போது மீளத் திறக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. தனிநபர்களை தவறாக மேற்கோள் காட்டுவதையும் உள்ளடக்கத்திற்கு வெளியே 
 
மேற்கோள் காட்டுவதையும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
அவரது பேஸ்புக் பதிவிற்கு செல்ல..
உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

BBA வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதிபெற்றோர் (பேராதனைப் பல்கலைக்கழகம்) - 2020/ 2021.

September 07, 2021
 

பேராதனைப் பல்கலைக் கழகத்தினால் Online முறையில் நடாத்தப்படும் வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதி பெற்றோரின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
 
பெயர்ப் பட்டியலையும் இந்த பாடநெறி தொடர்பான முழுமையான விபரங்களையும் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.

இது தொடர்பான முன்னைய பதிவு:
BBA வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதிபெற்றோர் (பேராதனைப் பல்கலைக்கழகம்) - 2020/ 2021. BBA வெளிவாரி பட்ட பாடநெறிக்கு தகுதிபெற்றோர் (பேராதனைப் பல்கலைக்கழகம்) - 2020/ 2021. Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து:

September 07, 2021
 

பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கு உரிய பொருத்தமான திட்டங்களை கல்வி அமைச்சு முன்வைக்கும் பட்சத்தில் அதற்கான அனுமதி வழங்கலாம் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். 
 
எவ்வாறாயினும் பாடசாலைகளை மீள ஆரம்பிப்பதற்கான பொருத்தமான சூழல் இதுவரை இல்லை என அவர் தெரிவித்தார். 
 
இதேவேளை சுகாதாரத் தரப்பு அனுமதி வழங்கினால் பாடசாலைகளை மீள ஆரம்பிக்கலாம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து: பாடசாலைகளை மீள ஆரம்பித்தல் தொடர்பில் சுகாதார தரப்பின் கருத்து: Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள்

September 07, 2021
 

06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட தீர்மானங்களை இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய தீர்மானங்கள் அடங்கியுள்ளன. 
 
இதன் முழு வடிவத்தைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய அமைச்சரவை கூட்ட தீர்மானங்களைப் பார்வையிட...
06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் 06.09.2021 அன்று நடைபெற்ற அமைச்சரவை கூட்ட தீர்மானங்கள் Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல்

September 07, 2021
 

2017/2019 கட்டுறுப் பயில்வை முடித்த மற்றும் சித்தியடையாதவர்களுக்கான இறுதிப் பரீட்சை தொடர்பான தீர்மானம் அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
அவை பின்வருமாறு: 
 1. வாண்மைத்துவ பாடங்களுக்கு தற்போது கல்வியியல் கல்லூரிகளில் குறித்த பாடங்களுக்கு வழங்கப்பட்ட உள்ளக புள்ளிகளின் 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல் 
 
2. பிரதான பாடங்கள் மற்றும் துணை பாடங்களுக்கு கல்லூரிகளில் உள்ளக ரீதியாக வழங்கப்பட்ட 60 வீத புள்ளிகளை 100 வீதமாக மாற்றுதல் 
 
 3. பிரயோகப் பரீட்சைகள் (Practical Test) உள்ள பாடங்களுக்கு, உள்ளக பிரயோகப் புள்ளிகளை இறுதிப் புள்ளிகளாக கணிப்பிடுதல் 
 
4. விசேட பாடத்துறை தொடர்பான விடய அறிவை மற்றும் ஆசிரியர் தேர்ச்சிகளை மதிப்பீடு செய்ய பரீட்சை ஒன்றை நடாத்துதல் 
 
5. பிரதான பாடத்துறையை மையமாகக் கொண்டு பாடசாலை கலைத் திட்டத்தில் குறித்த பாடத்தை தெரிவு செய்து, குறிப்பிட்ட தேர்ச்சியின் கீழ் ஒரு தேர்ச்சி மட்டப் பாடமொன்றை தெரிவு செய்து, முன்வைக்கும் முறையைப் பரீட்சிப்பது இதன் ஊடாக எதிர்பார்க்கப்படுகிறது. 
 - குறித்த பாடத்தை கற்பிப்பதற்கு பயன்படுத்த முடியுமான வேறு முறைகளை விளக்குதல் 
 - குறித்த பாடத்தைக் கற்பிப்பதற்கு கல்வி உளவியலின் பிரயோகத்தை குறிப்பிடுதல் 
- கற்றல் கற்பித்தலில் பயன்படுத்தத்தக்க துணை சாதனங்களைத் தெரிவு செய்யும் போது கவனிக்க வேண்டிய 3 விடயங்கள் 
 - கல்வி சமூகவியல் அறிவை பயன்படுத்துவற்கான சந்தர்ப்ப உதாரணம் ஒன்றை வழங்குதல் 
 - கல்வி ஆலோசனையும் வழிகாட்டலும் பாட அறிவு பயன்படுத்தத்தக்க முறையை சுருக்கமாக விளக்குதல் 
 - ஆசிரியர்களாக பின்பற்றத்தக்க விழுமியங்கள் 3 ஐக் குறிப்பிடல்
- குறித்த பாட உள்ளடக்கம் தொடர்பாக விடய அறிவைப் பரீட்சித்தல் 
- ஆசிரியர் மனப்பாங்களை அளவிடல் 
- புதிய தொழில்நுட்ப அறிவை மற்றும் Online கற்றல் கற்பித்தல் செயற்பாடுகளுக்கு ஏற்ப ஆசிரியர் வகிபாகம் மற்றும் சவால்களை வெற்றி கொள்ளல் தொடர்பாக விபரித்தல் 
 
 புள்ளி வழங்கல் 

1. மொத்த முன்வைப்பு - 30% 
 
2. கேட்கப்படும் கேள்விகளுக்கு விடையளித்தல் - 70% 
 
3. பெற்றுக் கொள்ளும் 40 விதத்தை பெற்றுக் கொண்டு கல்வி விடயங்களின் புள்ளிகளை சேர்த்தல் மொத்த முன்வைப்புக்கு 40 நிமிடங்கள் (முன்வைப்புக்கு 20 புள்ளிகளும் கேள்வி கேட்டலுக்கு 25 வினாவிடைகளுக்கு) 
 
4. குறித்த விடயப் பரப்பின் கருப்பொருள் கல்வியியல் கல்லூரிகளினால் இரு தினங்களுக்கு முன்னர் மாணவர்களுக்கு வழங்கப்படும் 
 
குறிப்பு: ஏற்கனவே நடைபெற்ற பரீட்சைகளில் சித்தியடையத் தவறியவர்களுக்கு ஒவ்வொரு பாடங்களுக்கும் விடயப் பரப்பு தொடர்பாக நேர்காணல் நடாத்தப்பட முன்மொழியப்படுகிறது.
Source: teachmore.
நன்றி: டீச்மோர்.
கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் கல்வியற் கல்லூரி இறுதிப் பரீட்சை தொடர்பான அறிவித்தல் Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing)

September 06, 2021
 


University Admission - 2021/2022. 

University of Colombo (School of Computing) 

Aptitude test results for B.Sc in Information System. 
 

 
 
 
பெறுபேறுகளைப் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.


இதுவரை வெளியான பெறுபேறுகள்:
 
 

 
 
Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing) Aptitude Test Results - 2021 (University of Colombo - School of Computing) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள்

September 06, 2021
 

ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது. 
 
2020 மற்றும் 2021ற்கான இறுதிப் பரீட்சைகளே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. பரீட்சை நடைபெறும் திகதி தொடர்பில் 
 
பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இந்த பரீட்சைகள் 21-09-2021 தொடக்கம் 26-09-2021 வரை நடைபெற இருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் ஒத்திவைக்கப்பட்டன ஆசிரியர் கலாசாலை பரீட்சைகள் Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo)

September 06, 2021
 

மனித வள முகாமைத்துவ டிப்ளோமா பாடநெறிக்காக கொழும்பு பல்கலைக் கழகத்தினால் விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன. 
 
தகைமை: 
உயர்தரத்தில் ஏதாவது பாட துறையில் 3 பாடங்களில் சித்தி. 
 
அல்லது 
 
அரச அல்லது தனியார் துறையில் 05 வருட வேலை அனுபவம். 
 
காலம்: 01 வருடம். 
 
பாடநெறி நடைபெறுவது: ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம். 
 
விண்ணப்ப கட்டணம்: 1500/- 
 
பாடநெறி கட்டணம்: 95,000/- 
 
மொழி மூலம்: ஆங்கிலம் / சிங்களம் 
 
விண்ணப்ப முடிவு திகதி: 15-09-2021. 
 
இது தொடர்பான முழுமையான விவரங்களை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக். 
 
Online விண்ணப்பப்படிவத்திற்கு செல்ல கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo) மனித வள முகாமைத்துவத்தில் டிப்ளோமா பாடநெறி / Diploma in Human Resources Management - 2021 (University of Colombo) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

Aptitude Test Results - 2021 (Uva Wellassa University)

September 06, 2021
 

பல்கலைக்கழக அனுமதி - 2021/2022 
(தெரிவு பரீட்சை பெறுபேறுகள்) 
 
பின்வரும் பாடநெறிகளுக்காக ஊவா வெல்லச பல்கலைக்கழகத்தினால் நடாத்தப்பட்ட தெரிவுப் பரீட்சையின் பெறுபேறுகள் வெளியிடப்பட்டுள்ளன. 
 
B.Sc (Hons) in Computer Science & Technology. 
B.Sc (Hons) Industrial Information Technology. 
BBM (Hons) in Entrepreneurship & Management. 
BBM (Hons) Hospitality, Tourism & Event Management 
 
பெறுபேறுகளை பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க.
 
இது தொடர்பான ஏனைய பதிவுகள்:
 
 
 
Aptitude Test Results - 2021 (Uva Wellassa University) Aptitude Test Results - 2021 (Uva Wellassa University) Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

B.Ed மற்றும் M.Ed க்கான விண்ணப்ப திகதி நீடிப்பு:

September 06, 2021
 

தேசிய கல்வி நிறுவகத்தினால் நடத்தப்படும் B.Ed மற்றும் M.Ed பாடநெறிகளுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது. 
 
தனிமைப்படுத்தல் ஊரடங்கு முடிவடைந்ததன் பின்னர் விண்ணப்பங்களை அனுப்புவதற்கு வசதியாக இது நீடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
புதிய விண்ணப்ப திகதி தொடர்பாக பின்னர் அறிவிக்கப்படும். 
 
தேசிய கல்வி நிறுவகத்தின் இது தொடர்பான அறிவித்தலை கீழே காணலாம்.

 Quick links for Online Application:
 
இது தொடர்பான முன்னைய பதிவு:

B.Ed மற்றும் M.Ed க்கான விண்ணப்ப திகதி நீடிப்பு: B.Ed மற்றும் M.Ed க்கான விண்ணப்ப திகதி நீடிப்பு: Reviewed by Irumbu Thirai News on September 06, 2021 Rating: 5

பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு!

September 05, 2021
 

என்ஆர்எஃப் (National Resistance Front - NRF) தலைவர் அஹ்மத் மசூத், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார். 
 
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபானுக்கும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை தொடர்கிறது, தலிபான் இன்னும் தமது கட்டுப்பாட்டில் வராத ஒரேயொரு மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. 
 
நூற்றுக்கணக்கான தலிபான் துருப்புக்களையும் அவர்களது உபகரணங்கள் 
 
மற்றும் வாகனங்களையும் கைப்பற்றியதாக எதிர்ப்பு போராளிகள் ஞாயிற்றுக்கிழமை(5) தெரிவித்தனர். 
 
ஆனால் பஞ்ச்ஷிரின் ஒரு சில மாவட்டங்களை தாம் கைப்பற்றி விட்டதாகவும் மாகாணத்தின் தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு! பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்:

September 05, 2021
 

குதிரைகளின் உடலில் புழுக்களால் ஏற்படும் பாதிப்பைத் தடுக்க பயன்படுத்தப்படும் ஐவர்மெக்டின் என்கிற மருந்தை கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்த வேண்டாம் என அமெரிக்க மருத்துவர் ஜேசன் மெக்எலியா வலியுறுத்தியுள்ளார். 
 
இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. ஐவர்மெக்டின் மருந்தை குறைந்த அளவில் மனிதர்கள் எடுத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் அது 
 
கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படவில்லை. மருத்துவர்கள் இந்த மருந்தைப் பரிந்துரைத்தால் மட்டுமே இம்மருந்து கிடைக்கும், காரணம் இது ஆபத்தான மருந்து. 
 
ஐவர்மெக்டினை அளவுக்கு அதிகமாக தவறாக எடுத்துக் கொள்வதால், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு ஏற்பட்டு இருக்கும் பாதிப்பை விட, மோசமாக அவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் என அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தைச் சேர்ந்த மருத்துவர் ஜேசன் மெக்எலியா கூறியுள்ளார். 
 
இந்த மருந்து இதுவரை கொரோனாவை குணப்படுத்தும் என நிரூபிக்கப்படவில்லை. இருப்பினும் கொரோனா சிகிச்சைக்கும், கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்க்கவும் உதவும் என இம்மருந்து விளம்பரப்படுத்தப்பட்ட போது பெரிதும் சர்ச்சையானது. அமெரிக்காவின் எஃப்.டி.ஏ எனப்படும் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், கடந்த மாதம், ஐவர்மெக்டினைப் பயன்படுத்த வேண்டாம் என ஒரு நீண்ட அறிக்கையையே வெளியிட்டது. 
மூலம்: பிபிசி
குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்: குதிரைக்கான மருந்து: கொரோனா சிகிச்சை தொடர்பில் எச்சரிக்கும் அமெரிக்க மருத்துவர்: Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்!

September 05, 2021
 

பதிவு செய்யும் போது நீங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்களின் நகல்களின் அடிப்படையில் தற்காலிக பதிவை வழங்க பல்கலைக்கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நாட்டில் கோவிட் -19 தொற்று நோயின் தற்போதைய நிலைமை காரணமாக, சான்றிதழ்களின் நம்பகத்தன்மையின் பௌதீக ரீதியான சரிபார்ப்பு தாமதமாகும். உங்கள் தகுதி அல்லது மாற்றுத் தகுதிகளை நிரூபிக்க நீங்கள் சமர்ப்பித்த சான்றிதழ்கள், இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் செனட் ஏற்றுக்கொள்ள முடியாதவை எனத் தெரிந்தால், உங்கள் பதிவை உடனடியாக ரத்து செய்யும் உரிமையை பல்கலைக்கழகம் கொண்டுள்ளது.
 

 
தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்! தற்காலிக பதிவு தொடர்பாக திறந்த பல்கலைக்கழகத்தின் அறிவித்தல்! Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5
Powered by Blogger.