உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே

 

பாடசாலைகளை மீள திறப்பது தொடர்பாக தனது கருத்தை தவறாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு பிரிவு தலைவர் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார். 
 
தனது முகநூல் பதிவிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 
 
30-40 நிமிட வெபினாரில் ஒரு வாக்கியத்தை எடுத்து தவறாக மேற்கோள்காட்டி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாடசாலைகளை தற்போது மீளத் திறக்க வேண்டும் என்று நான் கூறவில்லை. தனிநபர்களை தவறாக மேற்கோள் காட்டுவதையும் உள்ளடக்கத்திற்கு வெளியே 
 
மேற்கோள் காட்டுவதையும் இலங்கையில் உள்ள ஊடகங்கள் தவிர்ந்து கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
 
 
அவரது பேஸ்புக் பதிவிற்கு செல்ல..
உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே உடனடியாக பாடசாலைகளை மீளத் திறக்க வேண்டும் என நான் கூறவில்லை - நீலிகா மலவிகே Reviewed by Irumbu Thirai News on September 07, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.