தரம்:07 முதல் மாணவர்களுக்கு தடுப்பூசி:

 

உலக சுகாதார ஸ்தாபனம் உட்பட ஏனைய சில சர்வதேச நிறுவனங்கள் சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்துவது தொடர்பாக பரிந்துரைகளை முன்வைத்துள்ளன. 
 
அந்தவகையில் இலங்கையிலும் சிறுவர்களுக்கான தடுப்பூசி செலுத்தும் 
 
பணிகள் ஆரம்பிக்கப்பட்டதும் தரம் 7 முதல் 13 வரையிலான மாணவர்களுக்கு முதலில் தடுப்பூசி வழங்கலாம் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம்(9) Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
 
கல்விசார் மற்றும் கல்விசாரா ஊழியர்களுக்கு பூரணமாக தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ள நிலையில் பாடசாலை மாணவர்களுக்கும் தடுப்பூசி செலுத்தி முடிக்கப்பட்டதன் பின்னர் பாடசாலைகளை ஆரம்பிக்கலாம். 
 
கொரோனா பரவல் காரணமாக சுமார் ஒன்றரை வருடங்கள் மாணவர்கள் கல்வியில் பின் தங்கிய நிலையில் காணப்படுகிறார்கள். எனவே பாடசாலைகளை விரைவாக ஆரம்பிக்க தடுப்பூசியை விரைவாக வழங்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.
தரம்:07 முதல் மாணவர்களுக்கு தடுப்பூசி: தரம்:07 முதல் மாணவர்களுக்கு தடுப்பூசி:  Reviewed by Irumbu Thirai News on September 09, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.