முதற்கட்டமாக 3,000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை:

 

கிராமப்புறங்களில் உள்ள 100-க்கும் குறைந்தளவான மாணவர்களைக் கொண்ட சுமார் 3000 பாடசாலைகளை முதல் கட்டமாக திறப்பது தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தி உள்ளார். 
 
இன்றைய தினம் தொலைக்காணொளி ஊடாக நடைபெற்ற கொவிட் தடுப்பு செயலணி கூட்டத்தின்போதே ஜனாதிபதி இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்தார். 
 
இது தொடர்பாக ஆராய்ந்து பரிந்துரைகளை முன்வைப்பதற்கு சுகாதார மற்றும் கல்வித் துறை அதிகாரிகளைக் கொண்ட குழு ஒன்றிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைக்கவும் ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். 
 
கொரோனா நிலைமை காரணமாக நாட்டில் இதுவரை சுமார் ஏழு லட்சம் மாணவர்களுக்கு ஆரம்பக் கல்வியும் அதேபோன்று பல மாணவர்களுக்கு முன்பிள்ளைப் பருவ கல்வியும் கிடைக்காமல் போனமை தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

முதற்கட்டமாக 3,000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை: முதற்கட்டமாக 3,000 பாடசாலைகளை திறக்க நடவடிக்கை: Reviewed by Irumbu Thirai News on September 10, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.