2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் முதல் நாடு

 

2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடக்கூடிய உலகின் முதல் நாடாக கியூபா பதிவாகியுள்ளது. 
 
பாடசாலைகளை மீள திறப்பதற்கு முன் இந்த நடவடிக்கையை கியூபா அரசாங்கம் மேற்கொண்டுள்ளது. 
 
கடந்த வெள்ளிக்கிழமை ஆரம்பமான இந்த தடுப்பூசி வழங்கும் திட்டத்திற்காக கியூபாவில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகளே 
 
பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்தத் தடுப்பூசிக்கு உலக சுகாதார ஸ்தாபனத்தின் அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
இதேவேளை சீனா, ஐக்கிய அரபு ராச்சியம் உள்ளிட்ட சில நாடுகளும் பிள்ளைகளுக்கான தடுப்பூசி திட்டம் குறித்து அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் முதல் நாடு 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கு தடுப்பூசி போடும் முதல் நாடு Reviewed by Irumbu Thirai News on September 08, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.