பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு!

 

என்ஆர்எஃப் (National Resistance Front - NRF) தலைவர் அஹ்மத் மசூத், பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக தலிபான்களுடன் பேச்சுவார்த்தைக்கு தயார் என்று அறிவித்துள்ளார். 
 
ஆப்கானிஸ்தானின் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபானுக்கும் எதிர்ப்புப் படைகளுக்கும் இடையே கடுமையான சண்டை தொடர்கிறது, தலிபான் இன்னும் தமது கட்டுப்பாட்டில் வராத ஒரேயொரு மாகாணமான பஞ்ச்ஷிர் மாகாணத்தை கைப்பற்ற முயற்சிக்கிறது. 
 
நூற்றுக்கணக்கான தலிபான் துருப்புக்களையும் அவர்களது உபகரணங்கள் 
 
மற்றும் வாகனங்களையும் கைப்பற்றியதாக எதிர்ப்பு போராளிகள் ஞாயிற்றுக்கிழமை(5) தெரிவித்தனர். 
 
ஆனால் பஞ்ச்ஷிரின் ஒரு சில மாவட்டங்களை தாம் கைப்பற்றி விட்டதாகவும் மாகாணத்தின் தலைநகரை நோக்கி முன்னேறி வருவதாகவும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு! பேச்சுவார்த்தைக்கு தயார்! தலிபான் எதிரணியின் தலைவர் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on September 05, 2021 Rating: 5

No comments:

Powered by Blogger.