அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு)

December 11, 2021

அரச பாடசாலைகளின் கல்விசார் ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை பெற்றுக்கொடுத்தல் தொடர்பான 22/2021 இலக்கம் கொண்ட சுற்று நிருபத்தை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. 
 
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களின் கௌரவம் மற்றும் அடையாளத்தினை பாதுகாக்கும் வகையில் முக்கியமான முன்னெடுப்பாக நாட்டிலுள்ள சகல அரச பாடசாலைகளிலும் கடமையாற்றும் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டையை வழங்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. 

இதன் முதற்கட்டமாக இந்த வருடம் நடைபெற்ற ஆசிரியர் தின நிகழ்வின் போது சகல மாகாணங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய பாடசாலை அதிபர்கள் மற்றும் ஒருசில ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது. 
 
இரண்டாம் கட்டத்தில் தேசிய பாடசாலைகளில் எஞ்சிய அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகிறது. 
 
இதற்கு அடுத்த கட்டமாகவே மாகாண பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும். அது மாகாண கல்விச் செயலாளர் அல்லது மாகாணக் கல்விப்பணிப்பாளர் மூலமாக நடைமுறைப்படுத்தப்படும். 
 
விண்ணப்பபடிவம் தொடர்பான தேவையான விபரங்கள் google படிவத்தின் மூலமாக மட்டுமே கல்வி அமைச்சுக்கு அனுப்பப்பட வேண்டும். 
 
புகைப்படம் அமைய வேண்டிய முறை: 

அளவு: கடவுச்சீட்டுக்குரிய அளவு.  
பின்புலம்: இள நீல நிறம். 
 
ஆடை: ஆண்கள் - கழுத்துப்பட்டியுடனான மேற்சட்டை. பெண்கள் - சேலை.  
 
முகம்: முழுமையாக நெற்றியும் மற்றும் இரு காதுகளும் தெரிய வேண்டும். 
 
ஒரு புகைப்படத்தை தகவல் படிவத்தில் கழராத வகையில் ஒட்டுவதோடு மற்றைய புகைப்படத்தை JPEG முறையில் Google விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். 
 
இது தொடர்பான சுற்று நிருபத்தை கீழே காணலாம்.
 



அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) அதிபர் மற்றும் ஆசிரியர்களுக்கு உத்தியோகபூர்வ அடையாள அட்டை வழங்கல் (சுற்றுநிருபம் இணைப்பு) Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021

December 11, 2021

Official Government Gazette Released on 03-12-2021. 
 
03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
 
இதில் பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கைக் கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாகப் பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021 03-12-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette Released on 03-12-2021 Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்)

December 11, 2021

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகளுக்கான நாட்காட்டியை பரீட்சைத் திணைக்களம் வெளியிட்டுள்ளது. 12 வகையான பரீட்சைகள் டிசம்பர் மாதத்தில் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளன. 
 
குறித்த நாட்காட்டியை மும்மொழிகளிலும் இங்கே காணலாம்.

பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) பரீட்சை திணைக்களத்தால் 2022 ஜனவரி மாதம் நடத்தப்படும் பரீட்சைகள் (மும்மொழிகளிலும்) Reviewed by Irumbu Thirai News on December 11, 2021 Rating: 5

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு!

December 10, 2021

மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பான விபரங்களை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். 
 
அந்த வகையில் 16-19 வயதுக்குட்பட்டவர்களுக்கு இரண்டாவது தடுப்பூசியும் 12-15 வயதுக்குட்பட்டவர்களுக்கு முதலாவது தடுப்பூசியும் வழங்குவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக 

அவர் தெரிவித்துள்ளார். 
 
மேலும் இவ்வாறு தடுப்பூசிகள் வழங்கப்படும் திகதிகள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்குவது தொடர்பில் கல்வி அமைச்சரின் அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 10, 2021 Rating: 5

நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு!

December 10, 2021

2020 உயர் தரத்திற்கு தோற்றி பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை பதிவு செய்யும் நடவடிக்கை நீடிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. 
 
அந்த வகையில் இன்றுடன் நிறைவடையவிருந்த பதிவு செய்யும் நடவடிக்கை 

இம்மாதம் 16ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு! நீடிக்கப்பட்டது பல்கலைக்கழக மாணவர்களின் பதிவு! Reviewed by Irumbu Thirai News on December 10, 2021 Rating: 5

பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்!

December 08, 2021

அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் உள்ள ரோஹிங்யா அகதிகள் முகநூல் (FB) மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். 
 
தமக்கெதிரான வெறுக்கத்தக்க கருத்துக்களை முகநூலில் பதிவிட அனுமதி வழங்கியது தொடர்பில் 

150 பில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு கேட்டு இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. 
 
சிறுபான்மைக்கு எதிரான வன்முறைகளை ஊக்குவிக்கும் ஒரு தளமாக முகநூல் காணப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! பேஸ்புக் மீது வழக்கு பதிவு செய்த அகதிகள்! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு!

December 08, 2021

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பில் உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. 
 
அதாவது கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் இரத்தத்திலிருந்து 

பிளாஸ்மாவை எடுத்து இன்னொருவருக்கு சிகிச்சை அளிக்கும் முறையை செய்யவேண்டாம் என உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்துள்ளது. 
 
இந்த சிகிச்சை முறையினால் உயிர் பாதுகாப்பு அதிகரிக்கவில்லை எனவும் இதற்கான நேரம் மற்றும் செலவு என்பன அதிகமாக காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. 
 
அதாவது தீவிர நோய் நிலமை இல்லாதவர்களுக்கே இந்த சிகிச்சை அவசியம் இல்லை என கூறப்பட்டுள்ளது. 
 
கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதாகவும் எனவே அவர்களிடமிருந்து ரத்தத்தில் உள்ள பிளாஸ்மாவைப் பிரித்தெடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை வழங்குவது சிறந்த முறை எனவும் தெரிவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! கொரோனாவுக்கான சிகிச்சை தொடர்பில் WHO வின் முக்கிய அறிவிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 08, 2021 Rating: 5

26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 26-11-2021

December 06, 2021

Official Government Gazette released on 26-11-2021. 
 
26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானியை தமிழ், ஆங்கிலம், சிங்களம் ஆகிய மொழிகளில் இங்கு தருகிறோம். 
இதில், 
பல முக்கிய அறிவித்தல்கள் காணப்படுகின்றன. கீழே உள்ள உரிய லிங்கை கிளிக் செய்து உரிய மொழியில் முழுமையாக பார்வையிடுக. 
 
தமிழில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
ஆங்கிலத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
சிங்களத்தில் பார்வையிட கீழே உள்ள லிங்கை கிளிக் செய்க. 
 
முன்னைய வர்த்தமானி அறிவித்தலுக்கு செல்ல...
26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 26-11-2021 26-11-2021 அன்று வெளியான அரச வர்த்தமானி (மும்மொழிகளிலும்) / Official Government Gazette released on 26-11-2021 Reviewed by Irumbu Thirai News on December 06, 2021 Rating: 5

பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு!

December 03, 2021
 

பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு டிசம்பர் மாத விடுமுறை 23-ஆம் தேதி முதல் 27ம் திகதி வரை வழங்கப்பட ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்தது. 
 
தற்போது இந்த விடுமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் 

குறித்த விடுமுறையானது ஜனவரி 2 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 
 
எனவே டிசம்பர் விடுமுறை வழங்கப்பட்டு மீண்டும் பாடசாலை ஜனவரி 3 ஆம் திகதியே ஆரம்பிக்கப்படும் என அந்த அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு! பாடசாலை விடுமுறை ஜனவரி வரை நீடிப்பு! Reviewed by Irumbu Thirai News on December 03, 2021 Rating: 5

பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது!

December 02, 2021

பாடசாலையில் உளவியல் தொடர்பான கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் ஒருவரும் இன்னும் மூன்று பேரும் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைது செய்யப்பட்ட சம்பவம் பதுளை, ஹாலி எல பிரதேச பாடசாலை ஒன்றில் நிகழ்ந்துள்ளது. 
 
ஏனைய 03 பேரும் குறித்த உளவள ஆலோசகரின் மெய்ப்பாதுகாவலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
கருப்பு நிற ஆடை அணிந்திருந்த இவர்கள் 

துப்பாக்கி ஒன்றை வைத்திருந்ததாக நேற்றைய தினம் (2) போலீஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததை தொடர்ந்து போலீசார் அங்கு விரைந்தனர். 
 
பின்னர் போலீசார் மேற்கொண்ட விசாரணையின் போது, குறித்த நிகழ்விற்கு வலயக்கல்வி காரியாலயத்தினதோ மாகாண கல்வி காரியாலயத்தினதோ அனுமதி பெறப்பட்டிருக்கவில்லை. மேலும் குறித்த உளவள ஆலோசகர் 

இந்தத் துறை தொடர்பில் உரிய தகைமை இல்லாதவர். இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு எந்த ஒரு நிறுவனத்திலும் பதிவு செய்யப்படாதவர் என தெரியவந்துள்ளது. குறித்த நபர்களிடமிருந்து துப்பாக்கியும் 129 தோட்டாக்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! பாடசாலையில் கருத்தரங்கு நடத்திய உளவள ஆலோசகர் உட்பட நால்வர் துப்பாக்கி தோட்டாக்களுடன் கைது! Reviewed by Irumbu Thirai News on December 02, 2021 Rating: 5

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார்

December 01, 2021
 

தன்னை இனிமேல் யாரும் தல என்று அழைக்க வேண்டாம் என தென்னிந்திய நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார். 
 
இன்றைய தினம் அறிக்கை ஒன்றை வெளியிட்டே அவர் இவ்வாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். 
 
என்னை அஜித் என்றோ அஜித்குமார் என்றோ அல்லது AK என்றோ அழைப்பதையே நான் விரும்புகிறேன். மாறாக தல என்றோ அல்லது வேறு அடைமொழிகளை கொண்டோ அழைப்பதை விரும்பவில்லை. உங்கள் அனைவருக்கும் நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, வெற்றி, மன அமைதி மற்றும் மனநிறைவு நிறைந்த ஒரு அழகான வாழ்க்கையை நான் மனதார வாழ்த்துகிறேன். 
 
என்று அவர் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

2001 இல் 'தீனா (Dheena)' என்ற திரைப்படம் வெளியானதிலிருந்து அஜித் குமாருக்கு 

தல என்ற அடைமொழி மிகப் பிரபலமடைந்தது. அன்றிலிருந்து இன்றுவரை அஜித்குமாருக்கு இந்த அடைமொழி பயன்படுத்தப்பட்டு வருகிறது. 
 
நடிகர் விஜய்யை தளபதி என்றும் அஜீத் குமாரை தல என்றும் அவரவர் ரசிகர்கள் கொண்டாடி வருவது வழமை. அடிக்கடி இந்த இரு தரப்பினரும் சமூக வலைதளங்களில் கருத்து மோதலில் ஈடுபடுவதும் வழமை. 
 
வலிமை என்ற படத்தில் தற்போது நடித்து வரும் நிலையிலேயே அஜித்குமாரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் என்னை இனிமேல் "தல" என்று அழைக்க வேண்டாம்: - நடிகர் அஜித்குமார் Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு!

December 01, 2021

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் (Facilities Fees) தொடர்பில் குற்றச்சாட்டு ஒன்றை இலங்கை ஆசிரியர் சங்கம் முன்வைத்துள்ளது. 

அதாவது நீண்டகாலமாக பாடசாலைகள் மூடப்பட்டிருந்தாலும்


முழு வருடத்துக்குமான வசதிகள் சேவை கட்டணம் அறவிடப்படுவதாக அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.  

இந்த நிலைமை காரணமாக பெற்றோர் பல்வேறு அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். எனவே கடந்த வருடம் மற்றும் இந்த வருடத்திற்கான வசதிகள் சேவை கட்டணம் அறவிடுவதை நிறுத்த கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு! பாடசாலைகளில் அறவிடப்படும் வசதிகள் சேவை கட்டணம் தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு! Reviewed by Irumbu Thirai News on December 01, 2021 Rating: 5

புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

November 29, 2021

இலங்கை பரீட்சைகள் திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய சனத் பூஜித்த ஓய்வு பெற்றதை தொடர்ந்து புதிய பரீட்சைகள் ஆணையாளராக நியமிக்கப்பட்ட எல்.எம்.டி. தர்மசேன என்பவர் இன்று முதல் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். 
 
கொழும்பு மகாநாம மற்றும் ஆனந்த கல்லூரிகளின் அதிபராகவும் 

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தின் முன்னாள் தலைவரும் கடமையாற்றிய தர்மசேன கல்வியமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்! புதிய பரீட்சைகள் ஆணையாளர் கடமைகளைப் பொறுப்பேற்றார்! Reviewed by Irumbu Thirai News on November 29, 2021 Rating: 5
Powered by Blogger.